Monday, February 6, 2012

பொதிகை மலை - அகத்தியர் 4

ஓம் குரு போகர் சரணாய நமஸ்து 
ஓம் குரு போகர் பாத கமலா சரணாய நமஸ்து 
ஓம் சர்வம் குரு போகர் சரணம் 
-------------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றி
ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி
--------------------------------------------------

அடுத்த நாள் , வழக்கம் போல நான் எல்லாருக்கும் அப்பறம் late ஆதான் எந்திரிச்சேன் , கூட வந்த நண்பர்கள் என்ன ரெடி பண்ணி கூட்டிட்டு போறதுக்கே , மணி 7 ஆகிடிச்சு .

இந்த முறை மலை ஏறுவது என்பது துடக்கம் முதலே கொஞ்சம் கஷ்டமா தான் இருந்தது , நல்ல அடர்ந்த காடு , அங்க அங்க நிறைய மரங்கள் உடஞ்சி பாதைல குறுக்க விழுந்து இருந்துது , எல்லாத்தையும் எகிறி குதிச்சிதான் போகணும் , இல்லனா கீழ குனிஞ்சி போகணும் , நல்ல ஏத்தம் ஒவ்வொரு முறையும் இரண்டு அடி உயரம் எடுத்து வெச்சி போகணும் வழியும் ரொம்ப ஈர பதமா இருக்கு , ஈர பதம் இருக்கிற இடத்துல அட்டைகளும் அதிகமாதான் இருக்கும் , நம்ம கிருஷ்ணன் சாமி சுண்ணாம்பு எடுத்துட்டு போங்கனு சொன்னது இப்பதான் ஞாபகம் வந்தது , ஆனா ரொம்ப late அது , என்ன பண்றது எல்லாம் அகத்தியர் பாத்துக்குவாருனு ஏற ஆரம்பிச்சோம் , கொஞ்சநேரத்துக்கு எல்லாம் பாதையே சுத்தமா இல்ல , பெரிய பெரிய பாறைங்க தான் இருக்கு அது மேல தாவி தாவி தான் போகணும் . சுத்தி மூங்கில் , புள் ஒரு சில மரங்கள் அடர்ந்து இருக்கு அங்க அங்க யானை வந்துட்டு போன அடையாளம் வேற.

ஒரு அறை மணி நேரம் இருக்கும் கூட வந்த நண்பர்கள் வேகமா முன்னாடி போய்டாங்க , எனக்கு பயங்கர இருமல் வேற , இரும்பி இரும்பி தலை வலி பிணி எடுக்க ஆரம்பிச்சிடிச்சு , மேல் மூச்சு வேற பயங்கரமா இருந்துது , தனியாதான் ஏறிகிட்டு இருந்தேன் , அப்படி இப்படின்னு ஏறி பொங்கல் பாறைங்கற இடத்துக்கு போறதுக்கு சுமார் 1 .30 மணி நேரம் ஆகிடிச்சு , இங்கதான் கடைசியா தண்ணி நல்லா கிடைக்கும் , சிலர் குளிக்றாங்க பொங்கல் செய்து மேல அகத்தியர் சாமிக்கு படைக்றவங்க இங்க பொங்கல் பொங்கறாங்க , நாங்க அதிரமலைல இருந்த அன்னைக்கு எங்களுக்கும் பொங்கல் நிறைய கிடைச்சது , பஞ்சாமிர்தமும் கூட கிடைச்சது , அந்த தண்ணியோட சுவையோ என்னவோ அவ்ளோ அற்புதமா இருந்துது .

அபூர்வ மரத்துல இதுவும் ஒன்னு

ஏறும் வழி  !!!!!
ஈரப்பதம் நிறைந்த வழிக்கு ஒரு சின்ன உதாரணம் 

பொங்கல் பாறைல இருக்கிற ஒரு விநாயகர்
பொங்கல் பாறை

 இந்த இடத்துல இருந்து ஏறுவது என்பது மிக மிக சிரமமாதான் இருந்துதது , மொட்டை மலைகள் , அடர்ந்த சதுப்பு நிலம் போன்ற காடுகள் , நிறையவே கஷ்டபட்டுடோம் , கயிறு , கம்பின்னு தான் பிடிசிகிட்டு ஏற முடியும் , நாலுகால் பாய்ச்சல் தான் இந்த இடத்துல சாத்தியம் , போட்டோ பாத்தீங்கன்னா புரியும்னு
 நினைக்றேன் .

