Sunday, May 27, 2012

யாத்திரை - பர்வதமலை - 3


ஓம் குரு போகர் சரணாய நமஸ்து
ஓம் குரு போகர் பாத கமலா சரணாய நமஸ்து
ஓம் சர்வம் குரு போகர் சரணம்
-------------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றி
ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி
-----------------------------------------------

சமாதி லிங்கங்களை வழிபட்டுட்டு , அப்படியே நடக்க ஆரம்பிச்சேன் , அவ்ளோ அடர்ந்த வனம் இல்லை , மரங்கள் இருந்துது ஆனா அவ்ளோ குளிர்ச்சி இல்லை , ஒத்தை அடி பாதை , கரடு முரடான கற்கள் என்று வெறும் காலில் நடப்பது என்பது சற்று சிரமமான ஒண்ணா தான் இருந்துச்சு , ஆனா கிரிவலம் போறா மாதிரி இல்லை , அங்க நாம நடக்கும் போது , ஒரு பத்து நிமிஷத்துக்கு ஒருத்தரையாவது பாக்கலாம் , இங்க அப்படி இல்லை , துப்புரவா யாருமே இல்லை , நம்ம திரு . நாயார் இருந்தா கூட தேவலாம் போல இருந்துது , நடக்க நடக்க நல்ல வியர்வை வர ஆரம்பிச்சது , சட்டைய கழட்டி தோள்ள போட்டுகிட்டு நடக்க ஆரம்பிச்சேன் , வீரபத்திரன் கோயில் பூசாரி சொன்னா மாதிரி ஒரு இடத்துல மொட்டை பெரிய சைஸ் பாறை இருந்துது , பக்கதுலையே கொஞ்சம் போல ஊற்று மாதிரி தண்ணி வந்துட்டு இருந்துது , தண்ணி பட்டு பட்டு பாறையும் கொஞ்சம் போல சில்லுனு இருந்துது , மலை ஏற்றது முதல் அனுபவம் , அதுவும் இல்லாம தனியா காட்டுக்குள்ள போறது கொஞ்சம் த்ரில்லா இருந்துது , ஆனா கொஞ்சம் பயமாவும் இருந்துது , சரி கொஞ்சம் படுப்போம்னு படுத்துட்டு , பிறகு அவர் சொன்ன குழிகள தேடினேன் , அங்க அங்க இருந்துது , எல்லாமே கொஞ்சம் பச்சை கலரா இருந்துது , அது மூலிகையா இல்லை பாசியானு தெரியல , இருந்தாலும் கொஞ்சம் போல உறிஞ்சி குடிச்சிட்டேன் , மலைங்க , காடுகள் இங்க எல்லாம் போனா இத மாதிரி தண்ணிய மிருகங்க குடிக்கறது போல நேரா குடிச்சோம்னாஅதுவே ஒரு தனி சுகமாதான் இருக்கும் , சமீபத்துல பொதிகை மலை போனப்ப கூட இத மாதிரி குடிச்சி குதூகலமா இருந்தோம் நானும் நம்ம சிவாவும் .

ஒரு பத்து , பதினஞ்சி நிமிஷம் கழிச்சி , அங்க இருந்து திரும்பவும் மேல ஏற ஆரம்பிச்சேன் , இதுக்கு மேல ஏற்றது கொஞ்சம் சிரமமாதான் இருந்தது , இருந்தாலும் , பெரியவர் குடுத்த ஊக்கம் , சொன்ன இடங்கள் பாக்க ஆவலா இருந்ததால , மூச்ச புடிச்சி கிட்டு மேல ஏற ஆரம்பிச்சேன் , சீக்கிரமே வந்துடிச்சு முக்கூடல் , அங்க நின்னு மலைய பாத்து ஒரு கும்பிடு போட்டுட்டு அப்படியே திரும்பவும் அந்த நேட்டான பாதைல ஏற ஆரம்பிச்சேன் , அப்படி இப்படின்னு அசைஞ்சி , ஒரு வழியா கடப்பாரை நெட்டு ஆரம்பிக்கிற இடத்துக்கு வந்தாச்சு , வாழ்க்கைல முதல் தடவையா கடப்பாரை எல்லாம் புடிச்சிட்டு ஒரு சாகசமான பயணம் பண்ணபோரோம்னு , சுறுசுறுப்பாஆகிட்டேன் .

