Wednesday, August 18, 2010

சித்தர் பட்டினத்தார் அவர்களின் குரு யாராக இருக்கலாம் - ஒரு ஆராய்ச்சிக்கட்டுரை

சித்தர் பட்டினத்தார் அவர்களின் குரு யாராக இருக்கலாம் - ஒரு ஆராய்ச்சிக்கட்டுரை 

 -------------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றி
ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி
-------------------------------------------------------

ஓம் போகரே குருபிரம்மோ , போகரே குருவிஷ்ணு
போகரே குருதேவோ , போகரே மகேஸ்வரன்
போக குரு சாக்ஷாத் பரப்பிரமம் , தஸ்மை ஸ்ரீ போகர் குருவே நமஹா .
--------------------------------------------------------------------------------------------------


பொதுவாக சித்த மகாபுருஷர்களின் வரலாற்றை ஆராய்வதைவிட அவர்கள் நமக்கு தையை கூர்ந்து அருளிய வாழ்க்கை மற்றும்  ஞான யோக மார்கங்களை ,முழுமையாக முழு அர்ப்பணிப்புடன் பின்பற்றுவது நன்று .

அதுவே  முக்திக்கான வழியும் ஆகும் , இருப்பினும் சிறிது மாதங்களுக்கு முன்பு நண்பர் ஒருவர் கீழ்வரும் பட்டினத்தார்  பாடலை கூறி , அதற்க்கு பொருளும் கேட்டார் , எனக்கு புரியவும் இல்லை , பொருள் தெரியவும் இல்லை , அவரே முன்வந்து அந்த பாடலின் பொருளையும் சொன்னார் ( பிறகு தான் தெரிந்தது அது சரியான பொருள் அல்ல என்று ), சிறிது ஏற்றுக்கொள்ளும் படியும் இருந்தது , பிறகு அவர் சொன்ன தவ முறையும் பின்பற்றினேன் , அதுவே நான் சித்த மார்க்கத்தை நம்பவும் செய்தது , பிறகு அந்த பாடலே பட்டினத்தார் சித்தர் அவர்களின் குரு யார் என்பதையும் காட்டியது , சித்தர்களின் பாடல்களின் ஒவ்வொரு வரியுமே பலப்பல அர்த்தங்களையும் பலபல ரகசியங்கலயும் உணர்த்தும் .

அப்படி  ஒரு பாடல் பின்வருகிறது .

பட்டினத்தார்  பாடல் :

வெட்டாத சக்கரம் பேசாத மந்திரம் வேறொருவருக்கு 
எட்டாத புஷ்பம் இறையாத தீர்த்தம் இனி முடிந்து 
கட்டாத லிங்கம் கருதாத நெஞ்சம் கருத்தினுள்ளே 
முட்டாத பூசையன்றோ குருநாதன் மொழிந்ததுவே ?

இதற்க்கு நேரடியான பொருள் அறிவது என்பது வெகு வெகு சிரமம் , இதற்கான பொருளை பாடலை பாடிய பட்டினத்து அடிகளோ அல்லது அவரின் குருவோ மொழியாவிட்டால்  அல்லது அவர் குருவின் பாடலில் இதற்கான பொருள் இல்லாவிட்டால் அறிவது மிக மிக கடினம் , சரி பொருள் அவர் குருவின் பாடலில் இருக்குமென்றால் , அவர் குரு யார் , எப்படி அறிவது .
அய்யன் எம்பெருமான் முதல் சித்தர் குரு போக மகரிஷி அருளால் கிடைத்தது , ஒரு நாள் கோரக்கர் சித்தர் பாடலை படித்துக்கொண்டு இருக்கும் பொழுது மேல் சொன்ன அதே சொற்கள் கொண்ட பாடல் மற்றும் அதன் பொருளை மிக மிக தெளிவாக கோரக்க சித்த மகரிஷி அருளி இருந்தார் , தெளிந்துவிட்டது , தெரிந்துவிட்டது பட்டினத்தார் அவர்களின் குரு கோரக்க மகரிஷி என்று .

கோரக்க மகரிஷி பாடல்:

விந்து நிலை விமலைஅவள் பீடம் உச்சி 
வெட்டாத சக்கரம்தான் கோசம் கோசம்
அந்தமுடன் இறைக்காத சலமே நாதம்
அன்புடனே பேசாத மந்திரம் சேர்க்கை
சுந்தரமாய் எட்டாத புஷ்பம் வாசி
சுகமுடனே கட்டாத லிங்கம் சுக்கிலம்
பந்தமறும் பரமனைய ஆன்ம சோதி
பகர்குருவப் பூசயுட்ரா ணுவங்கள் போமே