இவ்ளோ கஷ்டப்பட்டு ஏறி மேல போனா கிடைக்கும் பாருங்க ஒரு நிம்மதி , அப்பாடா , அகத்தியர நேர்ல பாக்கும் போது எல்லாம் எல்லாமும் மறந்து போய்டுது , ஏன் சந்தோஷம் கூட இல்ல அங்க , அப்படியே மேகத்துக்குள்ள இருப்போம் , அப்படி ஒரு chillness . மனச தனியா அடக்கனும்னு அங்க தேவை படவே இல்ல , blankness , ஒன்றும் இல்லா தன்மை , அதுகூட சொல்ல முடியாது , அது ஒரு விதமான நிலை இல்லாத நிலைன்னு தான் சொல்லணும் போல , போய் அனுபவிச்சு பாருங்க புரியவரும் , ரொம்ப நேரம் அப்படியே இருந்துட்டு , அங்க அபிஷேகம் பண்ண வந்த மத்த குழுவில இருந்த நண்பர்கள் கிட்ட நாங்க எடுத்துட்டு போன பன்னீர குடுத்தோம் , ஆச்சரியம் நீங்களே பண்ணுங்கனு சொன்னாங்க , உடனே கைல இருந்த விபூதிய அவரோட சிரசுல வெச்சு  அப்படியே கைல பன்னீர எடுத்து ஊத்தும் போது இருக்கே ஒரு உணர்வு , இதுக்காகவே இன்னொரு முறை போகணும்னு தோணுது , அவ்ளோ ஒரு pleasure , amazing and unrevealed  feeling , அனுபவிச்சா மட்டுமே உணர முடியும் , நம்ம கூட வந்த சிவாவுக்கு இன்னும் பெரிய பாக்கியம் சந்தன அபிஷேகம் பண்ணாரு . 
அபிஷேகம் எல்லாம் முடிச்சு தெரிஞ்ச அளவுக்கு அவரோட உடம்பு முழுக்க சந்தனம் பூசி ஆரத்தி காமிக்க போனாங்க , குங்குமம் மிஸ்ஸிங் , அதையும் கேட்டு வாங்கி நானே அவருக்கு போட்டு வைக்கும் போது அப்படியே உடம்புல ஒரு அதிர்வு , wow  கூட சொல்ல முடியல அந்த உணர்வுக்கு , கண்டிப்பா இது எல்லாருக்கும் கிடைக்குமுங்க , போய் ஒரு முறையாவது அனுபவிச்சிட்டு வாங்க , குடும்பம் , ஆபீஸ் , உலகம் , மக்கள் , பணம் , அது இது எதுவும் மனசுல இல்ல அந்த இடத்துல , அப்படியே குப்பையா இருந்த மனச பெனாயில் போட்டு கழுவி விட்டா மாதிரி இருந்துது .இதுக்கு மேல எனக்கு எப்படி நல்ல சொல்றதுன்னு தெரியல , எனக்கு தெரிஞ்ச வார்த்தைல சொல்லி இருக்கேன் அவ்ளோதான் . ஒரு குப்பைய அவருக்கு குங்குமம் வெக்க அனுமதிக்ரார்னா , அவர் எவ்ளோ பெரிய ஞானி , இந்த வார்த்தைலாம் சும்மா , நீங்களாவே புரிஞ்சிகோங்க , அவ்ளோதான் .
  
மேல அகத்தியர் ஐந்தல பொதிகை பாத்தா மாதிரி இருக்காரு , அங்க தான் அவரோட சீடர்களுக்கான வகுப்புகளை எடுத்ததாம் , நமது நண்பர் ஒருவர் சென்று வந்து உள்ளார் , அவர்கள் அமர்ந்த ஆசனங்கள் எல்லாம் இன்றளவும் சிறிது சிதைந்த நிலையியல் அப்படியே இருக்கிறதாம் , மேலும் நாக பொதிகை இன்றளவும் யாரும் செல்ல முடியாதாகவே இருக்கிறது .
 