இங்க ஒரு சின்ன விஷயம் , இந்த முதல் பயணத்துக்கும் அடுத்து அடுத்து போனதுக்கும் , கொஞ்சம் வித்யாசம் இருந்தது , ஏன்னா இங்க இருந்த கடப்பாரை எல்லாம் முதல் முறையும் அடுத்து சென்ற ஒரு நான்கைந்து முறையும் தான் கடப்பாரை முனைல வேல் மாதிரி இருந்தது , அதுக்கு அப்பறம் போன பயணங்கள்ள , பக்த்தர்கள் எல்லாம் சேந்து இன்னும் நிறைய கடப்பாரைகளையும் , சங்கிலிகளையும் போட்டு இருந்தாங்க , அதே மாதிரி தண்டவாள படில எல்லாம் முதல்ல தண்டவாளம் மாதிரியான அமைப்பு மட்டும் தான் இருந்தது , ஏணி படினா , ஏணி மட்டும்தான் இருந்தது , அதுல ஏற்றது என்பது த்ரில்லாவும் இருந்தது , கொஞ்சம் ரிஸ்க்கும் கூட , அதுக்கு அடுத்த அடுத்த பயணங்களில் கொஞ்சம் மாற்றங்கல் இருந்தது , அது பாதுகாப்புதான் , இருந்தாலும் சாகச பயணம் , அப்படி இப்படின்னு என்ன மாதிரி சுத்த வர கோஷ்ட்டிகளுக்கு மிஸ் பண்ண மாதிரிதான் .

சரி கடப்பாரை நெட்டுக்கு வருவோம் , கடப்பாரை எல்லாம் முதல்ல பிடிக்கும் போது கொஞ்சம் பக்கத்துல பக்கத்துல இருந்துது , ஒரு நாலு அஞ்சு தாண்டின பிறகு எல்லாம் எட்டி பிடிக்கிறா மாதிரிதான் இருந்துது எட்டி கூட பிடிச்சிடலாம் போல மேல கால் வைக்க சின்ன குழி இல்லனா ஒரு க்றிப் கூட இல்லை , என்னடா இது சாகசமா நினச்சு வந்தா இப்படி நடு வழில மாட்டிகிட்டோமேனு ரொம்ப பொறுமையா க்றிப் கிடைக்கிற இடமா பாத்து பாத்து பிடிச்சி ஏர்றதுக்கு தடுமாற்றமா தான் இருந்தது , ஹ்ம்ம் ஏறியாச்சு ஒருவழியா , அடுத்து ஏணி , நல்லா துரு பிடிச்சி கொஞ்சம் அழுத்தி கால் வெச்சா உடைஞ்சிடும் போல இருந்துது , ஆனா கால் வெச்சி ஏறும் போது தான் தெரிஞ்சிது அது எவ்ளோ ஒரு உறுதியான இரும்புனு , ரொம்ப எடை அதிகமாவும் இருக்கும் போல , எந்த புண்ணியவான் தூக்கிட்டு வந்து வெச்சாருன்னு தெரியல , நம்ம ஏர்றதுக்கு பயன்படுது . கொஞ்சம் கொஞ்சமா மேல ஏறி போனோம்னா அதுக்கு மேல இருக்குற பாதை எல்லாம் ரொம்ப பாத்துதான் போகணும் கொஞ்சம் வழி தெரியாம முன்னேறினாலும் அதல பாதாளம் தான் .