எல்லா பட்டினத்து சித்தர் பாடல் வரிக்கும் அவரது குருவான கோரக்க சித்தர் பொருள் உறைத்து விட்டார் , பொருளும் தெள்ளதெளிவாக உள்ளது , இதில் இருந்து நாம் கற்க வேண்டியது , 
1 .
மெளனமாக சுக்கிலத்தை விரயம் செய்யாமல் வாசி மூலமாக குருவை ( குரு = இறைவன்  , அல்லது சிவன் ) பூசை ( பூரணத்துடன் முழுமையாக சஞ்சரிப்பது , இரண்டற கலப்பது )செய்யவேண்டும், செய்தால்  பத்தாம் வாசலை திறந்து அவன் காட்சியைகாணலாம்.
2 . 
சிறிது சிந்தித்தோமானால் , கோரக்க சித்தரின் ( சதுரகிரிக்கும் இவருக்கும் நிறைய தொடர்பு உள்ளது ) காலமே வேறு , பட்டினத்தார் காலமே வேறு , பட்டினத்து அடிகளார் நமக்கு நம் காலத்திற்கு வெகு அருகாமை இல் வாழ்ந்தவர் , அவருக்கு கோரக்க சித்தர் குரு மற்றும் வழி காட்டி என்றால் அவர் கண்டிப்பாக அவருக்கு நேரில் உபதேசம் செய்திருக்க வேண்டும் , எப்பொழுதெல்லாம் அவருக்கு யோக ஞான முறைகளில் தடையோ அல்லது பிரச்சனை வருகிறதோ அப்பொழுதெல்லாம் அவருக்கு நிவர்த்தி செய்திருக்க வேண்டும் , மேலும் அவர் வாழ்க்கை வரலாற்றில் வரும் இரு அதிசய நபர்கள் கோரக்க மகாரிஷியாகவே இருந்திருக்க வேண்டும் .

அப்படி இருக்க கோரக்க சித்தர் எம்பெருமான் போக மகரிஷிக்கும் முன்னால் வந்தவர் , அவர் பட்டினத்து அடிகளுக்கு உபதேசம் செய்தார் என்றால் இன்றளவும் அவர்கள் உலாவிக்கொண்டு இருக்கிறார்கள் என்று தான் பொருளாகிறது .

ஆதலால் , யாருக்கும் சிறிது கூட சந்தேகம் வேண்டாம் , சித்த புருஷர்கள் அனைவரும் இன்றளவும் நமக்காக உதவ தயாராக உள்ளார்கள் , எப்படி பட்டினத்து அடிகளார் முழுமையாக அர்ப்பநித்தாரோ அப்படியே நாமும் அவர்களை முழு 101 % நம்பிக்கையுடன் துதித்தால் கண்டிப்பாக நமக்கும் தரிசனம் தருவார்கள் அதனுடன் முக்திக்கான வழியை அடைத்துக்கொண்டு இருக்கும் திரையையும் விளக்குவார்கள் .

அணைத்து சித்த புருஷர்களுக்கும் போற்றி போற்றி போற்றி .

முடிவு :

1 . பட்டினத்தார் குரு = கோரக்கர் சித்தர்

2 . இன்றளவும் உலகம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சித்த புருஷர்கள் வாழ்ந்து கொண்டு இருப்பாகள் , மக்களுக்காக , உண்மை நம்பிக்கை அர்ப்பணிப்புடன் உள்ளவர்களுக்கு வழி காட்டுவார்கள் .

போகர் பாதக்கமல சரணாய நமஸ்த்து
-------------------------------------------------------

ஓம் போக பெருமானே போற்றி
ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி
-------------------------------------------------------

---------------------------------------------------

ஓம் போக பெருமானே போற்றி

ஓம் போக மகரிஷியே போற்றி

ஓம் போக முதல் சித்தரே போற்றி

ஓம் போக ஞான குருவே போற்றி

------------------------------------------------------
 நிறைய நண்பர்கள் , பொருள் தவறு என்றும் , இது சரியான ஆராய்ச்சி அல்ல என்றும் , வரிக்கு வரி பொருள் வேண்டும் என்றும் பதில் எழுதி உள்ளார்கள் . அவர்களுக்காக தெரிந்தவரை பதிவு செய்கிறேன் .

அய்யன் எம்பெருமான் குரு முதல் சித்தர் போக மகரிஷி அருள்வார் , அருள் செய்து கொண்டு இருக்கிறார்.

விந்து நிலை விமலைஅவள் பீடம் - இந்த வரிக்கு விளக்கம் தேவை இல்லை என்று நினைக்கிறன் , காரணம் மிக மிக எளிதாக சித்தர் குரு போகரின் நண்பர் கோரக்கர் சொல்லி உள்ளார் , இருந்தும் சொல்கிறேன் , விந்து என்பது நாம் நினைப்பது அல்ல , விந்து என்பதின் பொருள் ஓளி , அதாவது யோக சாதனை செய்யும் பொழுது இருபுருவ மத்தியில் தோன்றும் ஓளி தான் விமலையான பராபரி சக்தி மாதேவி அன்னை வாலையின் பீடம் .
உச்சி வெட்டாத சக்கரம்தான் கோசம் கோசம்   தலையின் உச்சியில் வெட்டாத சக்கரம் என்பது சஹஸ்ராரம் ஆகும் , ஆயிரம் இதழ் கொண்ட அந்த  ஆதாரம் தான் கோசம் என்பது .
அந்தமுடன் இறைக்காத சலமே நாதம் இறையாத சலம் தான் நாதம்
அன்புடனே பேசாத மந்திரம் சேர்க்கை பேசாத மௌனமாம் மந்திரதினுடன் சேர்க்கை வேண்டும்
சுந்தரமாய் எட்டாத புஷ்பம் வாசி எட்டாத புஷ்பம் தான் வாசி , வாசியை எட்டிப்பிடிக்க முடியாது ஆனால் நுகரலாம் புஷ்பத்தை போன்று , அதனால் தான் வாசியை மலருடன் ஒப்பிட்டு உள்ளார் .
சுகமுடனே கட்டாத லிங்கம் சுக்கிலம் லிங்கம் என்பது சுக்கிலம் .
பந்தமறும் பரமனைய ஆன்ம சோதி பந்தம் அறுக்கும் பரமனே ஆன்ம ஜோதி.
பகர்குருவப் பூசயுட்ரா ணுவங்கள் போமே அவரே குரு , அவரை பூசை செய்தால் ஆணவங்கள் போகும் .

