Thursday, September 23, 2010

மனமிருந்தால் மார்க்கமுண்டு

மனமிருந்தால் மார்க்கமுண்டு

மனமிருந்தால் மார்க்கமுண்டு , என்று எல்லோரும் சொல்வார்கள் , பொதுவான அர்த்தம் என்ன சொல்வார்கள் என்றால் , ஒரு விஷயத்தை அடைய திடமாக எண்ணினால் , அதை அடைவதற்கான வழி தானாக கிடைக்கும் .

ஆனால் இதையே நாம் வேறு விதமாகவும் எடுத்துக்கொள்ளலாம் , ஏன் அதுவே கூட உண்மையும் ஆக இருக்கலாம் , அது

மனம் இருந்தால் மட்டுமே மார்கங்கள் தேவைப்படும் , மனம் இல்லை என்றால் எவ்விதமான மார்க்கமும் இருக்காது . தனியாக ஒரு மார்க்கத்தை பின் பற்ற தேவை இல்லை , மனம் எங்கு அடங்குகிறதோ அங்கே தான் இறையை காண , உணர முடியும் .மனம் என்னும் மாய குரங்கை அடக்க இருக்கும் வழிகள் தான் வேறே தவிர , மனம் அடங்கிய பிறகு , மனம் அடக்கியவர்களுக்கு  எவ்விதமான தனி ஒரு மார்க்கமும்
தேவை படாது .

இங்கு மார்க்கம் என்று குறிப்பிடுவது , மத , இன , சமய , தனி முறை வழிபாடுகள். இவை எதுவும் மனம் என்று ஒன்று இல்லாத ஞானிக்கு தேவையே படாது .

ஆதாலால் மனம் என்ற குரங்கை , குதிரை என்னும் வாசி முறையை பயன்படுத்தியோ , அல்லது அன்பு என்னும் ஞான முறையின் மூலமோ ( அன்பு என்று நாம் நினைத்துக்கொண்டு இருப்பது வேறு , பரத்திடம் இருக்கும் அன்பு என்பது வேறு ) அடக்கி அல்லது இல்லாமல் செய்து இறையுடன் இறையாய் இருப்போம் அன்பர்களே .

Wednesday, September 15, 2010

வாழ்விது மாயம் மண்ணாவது திண்ணம்

வாழ்விது மாயம் மண்ணாவது திண்ணம்


நாளை என்பது மெய் அல்ல , இன்று என்பது நிஜம் அல்ல , நேற்று என்பது

உண்மையும் அல்ல , மனித வாழ்விது குடம் கவிழ் நீர் , நான் என்று நினைக்கும்

உடல் வெறும் ஓட்டை பாண்டம் , வெந்த சோற்றை தின்று வேலை வந்தால்

போவதற்கா இந்த வாழ்கை , அப்பன் , ஆத்தாள் , மனைவி , பிள்ளைகள் ,

சொந்தங்கள் , யாரும் கூட இல்லை போகும் போது , துண்டு துணி கூட இல்லை


எதற்கு இந்த ஆட்டம்



மாயம் ................. வாழ்விது மாயம்........                



மண்ணாவது திண்ணம்


எது துணை ,


யார் துணை ஒன்றும் தெரியவில்லை


எதற்கு இந்த வாழ்க்கை ஒன்றும் புரியவில்லை