தீட்டு காரி மண்டபம் , ஒரு சின்ன தண்டவாள படிய தாண்டினோம்னா வருது , பொதுவா அந்த மண்டபம் பத்தி சொல்றது என்னன்னா , மலைக்கு ஏறி வர பெண்கள் மாத விளக்கு ஆகின்ற நேரத்துல இங்க தங்கிக்கலாம்னு சொல்லுவாங்க , ஆனா இடம் பாத்தா வேற சில கோணத்துல யோசிக்க தோணும் , மாநன்னன் ஆண்ட காலத்துல இது வீரர்கள் , உளவு நோட்டமிடுபவர்கள் , அவர்களுக்கு சமையல் செய்றவங்க தங்கிற இடமா இருந்திருக்கலாம் , ஏன்னா இதுக்கு பக்கத்துல தான் பாதாள கிணறும் பாப்பாத்தி சுனைக்கு போற வழியும் இருக்கு , இந்த பாப்பாத்தி தெயவத்த பத்தி சொல்லாம விட்டுட்டனே .

அதாவது , பழங்காலத்துல ஒரு ஆச்சாரமான பிராமண தம்பதியர் திருவண்ணாமலைய்க்கு வந்தப்போ , பர்வதமலை பத்தி கேள்வி பட்டு இங்க வந்து இருக்காங்க , இப்பவே இப்படி இருக்கு ( நான் சொல்ற இப்பங்க்றது தொண்ணூறாம் வருஷம் ) அப்போ அதாவது ஒரு ஆயிரம் வருஷத்துக்கு முன்ன எப்படி இருந்து இருக்கும் , ரொம்ப கஷ்டப்பட்டு ஏறி தரிசனம் பாத்துட்டு வரும் போது அந்த பிராமண பெண்ணோட கணவர் தவறி விழுந்துட்டு இருக்காரு , உயிர் பிரிஞ்சிடிச்சு , அந்த பெண் ரொம்ப ஆச்சாரமான குடும்பத்துல இருந்து வந்ததால சாவித்திரி போல சாமி கிட்ட சண்டையே போட ஆரம்பிச்சிட்டாங்களாம் , உன்னை பாக்க வந்து தான இப்படி ஆச்சு , ஒன்னு என்னோட பதிய உயிரோட திரும்ப குடு , இல்லைனா என்னையும் இங்கியே சாக அடிச்சிடுனு பெரிய வைராக்கியத்தோட கேட்டாங்கலாம் , சாமி கிட்ட இருந்து எந்த பதிலும் காணோம் , சரி இங்கியே உன்னோட இடத்திலையே என்னோட உசுரும் போகட்டும்னு கீழ குதிச்சிட்டாங்கலாம் , இத மாதிரி ஒரு கற்புக்கரசிய சாமி சும்மா விடுமா , இல்லை அத மாதிரி ஒரு பெண்ணோட சாபம்தான் சாமியையே ஆட்டி வெச்சிடாதா , சாமியும் , இறங்கி வந்து அவங்கள விழுந்த இடத்துல இருந்து உயிர் பித்து சொன்னாங்களாம் , " உன்னோட கணவரின் புண்ணிய பலம் தான் இங்க வந்து அவர் உயிர் பிரிய காரணம் , இங்க உயிர் பிரிஞ்ச தாள , அவருக்கும் மோட்சம் என்கின்ற பிறவா நிலை கிடச்சிடிச்சி , இதுல நீ துக்கமோ துயரமோ பட எதுவும் இல்லை , ஒரு பதிவிரதை கணவன் மோட்சம் அடையறதுக்கு பாடுபடுவது கூட அவளின் முக்கிய கடமைல ஒண்ணுதான் , அதனால நீ கலங்கி புலம்ப எதுவுமே இல்லை , உன்னுடைய விதியும் இங்க வந்துதான் எல்லா யோக முறையும் கற்று தேர்ந்து பிறவா நிலை அடையணும்னு இருக்கு , இங்கு இருக்கும் சித்த புருஷர்கள் உனக்கு எல்லாவற்றையும் கற்று கொடுத்து , உன்னை நன்னிலை அடைய வைப்பாங்க , அதுவரை நீ உன்னுடைய கணவரயும் சூட்சுமமா உணரலாம் " அப்படின்னு சொல்லி அருள் புரிஞ்சாங்கலம் அந்த பிரம்மராம்பிகை தாய் . அவங்களும் சித்த பெருமான்கள் கிட்ட முறையா எல்லாம் தெரிஞ்சிகிட்டாங்கலாம் , அதே மாதிரி பதினெட்டு சித்தருக்கும் அங்க லிங்க வடிவுல சிலை வெச்சி வழி பட்டாங்களாம் , கொஞ்சம் சமயோஜிதமா யோசிச்சி கொஞ்சம் பதிய உத்து பாத்து போனோம்னா அத நம்மளும் பாக்கலாம் , பொதுவா யாரும் இந்த விஷயம் தெரியாததால அந்த இடத்துல இத கவனிக்கறது இல்லை , அந்த அம்மா அங்கையே தங்கி இருந்ததால அந்த சுனைக்கும் அந்த இடத்துக்கும் , பாப்பாத்தி சுனைன்னு பேரு , அதுவும் இல்லாம அவ்ளோ கரடு முரடான இடத்துல கூட , என்னதான் வெய்யில் அடிச்சாலும் அந்த ஒரு இடம் மட்டும் அவ்ளோ ஒரு இதமா அமைதியா இருக்கும் , பல பேர் அத நல்லா உணர்ந்து இருப்பாங்க , ஆனா மேட்டர் தெரியாம இருந்து இருக்கும் . மலைல எங்க தண்ணி இல்லாம இருந்தாலும் இங்க கண்டிப்பா இருக்கும் .