இப்பொழுது பட்டினத்தார் பாடலுக்கு வருவோம் ,  அவருடைய பாடலில் கடைசி வரியில் சொல்கிறார் , இவை எல்லாம் என் குரு நாதன் மொழிந்ததுவே . 

இதை எல்லாம் அதே வார்த்தைகளுடன் சொன்னவர் கோரக்கர் பெருமான் , அதனால் அவர் குரு கோரக்கராக இருக்க வாய்ப்புகள் அதிகம் ,

இல்லை என்று வாதிடுபவர்களுக்கு , ஒரு சிறிய எடுத்துக்காட்டு , இன்று பலர் சொல்கிறார்கள் எனக்கு வள்ளலார் காட்சி கொடுத்தார் , அகத்தியர் பெருமானை நான் பார்த்தேன் , மேலும் மகா அவதார் பாபாஜி லாஹிரி மஹா சயருக்கு தீக்ஷை கிரியாவில் அளித்தார் என்றெல்லாம் சொல்கிறார்கள் .

௨௦௦௦ வருடங்கள் முன்பு வாழ்ந்த வாழ்ந்து கொண்டு இருக்கின்ற பாபாஜி லாஹிரி மகா சயருக்கு தீக்ஷை அளித்தார் என்றால் நம்புகிறார்கள் , அவர் நம்ப காரணம் சொன்ன நபர் , சொன்ன விதம் , சொன்னவர்கள் கஷாயம் பூண்டு , நீட்டி , மழித்து இருந்தார்கள் , அதற்காக அவர் சொன்னதை நம்பினார்கள் .
இங்கு மழித்தல் , நீட்டல் இல்லாமல் , ஞானி என்ற போர்வை இல்லாமல் சொன்னால் , நம்ப ஆள் இல்லை . 
சரி விஷயத்துக்கு வருவோம் , ௨௦௦௦ வருடங்கள் வித்தியாசத்தில் லாஹிரி மகாசயருக்கு பாபாஜி தீக்ஷை அளித்தது உண்மை என்றால் , ஏன் பட்டினத்து அடிகளுக்கு கோரக்கர் குருவாக இருக்க முடியாது , அவர் குரு இவர் தான் என்று இந்த ஒரு பாடல் சான்று போதாதா .
யார் யாரோ சொல்கிறார்கள் நான் தினமும் வள்ளலாரிடம் உரையாடுகின்றேன் என்று , இவர்களே இப்படி என்றால் , பட்டினத்து சுத்த முத்தி சித்தர் கோரக்க பெருமான் சீடராக இருக்க துளி கூட வாய்ப்பு இல்லையா .
வாய்க்கு வந்ததை எல்லாம் பேசக்கூடாது , சிலர் சொன்னதை அவர்களுக்கே திருப்பி சொல்கிறேன் , நுனிப்புல் மேய்வது தவறு .

யார் குரு யார் என்று ஆராய்வது தேவை இல்லாத ஒன்று , ஆனால் அதை ஆராய்ந்ததின் முடிவு நன்றாகவே அமைந்தது , போலிகள் யார் என்று அனுபவ பாடம் கிடைத்தது , எம்பெருமான் குரு முதல் சித்தர் போக மஹா முனி மகரிஷிக்கு அரோகரா .

ஏதாவது தவறு இருந்தால் அது அடியேனையே சேரும் , எதாவது நன்மை இருந்தால் அது குரு சித்தர் போகர் பெருமானை சேரும் .

அய்யன் குரு முதல் சித்தர் எம்பெருமான் போகர் மகரிஷி  பாத கமலாயா சரணம் சரணம் சரணம் , போற்றி போற்றி போற்றி.