அப்படியே அதே உணர்வோடயே கீழ வந்தோம் . திரும்ப அதிரமலை , அங்க இரவு தங்கிட்டு , காலைல கீழ இறங்கி வந்தோம் .

ஹ்ம்ம்ம் திரும்ப எப்போ அந்த நிலைக்கு போகப்போறோம் , அப்படியே நினச்சு பாக்கும் போதெல்லாம் உடம்பு கூட மறந்து போய்டுது .

முடிஞ்சவங்க போய்ட்டு அனுபவிச்சிட்டு வாங்க , இந்த மலைக்கு போய் சித்தர்கள் என்ன பண்றாங்க , ஊருக்குள்ளயே எல்லாம் இருக்கு , எல்லாத்துக்கும் மனசு தான் காரணம் , நான் ஊருக்குள்ள இருந்தே எல்லாத்தையும் பண்ணுவேன் அப்படி இப்படின்னு சொல்ல்றவங்களுக்கு எல்லாம் அங்க போயிட்டு வந்த பிறகு ஒரு நல்ல விடை கிடைக்கும் , விடை மட்டும் இல்ல அனுபவ பாடம் கிடைக்கும் .

கயிறு பிடிச்சுட்டு ஏறும் இடம்

அபிஷேகம் முடிஞ்ச பிறகு குரு முனி 


ஐந்தலப்பொதிகை






இதுக்கு மேல என்ன வேணும் , இது வெறும் சிலைன்னு நினைக்றீங்களா , நினைக்கதான் முடியுமா ?


பாத்துகிட்டே இருக்கலாம் 



நாலுகால் பாய்ச்சல்
இந்த போட்டோவ மட்டும் கொஞ்சம் ஜூம் பண்ணி பாருங்க எத்தனை சித்தர்கள் அங்க இருந்தாங்கன்னு தெரியவரும் மத்த போட்டோளையும்  பக்கத்துல ஊதுபத்தி எறிஞ்சிட்டு இருந்துது , ஆனா அதுல எந்த புகையும் சூழல , ஆனா இத எடுக்கும் போது முழுக்க புகை அதில பல காட்சிகள் சாட்சிகளாக .

 ஓம் குரு போகர் சரணாய நமஸ்து 
ஓம் குரு போகர் பாத கமலா சரணாய நமஸ்து 
ஓம் சர்வம் குரு போகர் சரணம் 
-------------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றி

ஓம் போக மகரிஷியே போற்றி

ஓம் போக முதல் சித்தரே போற்றி

ஓம் போக ஞான குருவே போற்றி
--------------------------------------------------



12 comments:

  1. தங்கள் அனுபவித்ததை அப்படியே பகிர்ந்துகொண்டது சிறப்பாக இருந்தது. தங்கள் பார்வையில் நாங்களே அகத்தீசரை தரிசித்ததுபோல இருக்கிறது.

    பகிர்வுக்கு மிக்க நன்றி..

    http://anubhudhi.blogspot.in/

    ReplyDelete
  2. Pls remove word verification in comments section. This will help giving the comments freely.

    Thanks..

    ReplyDelete
  3. anna...i need some info abt..agasthiyar hils..we need any permitions frm the goverment side ?

    ReplyDelete
    Replies
    1. karthik , you must get a permission from the kerala govt forest dept , if u need any further assistance pls tell me , in case if your looking for a companion one of my known person going to pothigai next month along with group of 11 members , you may be can join with them.

      Delete
  4. Very good blog... I need more details on this.. pls email you phone number to my email id ambasoft@gmail.com.

    ReplyDelete
  5. Very nice blog... I need more details on this.. pls email you phone number to my email id namguna@gmail.com

    ReplyDelete
  6. Very nice ... I need more details on this.. pls email you phone number to my email id arivhedeivam@gmail.com

    ReplyDelete
  7. Namaste ji.

    Is there some one with whom I can join the pilgrimage to Sacred Podhigai Malai.

    I live in chennai. My id is tsrajanganesh@yahoo.com

    ReplyDelete
  8. Namste Ji.

    I live in chennai and is intrested in making pilgrimage to sacred temples/hill temples. Please let me know if i can join you.

    My id is tsrajanganesh@yahoo.com

    ReplyDelete
  9. நானும், தங்களுடன் பயணித்தது போல ஒரு உணர்வு. மிக்க நன்றி.

    ReplyDelete