அந்த பாதாள கிணறு , பேரு வெச்சாலும் வெச்சாங்க இப்படியா , பயங்கர ஆழம் , அனேகமா இதுவும் நன்னன் காலத்தியதாதான் இருக்கும் , இந்த காலத்துல அதுவும் அந்த இடத்துல கிணறு தோன்றது ரொம்ப கஷ்டம் , இதுலயும் ஒரு விஷயம் இருக்கு , கிணத்துக்குள்ள கீழ இறங்கினோம்னா , ஒரு சுரங்க வழி இருகரதாகவும் அதுக்குள்ள போனோம்னா பலவிதமான மலர்கள் , மூலிகைகள் , மரங்கள் , பழங்கள் கொண்ட பெரிய தோட்டமும் , அங்க சித்த புருஷர்கள் சாதனைல இருகர்தாகவும் கேள்வி பட்டு இருக்கேன் , ஒரு முறை நிறைய டூல்ஸ் , கயிறு எல்லாம் எடுத்துட்டு போய் , நண்பர்கள் ஒரு பத்து பேர் போய் இறங்கி பாத்தோம் , ஒரு குறிப்பிட்ட தூரத்துக்கு மேல போக முடியல , கொஞ்சம் பயமும் காரணம் .

சரி நம்ம இதுக்கு மேல சந்நிதானத்துக்கு போவோம் . ஆகாய பாதை ரொம்பவே திகிலான இடம் தான் இது இடது பக்கம் கொஞ்சம் திரும்பி பாத்தாலும் ஒரு அடி எடுத்து வைக்க தோணாது , முழுக்க முழுக்க பள்ளம் , கொஞ்சம் கால் இடறினாலும் அவ்ளோதான் சீன் ஆய்டுவோம் , அதுவும் அப்போ சுத்தமா ஒரு சங்கிலியோ , இல்லை ஒரு சப்போர்ட்டோ இருக்காது , வலது பக்கம் இருக்குற பாறைய பிடிச்சிகிட்டு தான் மெல்ல நகர்ந்து போக முடியும் , இப்ப எவ்ளோவோ தேவலாம் ( நான் கடைசியா இங்க போனது இரண்டாயிரத்துல , இப்ப எப்படி இருக்குனு தெரியல ரொம்பவே மாறிட்டதா கேள்வி பட்டேன்) , அந்த கொஞ்ச தூரத்த கடக்கும் பாடு இருக்கே அப்பா சொல்லி மாளாது , இத தாண்டிட்டோம்னா , அப்பா....... மலை உச்சி , சும்மா நச்சுனு இருக்கும் , முதல்ல ஒரு குட்டி மலை மேடு அத தாண்டினா சந்நிதானம்.