  

Saturday, August 14, 2010

எம்பெருமான் குரு  போக முனிவர் திருவாய் மலர்ந்தருளிய சிவயோக ஞானம் - 12




 -------------------------------------------------------

ஓம் போக பெருமானே போற்றி
ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி
-------------------------------------------------------

ஓம் போகரே குருபிரம்மோ , போகரே குருவிஷ்ணு
போகரே குருதேவோ , போகரே மகேஸ்வரன்
போக குரு சாக்ஷாத் பரப்பிரமம் , தஸ்மை ஸ்ரீ போகர் குருவே நமஹா .
-----------------------------------------------------------------------------------------------------
வாசி மற்றும் செய்ய வேண்டிய முறைகள் ஞான யோக மார்க்கம் தெளிவாகவும் , முழுமையாகவும் 12 பாடல்களில் சுருக்கி மக்கள் மேன்மை அடைவதற்காக அய்யன் எம்பெருமான் முதல் சித்தர் குரு போக சித்த மகரிஷி ஆண்டவர் அளித்துள்ளார் ,அனைவரும் படித்து முயற்சித்து சாதகம் செய்து கிடைக்க வேண்டிய மிகப் பெரிய பயனை பெறவும் ,
 ------------------------------------------------------------------------------------------------------------------
காணாமற் போகாது ஏங்கிடாதே
காலும் எதோ தலையும் எதோ  என்றுஎண்ணாதே
தோணாமற் தோணவைக்கும் கணேசன் மூலம்
துண்டத்தின் கீழ் நுனியல் ஒளியைக்கண்டால்
பூணாமற் பூணுகிற சுவாதிஷ்டானம்
புகழான அசபைஇலே ஒளியைப்பாரு
வீணான வீணல்ல சுழினைக்கண்டம்
வேதாந்த துரியமது மௌனிதானே

தானென்ற மௌனமணி பூரகந்தான்
சானகியும் மால் நிற்கும் ஒளியைப்பாரு
கானென்ற அனாகதமும் கடைக்கண் பாரு
கதிரான ருத்திரன் தன் ஒளியைப்பாரு
வானென்ற விசுத்திஇலே நுனியைப்பாரு
மகத்தான மயேஷ்வரன் தன் ஒளியைப்பாரு
மானென்ற ஆக்கினைஇல் சச்சிதானந்தி
மணிமேவும் சதாசிவன் தன் ஒளியை நோக்கே

நோக்குகிற தோர் வகை கேளு ஒரு போது உண்ணு
நோக்காமற் பிங்கலைஇல் ஓடும் போது
நாக்குருசி சுவைபாகம் ஆருங்க்கொள்ளல்
நலமான உமிநீரின் நீருங்க்கொள்ளல்
மூக்கினிலே பிங்கலைஇல் ஓடும் போது
மூட்டுவாய் இப்படியே முக்கால் சொன்னேன்
பாக்கு வெற்றிலை அருந்தி படியே கொள்ளல்
படுக்கும் போது இடக்கரத்தில் தலையை தாங்கே

தாங்குவாய் அனுபோகம் பிங்கலைஇற் கூடு
சையோகம் சிவயோகம் தானேயாகும்
தூங்குவாய் மௌனமாய் தூங்குதூங்கு
சுயம் பிரகாசமதில் நினைவாய்ப்பாரு
ஓங்குவாய் பிரணவத்தில் ஒடுக்கமாகும்
உயிர் பிழைக்க மேல் வாசல் ஊடு தூக்கு
வாங்குவது இடையுடு வாங்குவாங்கு
வளமான ரேசகந்தான் மேலே தாக்கே

தாக்கியப்பா மேல்வாசற் குள்ளே சென்று
சாக்கிரத்திற் கண்மூடி நிதமும் பாரு
நோக்கையா நொய்யாரும் நீர்த்தூளாகும்
நோக்காமற் பார்த்தபேர் கண்மூடாமல்
ஆக்கையா பொறி ஐந்தும் அடித்துத்தள்ளி
ஆனந்த மதியமுதம் சிந்தும் சிந்தும்
வாக்கையா பேசாதே சமாதி மூட்டு
மைந்தனே பூசையெல்லாம் வளங்கும் தானே

வளங்கொண்ட பரநேசம் நடு லாடத்தில்
வைத்துப்பார் விழி இரண்டும் மருவுங்க்காலம்
உலங்க்கொண்ட புரி என் பூரணமும் மேலாம்
உறுமைனால் ஒரு வழியால் ஓடி ஏறு
குளங்கண்டோர் நீருண்டு தாகந்தீர்த்துக்
கொண்டது போல் அண்டி அருகிருந்து பாரு
களங்கொண்ட ஆருட மௌன கங்கை
கை முறையாய் சமாதி இது உரைக்கும் தானே

தானென்ற தியானம் அஞ்சு முன்னே சொன்னேன்
தராதலமாம் நிராதாரம் அஞ்சின் உள்ளே
கானென்ற அவ்விடங்கள் ஒளிகள் காணக்
கருவான த்யானமது கண்டு சொன்னேன்
மானென்ற சத்தி ஐந்தும் சிவம் ஒன்றான
மந்திர பீஜாட்சரங்கள் வைத்துப்பாரு
தேனென்ற சடாதார யோகத்துக்கு
தியானமது கண்டு உரைத்து வாசி ஊதே