KADAPARAI NETTU ( 1995 )


அடுத்த பதிவுல சந்நிதானம் , கோமண சாமியார் , அம்மாவோட அழகு எல்லாம் பாக்கலாம் .


ஓம் குரு போகர் சரணாய நமஸ்து
ஓம் குரு போகர் பாத கமலா சரணாய நமஸ்து
ஓம் சர்வம் குரு போகர் சரணம்
-------------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றி
ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி
-----------------------------------------------

யாத்திரை - பர்வத மலை - 2


ஓம் குரு போகர் சரணாய நமஸ்து
ஓம் குரு போகர் பாத கமலா சரணாய நமஸ்து
ஓம் சர்வம் குரு போகர் சரணம்
-------------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றி
ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி
-----------------------------------------------

கொஞ்சம் சுதாரிச்சி , கொஞ்சம் பின்வாங்கி பாத்தா பச்சை கலர் துண்டு , வேட்டியோட ஒரு ஆளு , நல்ல கம்பீரமான குரலோட ஆனா கொஞ்சம் கனிவோட , " யாருப்பா அது , என்னவேணும் " கேட்ட பிறகுதான் , பயமே போச்சு , அப்பறம் பேச பேச தான் தெரிஞ்சிது அவர்தான் அந்த கோயில் பூசாரினு , நிறைய விஷயம் சொன்னாரு , இந்த பச்சை அம்மனும் , ஐயனாரும் தான் இங்க காவல் தெய்வங்க , ஊருல எல்லாரும் எல்லா விசேஷத்துக்கும் இங்கவந்து தான் எல்லாம் பண்ணுவாங்க , ரொம்ப சக்தி வாய்ந்த சாமிங்க , ராத்திரி ஆன இங்க உலவ ஆரம்பிச்சிடுவாங்க , எதாவது தப்பு தண்டா பண்ணா அவ்ளோதான் , இதுக்கு அப்பறம் கொஞ்ச தூரம் உள்ள போனா அங்க வீர பத்திரன் கோயில் ஒன்னு இருக்கு , அது இன்னும் உக்கிரமான சாமி , மலைக்கு உண்மைய கும்பிட வரவங்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியும் கூட , வேணும்னா அங்க போய் கும்பிட்டுட்டு இங்க திரும்ப வந்து இரவு தங்கிட்டு அதிகாலைல கிளம்புங்க , இப்ப கைல டார்ச் லைட் கூட இல்லாம ஏறது சிரமமான காரியம்னு சொன்னாரு , நான் அவர் கிட்ட , ஐயா இப்ப இங்க இருந்து அந்த வீரபத்திரன் கோயிலுக்கு போறதே , பெரிய விஷயமா இருக்கும் போல , நான் இங்கியே தங்கிட்டு காலைல கிளம்பறேன் , நல்ல பசிக்கிது , எதாவது கிடைக்குமான்னு கேட்டேன் , சரி கொஞ்ச நேரம் படுங்க , இப்ப வரேன்னு போயிட்டு ஒரு , ஒரு மணி நேரம் கழிச்சி சுட கஞ்சியோட வந்து குடுத்தாரு , காலைல இருந்து சாப்பிடாம இருந்ததுக்கும் அதுக்கும் , அப்பா சும்மா சூப்பரா இருந்துது கஞ்சி , நல்ல கட்டு கட்டிட்டு , வெளில இருந்த யானை சிலைக்கு பக்கத்துல போர்வைய விரிச்சு படுத்ததுதான் தெரியும் , காலைல சூரியன் முகத்துல அடிக்கும் போது தான் முழிப்பே வந்துது , அப்படி ஒரு தூக்கம் , அப்படி ஒரு சுறுசுறுப்பு காலைல எந்திரிக்கும் போது , எந்திரிச்சு பாத்தா பக்கத்துல பூசாரிய காணோம் . என்னடா இது திரும்ப பீதிய கிளப்ராறேனு சுத்தி முத்தி பாத்தா , கோயிலுக்கு உள்ள பூசைல இருந்தாபோல , நான் எந்திரிச்சி வரர்த பாத்துட்டு , தம்பி அப்படியே இரு வரேன்னு சொல்லிட்டு வெளிய வந்து குளத்துக்கு கூட்டிட்டு போனா போல , நல்ல சூப்பர் குளியல் , குளிச்சிட்டு வந்த பிறகு , பச்சையம்மன் கோயில்ல சாமி கும்பிட்டிட்டு , எல்லா அய்யனாருக்கும் சூடம் ஏத்தி கும்பிட்டிட்டு அப்படியே கில சுத்தி வீரபத்திரன் கோயிலுக்கு கிளம்பினேன் , பூசாரியும் வழி அனுப்பி வெச்சாரு .

நல்ல புதர்கள் மண்டிய ஒரு சின்ன ஒத்தை அடி பாதை , கரடு முரடா இருந்துது , சுமார் ஒன்று அல்லது இரண்டு கிலோமீட்டர் போனோம்னா , வலது கை பக்கம் ஒரு பாதை பிரியும் , அந்த வழி போய் முடியற இடம் வீரபத்திரன் கோயில் , கொஞ்சம் சின்ன கோயில் தான் , ஒடஞ்சு விழறா மாதிரி இருக்கும் , இங்க எந்த பூசாரி பீதிய கிளப்ப போறார்னு நினைச்சிகிட்டே செருப்ப வெளில விட்டுட்டு உள்ள நுழைஞ்சா , கொஞ்சம் சடை பிடிச்ச தலையோட , காவி துண்டு மட்டும் கட்டிட்டு , ரொம்ப மெலிஞ்ச உடம்போட , கை எல்லாம் கொஞ்சம் கோணல் மாணலா இருந்தாரு பூசாரி , அவர் நம்மள பாத்தா உடனே , நல்லா ரொம்ப நாள் பழகனவுங்கள போல வாங்க வாங்க சாமி , என்ன மலை ஏறவானு , ரத்னா சுருக்கமா கேட்டாரு , ஆமாங்கனு சொன்னேன். வாங்க முதல்ல சாமிய கும்பிடுவோம்னு சொல்லிட்டு , ஆரத்திய காமிச்சாரு , நல்ல அருமையான சாமி , வீராவேசத்தோட இருந்தது , அத பாக்கும் போதே நமக்கு ஒரு புது தெம்பே வந்துடும் , அவ்ளோ ஒரு வீரம் அந்த சாமிகிட்ட , அதான் வீரபத்திரன்னு பேர் போல , கண்ணுல ஆரத்திய ஒத்திக்கிட்டு விழுந்து கும்பிட்டிட்டு , வெளிய வந்து ரெண்டு பேரும் உட்கார்ந்தோம் , நல்ல அமைதியான சூழல் , ஆள் அரவம் இல்லாத இடம் , ஓரளவுக்கு மனமும் அமைதியாதான் இருந்துது அங்க , கொஞ்சம் போல எனக்கும் அந்த சூழல் பிடிக்க ஆரம்பிச்சிடிச்சு , அப்படியே அவர் கிட்டயும் பேச்சு குடுக்க ஆரம்பிச்சேன் , என்னங்க எத்தன மணிக்கு எல்லாரும் மலை ஏற ஆரம்பிப்பாங்கன்னு கேட்டேன் , அவர் என்னது எல்லாரும்னா வேற யாரவது உங்க கூட வந்தாங்களானு என்ன திருப்பி கேள்வி கேட்டாரு , நான் இல்லை யாரும் வரலைன்னு சொன்னதும் , சிரிச்சிகிட்டே ஓஹோ தம்பி இதுதான் முதல் முறையா வரர்துனு கேட்டுட்டு , இந்த ஒருவாரத்துல நீங்க தான் முதல் ஆளு இந்த வரர்து , போன வாரம் பௌர்ணமிக்கு நம்ம வேலூர் வைத்தியர் வந்துட்டு போனது அவ்ளோதான் அதுக்கு அப்பறம் யாரும் வரல , அதனால ஒன்னும் பயப்படாதீங்க , இங்க மாசத்துக்கு பத்து பேர் வந்தா பெரிய விஷயம் , வழி எல்லாம் சுலபமாதான் தெரியும் தைரியமா போலாம் , மிருக பயம் அவ்வளவா இல்லை சூரியன் இருக்கற அப்போ எதுவும் பாதைல வராது தைரியமா போய்ட்டுவாங்கனு சொன்னாரு , எனக்கும் அப்போ மிருகத்த பத்தி எல்லாம் ஒன்னும் பெருசா பயம் இல்லை , ஏன்னா நேரடி அனுபவம் எதுவும் இல்லை , எனக்கு தெரிஞ்ச ஒரே மிருகம் திரு . நாயார் அவர்கள் மட்டுமே , வழி நிறைய கல்லு இருக்கு , வழில போறதுக்கு நமக்கு என்ன பயம்னு , அவர் கிட்ட அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை , வேற என்ன பாத்து போகணும்னு கேட்டேன் .