வாசிஇலே இடகலை பூரகந்தான் ரெண்டு
வளமான சுழினை இற்கும் பகந்தான் நாலு
தேசியென்ற பிங்கலை ரேசகந்தான் ஒன்று
திடமாக பௌரனையை தொட்டு நீயும்
ரேசி இந்த முறை அம்மா வாசி தொட்டு
நிசமாக வளர் பிறையை தாக்கிமாறு
மாசிஇலே பித்த நீர் பாயாவண்ணம்
மதி பார்த்து கண்ணாலே நோக்குவாயே

நோக்குவது நீராதாரம் ஆறும் பாரு
நுனியான தமர்வாசல் உள்ளே தாக்கு
தாக்குவது ரேசகமாங் கண்டம் பாயும்
சத்திஇடை பாயாமற் பிங்கலைக்கே ரேசி
போக்குவது மேல் வாசல் பூட்டி விட்டால்
பொறி ஏது மனத்தோடு பூதாதையா
ஆக்குவது வாசி தாரணை அதாச்சு
அப்பனே சுழிமுனைஇல் உறைத்து நில்லே

நில்லடா ஆக்கினை தாரணை இதாச்சு
நிஷ்களமாம் விந்து விட்டு நாதம் ஓங்கச்
செல்லடா திசைநாதம் கிளம்பும் போது
திட்டமாய் பூரணமாய் மதிஇன் உள்ளே
அல்லடா அமுதம் அங்கே கக்கல் கக்கல்
அடைவான அமுத தாரணை இதாச்சு
கல்லடா உன் தேகங் காலன் மாண்டான்
காலனென்ற பிங்கலையை ரவி தானுன்டே

உண்ட ரவியாலே மதி அமுதமாச்சு
ஊதியே அனல் கொழுத்தி நொய் நீர் வேர்வை
கண்ட தென அப்பு தாரணை இதாச்சு
கற் தேகமானது தாயம் பூமி
விண்டதொரு மேல் வாசல் திறந்த போது
விசும்பினுட தாரணையாம் வெளிச்சங்கானில்
அண்டமென்ன பிண்டமென்ன ரெண்டும் ஒன்றாய்
ஆனதுவே இரு வினையும் அத்தமாமே

ஆமிந்த வாசிரவி ஊடே சென்று
அத்ததுவே பிராணாய மையாசொன்னேன்
ஓமிந்த வாசிரவி மேலே ஏறி
உடைத்திட்டால் பிரத்தியாகாரமாச்சு
தாமிந்த வாசிரவி தன்னைக் கண்டோர்
சமாதி எங்கும் வியாபகமாய் நிற்க்குமப்பா
நாமிந்த பிர்மமதே பிரமந்தன்னை
நாடி நிற்கக் கெற்பம்பின் நடையான்முற்றே



 -------------------------------------------------------

ஓம் போக பெருமானே போற்றி
ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி
-------------------------------------------------------

Friday, August 13, 2010

குரு எம்பெருமான் போகர் திருவாய் மலர்ந்தருளிய திருமந்திர ஞானம் - 10

குரு எம்பெருமான் போகர் திருவாய் மலர்ந்தருளிய திருமந்திர ஞானம் - 10 








-------------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றி
ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி
-------------------------------------------------------

ஓம் போகரே குருபிரம்மோ , போகரே குருவிஷ்ணு
போகரே குருதேவோ , போகரே மகேஸ்வரன்
போக குரு சாக்ஷாத் பரப்பிரமம் , தஸ்மை ஸ்ரீ போகர் குருவே நமஹா .
--------------------------------------------------------------------------------------------------------

காணவே மூலமது அண்டம்போலக்
காரணமாய் திரிகோணமாக நிற்கும்
பூணவே மூன்றின்மேல் வளையமாகும்
புறம்பாக இதழதுதான் நாளுமாகும்
நாணவே நாற்கமலத்து அட்சரத்தை
நவிலுவேன் வயநமசி றீறீ யாகும்
ஊணவே முக்கோணத்துள் ஓங்காரம்
உயர்சியாம் அதற்க்குள்ளே அகாரமாமே          

அகாரத்தின் மேலாக கணேசர் நிற்ப்பார்
ஆதியொரு கோணத்தின் உகாரம் நிற்கும்
உகாரத்தில் வல்லபையாள் சத்திநிர்ப்பால்
ஒடுங்கியதோர் முனையோன்றிர் கதலிப்பூவாய்
எகாராமாய் முகங்கீழ் குண்டலியாம் சக்தி
எனும் பாம்பு போல் உருட்டி சீறிக்கொண்டு
சிகாரமாய்ச் சுழுமுனையோடு உருவி நிற்ப்பாள்
திகழ் துரியா தீதமென்ற அவஸ்த்தைதானே

அவத்தைக்கு இருப்பிடமும் மூலமாகும்
அந்த கதலிப்பூ வெட்டிழதாய் நிற்கும்
நவத்தைக்கும் நந்தியனுள் வாய்இல் நிற்ப்பான்
நற்சிவமாம் சிகாரத்துக் கோடியானும்
வவத்தைக்கும் வாய்திறவான் மலராய்மூடும்
மைந்தனே எட்டிதழ் அதில் எட்டு சக்தி
பவத்தைக்கு சத்தி எட்டின் பேர் ஏதென்றால்
பாங்கான அணிமாவும் மகிமாத்தானே