அவரும் விளக்க ஆரம்பிச்சாரு , "அப்படியே ஏற ஆரம்பிசீங்கன்னா , வழில உரல் பாறைன்னு ஒன்னு வரும் , கொஞ்சம் பெரிய மொட்டை பாறை அது , சின்ன சின்ன குழிகள் இருக்கும் , அது சித்தர் சாமிகள் மருந்து அரைக்கிற இடம் , இப்ப மழை பெய்து இருக்கறதால அதுல எல்லாம் அனேகமா தண்ணி தேங்கி இருக்கும் , இருந்தா நமஷிவாயனு சொல்லிட்டு கொஞ்சம் போல எடுத்து குடிங்க , உடம்புக்கு நல்ல தெம்பு வரும் , அங்க இருந்து கட கடனு ஏறிடலாம் மேல , கொஞ்சம் போன பிறகு இடது கை பக்கமா ஒரு பாத பிரியும் அது மலை மேல வரர்துக்கான இன்னொரு வழி , அதாவது கடலாடி வழி , அந்த பக்கம் போகாம நேரா மலை மேல ஏறுங்க அது போய் முடியற இடம் கடப்பாரை நெட்டு , அதுக்கு மேல வழி எங்கயும் பிரியாது , அப்படியே கடப்பாரை நெட்டு மேல ஏறிநீங்கன்னா அது ஒரு தண்டவாலபடில போய் முடியும் , பாத்து நிதானமா ஒருமுறைக்கு இருமுறை கவனிச்சு போங்க , சேதாரம் எதாவது கண்ணுல பட்டுதுனா போகதீங்க , கீழவிழுந்தா எலும்பு கூட தேறாது , அதுக்கு அப்பறம் தீட்டு காரி மண்டபம் , அங்க தங்கி ஆசுவாச படுத்திகிட்டு மேல போனீங்கன்ன , பாதாள கிணறும் , பாப்பாத்தி சுனையும் இருக்கும் , அது ஒரு மகா புனிதமான இடம் , அங்க அந்த பெண் தெயவத்த வணங்கி கும்பிட்டிட்டு , பாதாள கிணறுல இப்போ தண்ணி மேல இருக்கும்னு நினைக்கிறன் , தண்ணிய ஒரு முடக்கு குடிச்சிட்டு , சித்த சாமிங்கள கும்பிட்டுகுங்க , ஏன்னா இதுக்குள்ள பல பல விஷயங்கள் , பல சக்தி விஷயங்கள் இருக்கு , அதுக்கு மேல நான் சொல்லவும் மாட்டேன் , நீங்க அங்க இருந்து ஏறிபோங்க , மேல போக போக , புள்ளையார் நெட்டுன்னு ஒன்னு வரும் ரொம்ப குறுகலான பாறை , அதை தாண்டி போனீங்கன்னா , ஆகாய பாதை ரொம்ப சின்ன வழி தான் இருக்கும் , பக்கத்துல பிடிமானம் இருக்காது , கரணம் தப்பினா மரணம் தான் அங்க , அந்த பாப்பாத்தி தெய்வமே இங்க கஷ்டப்பட்டுட்டா , நீங்க பாத்து நிதானமா தான் போகணும் , அத தாண்டிட்டா மேல உச்சிக்கு போய்டலாம் , இப்ப கொஞ்ச மாசமா அங்க ஒரு துறவி இருக்காரு , அரிசி எல்லாம் பொங்கி சாப்பிடலாம் , சாப்பாட்டுக்கு பஞ்சம் இல்லை , கொஞ்சம் அப்படி ஏறி இறங்கிநீங்கன்னா கோயில் வந்துடும் , அங்க எல்லாம் ஏகாந்தம் தான் , போய் அனுபவிச்சிட்டு வந்து சொல்லுங்கன்னு " , சொல்லி ஒரு பெரிய விஷயத்த ரொம்ப சாதாரணமா சொன்னாரு . எனக்கு கேக்கும் போது நல்லா தான் இருந்துது , ஏன்னா இதுக்கு முன்ன இத மாதிரி த்ரில்லிங் அனுபவம் எல்லாம் இல்லை , அதனால நான் நல்ல உற்சாகமாவே கிளம்பினேன் , கிளம்பின என்ன கோயிலுக்கு பின்னாடி பக்கம் கூட்டிட்டு போனாரு , அங்க ஒரு சின்ன குளம் மாதிரி இருந்துது , கொஞ்சம் இந்த தண்ணிய குடிச்சிட்டு , அதோ அங்க அந்த வழியா போனீங்கன்னா அங்க ஒரு சிவலிங்கமும் , அதுக்கு அப்பறம் ஒரு பெண் தெய்வமும் இருக்கும் அதையும் சேவிசிட்டு போங்கன்னு சொல்லி திரும்பவும் வீரபத்திரன் கோயிலுக்கு உள்ள போயிட்டாரு , நான் அந்த வயசுல விவரம் தெரியாத நேரத்துல ஏதோ அதுவும் ஒரு சாமிதானணு போய்தான் கும்பிட்டேன் , பிறகு ஒரு சில வழிகாட்டுதல்கள் கிடச்ச பிறகுதான் தெரிஞ்சது அது ஒரு ஜீவசமாதி என்பது , நல்லதொரு அதீத அதிர்வலையும் அங்கு சாதாரணமா உணரலாம் , யாரவது பர்வதமலைக்கு போறவங்க படிச்சா இந்த இடத்த கண்டிப்பா மிஸ் பண்ணாதீங்க , நல்லதொரு அனுபவம் இங்க கிடைக்க வாய்ப்பு இருக்கு....



POOSARI @ VEERAPATHIRAN TEMPLE ( 1995 )

VEERAPATHIRAN TEMPLE ( 1995 )


ஓம் குரு போகர் சரணாய நமஸ்து
ஓம் குரு போகர் பாத கமலா சரணாய நமஸ்து
ஓம் சர்வம் குரு போகர் சரணம்
-------------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றி
ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி
-----------------------------------------------