தானான கரிமாவும் லகிமாவோடு
தம் பிரகாமியம் பிராத்தி ஈசத்துவம்
பேனான வசித்துவமா மென்றசத்தி
பேரெட்டு தேவதையும் தளத்தில் நின்று
ஏனான இதழாலே மூடிக்கொள்வார்
ஏத்தமாய் நந்தியைத்தான் காணவிடாமல்
வானான வஸ்த்துவை நீ பானம் பண்ணி
வங்கென்று வாங்கியே கும்பிட்டூதே

ஊதினால் எனது சத்தி லகரியாலே
உலாவுவலா ரிதழெல்லாந் திறந்துவிட்டுப்
போதினால் ஆயி சொன்ன ஏவல் கேளு
பூந்து பார் நந்திகண்டால் யோகமாகும்
வாதினால் பத்தான வருழத்துக்கும்
வாசலையே திறவாமல் மூடிக்கொள்வாள்
ஏதினால் இதுக்குள்ளே வாசி மாட்டு
இடத்தோடி வங்கென்று உள்ளே வாங்கே

வாங்கியே நந்தியிர் சிங்கென்று கும்பி
வலத்தோடி சிங்கென்று உள்ளே வாங்கி
தாங்கியே வங்கென்று இழுத்துக்கும்பி
தளமான தெளிவு வாரும் வெளியாய் காணும்
ஓங்கியே மாணிக்க ஓளி போல் தோன்றும்
உத்தமனே மூலத்தின் உண்மை காணும்
தேங்கியே வல்லபையாம் சத்தி காணும்
சிறந்திருந்தால் பச்சைநிரமாகத்தானே

பச்சைநிற வல்லபையை பணிந்து போற்று
பாங்கான வாறுக்கும் பருவஞ்சொன்னால்
மொச்சையாய் மூலமது சித்தியானால்
மூவுலகும் சஞ்சரித்து திரியலாகும்
கச்சை நிற காயமுமே கனிந்து மின்னும்
கசடு அகன்று ஆறுதளம் தன்னிற் தோன்றும்
துச்சைநிற வாதம் சொற்படியே கேட்கும்
துரியத்தின் சூசகமெல்லாம் தோன்றும் பாரே

பாரென்று புரியட்ட நாலிர் சேர்க்கும்
பளிச்சென்று மூலத்திற் சோதிகானும்
காரென்ற தீபஒளி கண்ணோ கூசும்
கணபதியும் கண்முன்னிர் தனமே செய்வார்
ஊரென்ற யோகத்துக்கு உறுதி சொல்வார்
உற்பணமாம் வாதத்தின் உண்மை சொல்வார்
நேரென்ற சதாசிவத்தின் நிலையும் சொல்வார்
நீச்சென்று விட்டாக்கால் யோகம் போச்சே

போச்சென்று விடுகாதே மூலந்தன்னை
போகைலும் இருக்கைளும் மனத்தை ஊனு
பேச்சென்ற பிறர் சத்தம் கேளாப்பக்கம்
பிரத்திருந்து லட்சியத்தை பூட்டிவாங்கு
மாச்சென்று வாசியை நீ தவறோட்டாதே
மனந்தன்னை மூலத்தில் மருவிசேர்க்கும்
வேச்சென்று கடினம் போல் முன்னே காணும்
விடுகாதே மாச்சலதாய் விரைந்து உன்னே

உன்னியே பழகும் மட்டும் கடுசாய் காணும்
உட்புகுந்து பார்த்து வந்தால் உறுதி கூடும்
வன்னியே துலங்கும் மட்டும் மனம் சலிக்கும்
மாசற்ற ஒளிவு கண்டால் மகிழ்ச்சியாகும்
பின்னியே பிங்கலையும் இடைஇர் கூடும்
பேரான சுழினை தன்னில் நெட்டிட்டேரும்
நன்னியே நமன் வெருண்டு அப்பாற் போவான்
நாளெல்லாம் கடிகயுமாய் நாடமுற்றே.
------------------------------------------------------------------------
அய்யன் அருளால் சீர் பிரித்து அளிக்கப்பட்டுள்ளது , அனைவரும் அவர் அவர்கள் கருத்தை சுதந்திரமாக பகிர்ந்து கொள்ளலாம் .

இந்த பத்து பாடலுமே ஞான மார்கத்திற்கு  மிக மிக முக்கியமானவை , எல்லா சூத்திரங்களும் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது .

மிகபெரிய அன்பும் அருளும் எல்லா மக்களின் மேலும் கொண்டு அய்யன் முதல் சித்தர் குரு எம்பெருமான் போக மகரிஷி அருளி உள்ளார் , பயன் பெறுவோமாக .

நன்றி

---------------------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றி
ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி
---------------------------------------------------------------  

Thursday, August 12, 2010

உணர்வதற்காக

உணர்வதற்காக
------------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றி

ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி
-------------------------------------------------------
ஓம் போகரே குருபிரம்மோ , போகரே குருவிஷ்ணு
போகரே குருதேவோ , போகரே மகேஸ்வரன்
போக குரு சாக்ஷாத் பரப்பிரமம் , தஸ்மை ஸ்ரீ போகர் குருவே நமஹா .
------------------------------------------------------------------------------------------------------------------
உணர்வதற்காக சில ஒலி ஒளி , மிகச்சரியான ஒளி ஒலி கிடைக்காததால் , முடிந்த அளவு கிடைத்ததை அளித்து உள்ளேன் , தவறை பொறுத்து அருளவும் . நன்றி .






---------------------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றி

ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி
---------------------------------------------------------------

Sunday, August 1, 2010

சிருஷ்டின் அட்ச்சரம் கூறல் மற்றும் ஞான யோக முறைகள்

சிருஷ்டின் அட்ச்சரம் கூறல் மற்றும் ஞான யோக முறைகள்




====================================================================

ஓம் போக பெருமானே போற்றி
ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி
ஓம் போகரே குருபிரம்மோ , போகரே குருவிஷ்ணு
போகரே குருதேவோ , போகரே மகேஸ்வரன்
போக குரு சாக்ஷாத் பரப்பிரமம் , தஸ்மை ஸ்ரீ போகர் குருவே நமஹா .

போகபெருமானின் பாத கமலங்களை அடியேன் சிரசின் மீது வைத்து அவர் பாடலை இங்கு வெளி இடுகிறேன் அணைத்து ஞானம் வேண்டி நிற்கும் மக்களுக்காகவும் வெளி இடப்படுகிறது , பிழை , குறை மற்றும் நிறை எனதல்ல , அடியேன் அம்பு அர்ஜுனன் அய்யன் எம்பெருமான் மகரிஷி முதல் சித்தர் .
=======================================================================

வழங்கினேன் சீவநென்றுஞ் சிவன்தா னென்றும்
வல்லதோ ரட்சரமுன் ரிருக்கவே தான்
களங்கமற வென்னையும்நீ கேட்பதென்ன
கடைதலையு  மானதுவு மதுவே யாகும்
துலங்கவே நால்மூன் ரட்சரமே யானால்
தோன்றிநீ எதுவரைக்கு மட்சரமே சொல்லும்
விளங்கவே யைம்பத்தி யொன்றி லப்பா
விளங்கி நின்ற வட்சரந்தான் வொன்றுதானே.

தானென்ற வட்சரந்தா நெனதுதான் சொல்லாய்
தப்பில்லையோ இனிமே லட்சரம் வேறுண்டோ
வேனென்ற பிரம்மமதுக் காஇஎரதெந் கலைதான்
வீடுபோ லதுவுமொரு யுறு  மாச்சு
நானென்ற பிரம்மத்தின் கண்ணுமானேன்
நாட்டினேன் கால்தலயோ டுடலுள்ளந்தான்
ஊனென்ற வட்சரந்தான் வேணு மென்றா
லுஇரான பரமத்தி லூணிப்பாரே

ஊணியது பார்க்க வென்றார் கண்தாநேங்கே
யுடம்பதனைக் கண்ணாலே பார்ப்பதுண்டோ
ஆணியதா இருப்பிடத்தைச் சொன்னாயானா
லாரிந்துனா னந்தவழி திறந்து பார்ப்பேன்
தோனியதோர் காலாலே யறியவேனும்
துலங்கிவிடு மப்பவல்லோ மூலமெல்லாம்
வாணிஎன்ற காலாலே யறியா விட்டால்
வல்லினமும் மெத்தவடா தலைகானாதே

காணாது வென்றுசொல்லி யுரைத்தே விட்டாய்
காண்பது நானினி யேது எதைநான் காண்பேன்
தோணாது கபடமதாய் சொன்னாயானால்
துணையொரு  வரில்லைஇனி நீயுநானே
பூணாது இருந்து விட்டா லரிவதென்ன
பிழைமோசஞ் செயேனான் சும்மாசொல்லு
கோணாது கோணமாடா முக்கோனமப்பா
கொடிதான சுழிதானே கொளுத்தும் பாரே

கொளுத்து மென்ற வட்சரத்தை வாயாற் சொல்லக்
கூடாது வதுசொல்லக் கூச்சமெத்த
வழுத்து மென்ற வட்சரமே கொளுத்தும்போது
வந்தவழி கூச்சமது எங்கே எங்கே
பழுத்து மென்ற வட்சரத்தைச் சொன்னாயானால்
பாதியுட லுந்தனுக்கு தத்தஞ்செய்வேன்
தலுத்த தொரு வட்சரந்தா னிதுதானொன்று
தலைந்து தான் ஆயரதென் கலயுந்தானே

தானென்ற கலையதுவே யானுங்கண்டேன்
தப்பியது வதுதனிலே யொன்றே யுண்டு
வேனென்ற வட்சரத்தைக் கூடசேர்த்தல்
வேனென்ற வட்சரதைக் கூடசேர்த்தால்
வெண்மை நிறங் காணுமது விரைந்துபாரு
கோனென்ற வட்சரத்தை யங்கேவைத்து
குறியாக வரிவதற்க்கு இடத்தைச் சொல்லு
நானென்ற வீடுதனில் நாதவீடு
நயனத்தின் மேலான சுழினைபாரே

பார்க்கவே வட்சரத்தைச் சுழினைவைத்து
பரிவாகக் கண்டுதங்கே பிரம்மசோதி
ஏற்க்கவே யட்சரமோ ரஞ்சுசேர்க்க 
வெனதுமுக மைந்துமைந்து வருணமாச்சு
சேர்க்க வறியாத வாலைப் பெண்ணைநீதான்
செயமான வட்சரம்நீ சொன்னதல்ல
தாக்க பரப்ரம்மந்தான் எனக்குச் சொல்லத்
தட்டுருவி பாய்ந்துதந்த சோதிதானே

சோதியென்ற விழிதிறக்க வக்கினியுமாச்சு
சோம சூரியனக்கிநியு மூன்று மாச்சு
வீதி யென்ற வக்கினியான் விழியாற்றானும்
விழித்தங்கே பார்க்கையிலே பத்தித்தையோ
நாதியென்ற பேர்களுமே வொருவரில்லை
நானொருவன் தாந்தனித்தே நந்தவேளை
ஓதியென்ற பெண்ணையுன்தான் நானும்பார்த்து
வுடற்பாதி கொடுக்கவுந்தான் தேடினேனே

தேடினே னாதார மொன்று மில்லை
திரண்டுருண்ட பிரம்மத்தில் நின்றுகொண்டு
சாடினேன் திசைசத்தி சமைத்தே னப்பா
சலன மில்லாப் பீடமதாய் போட்டே னொன்றே
கூடினேன் வொருத்திதனை சிரசிற் கொண்டேன்
கூட்டோடே தானனைந்தேன் வொருத்தி தன்னை
நாடினேன் வொருத்தி தன்னை யேவற்காக
நாயகியாள் பாதமதில் வைத்திட்டேனே

வைத்திட்டேன் சத்திகளோ நாலுபேர்கள்
வகையான ஆதிசத்தி பராசக்தியோடு
மெயத்திட்ட ஞானசத்தி வாளைசத்தி
முதலான நால்வருக்கும் பாங்காயீந்து
சித்திட்ட முகம்நாலு மவரவற்குச்
சமபாகங் சேர்ந்துநா நங்கே நின்றேன்
ஓத்திட்டே நொருமுகமும் ப்ரம்மத்தோடே
யுறவாக ப்ரம்முக மானேன் பாரே

பார்க்குமென்ற பீடசத்தி ரூபந்தானும்
பரிவான கலையிருநூற் றிருபத்தி நாலாம்
எர்க்குமென்ற சத்திதான் ப்ரித்திவயுமானா
லென்ன சொல்வேன் அவளுடைய உடல் வளப்பம்
மார்க்கமென்ற அப்புவது  ரத்தமாச்சு
மைந்தனே தேயுவென்ற பிந்துமாச்சு
தீர்க்கமென்ற புல்பூடு விருட்சமெல்லாம்
திறமான ரோமமது வாய்வுமாச்சே

ஆச்சுதேன்றே யாவளுடனான் கலந்ததாலே
யாகாச முதலாக வஞ்சுமாச்சு
வாச்சுதென்ற பொன்மேரும் ரசிதமேரு
வல்லபையாள் தனமிரண்டு மாகுமாகும்
நீசுதேன்றே யானுமே சேர்ந்தபாகம்
நிருவாணி வெள்ளியிட மேருமாச்சு
காச்சுதென்ற சத்தகிரி சிவகிரியுமாகும்
கைலாசக் கொடிமுடியு மிதுதான் காணே

காணவே இரத்தின மாபரண மாச்சு
கனமான மேகமது வஸ்திரமாச்சு
பூணவே ஜெகச்சோதி சொல்லப் போகாப்
பூரணமாய் விளந்ததெல்லா மவளுக்குல்லே
ஆனவே யாதிசத்தி யாதிவஸ்த்து
வவலல்லா லதிகார மார்க்கு மில்லை
தோணவே யானுமிவள் மூலந்தன்னை
துலங்கவே கண்டதில்லை என்னாற்றானே

தானென்ற லட்சுமியு மிவள் தானாகுங்
தாங்கியதோ ரட்சரமும் அவ்வும் உவ்வும்
வேனென்ற பிராணசத்தி பிரியாசத்தி
நானென்ற மேருவதி லிருந்து கொண்டு
நாட்டினே னநேகவித சிருஷ்டிப்பாகத்
தேனென்ற ப்ரம்மம தாச்சரியம் பார்த்து
தேவியைப் போற்கலைபிரிந்து சிருஷ்டித்தேனே .

எல்லா ஞான யோக  உண்மைகளையும் தெளிவாக சொல்லிவிட்டார் அய்யன் மக்களுக்காக , அவர்கள் மேன்மை பெற , உண்மை உணர .

நாம் செய்ய வேண்டியது ஒன்றும் இல்லை , சும்மா இருந்து உன்னினால் போதும் .

நன்றி


==================================================================
ஓம் போக பெருமானே போற்றி

ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி
==================================================================