Thursday, July 29, 2010

சிருஷ்டிஇன் கலைகள் கூறல் மற்றும் ஞான யோக முறை

சிருஷ்டிஇன் கலைகள் கூறல் மற்றும் ஞான யோக முறை



====================================================================
ஓம் போக பெருமானே போற்றி

ஓம் போக மகரிஷியே போற்றி

ஓம் போக முதல் சித்தரே போற்றி

ஓம் போக ஞான குருவே போற்றி


ஓம் போகரே குருபிரம்மோ , போகரே குருவிஷ்ணு

போகரே குருதேவோ , போகரே மகேஸ்வரன்

போக குரு சாக்ஷாத் பரப்பிரமம் , தஸ்மை ஸ்ரீ போகர் குருவே நமஹா .

போகபெருமானின் பாத கமலங்களை அடியேன் சிரசின் மீது வைத்து அவர் பாடலை இங்கு வெளி இடுகிறேன் அணைத்து ஞானம் வேண்டி நிற்கும் மக்களுக்காகவும் வெளி இடப்படுகிறது , பிழை , குறை மற்றும் நிறை எனதல்ல , அடியேன் அம்பு அர்ஜுனன் அய்யன் எம்பெருமான் மகரிஷி முதல் சித்தர் .
=======================================================================
மூலம் எப்படி சிருஷ்டித்து ,   மூலத்தை எப்படி காண்பது , எப்படி அறிவது , ஞான யோக முறையை சூட்சுமமான முறையல் அய்யன் குரு எம்பெருமான் போக மகரிஷி கூறிவுள்ளார் , நன்கு ஒரு முறைக்கு பல முறை படித்து , பயிற்சி செய்து  உண்மையை உணரலாம்
=======================================================================
 பாரப்பா ப்ப்ரமமென்ற சோதிக்குத்தான்
பரிவான கலையதுவா இரத்தேட்டாகும்
சேரப்பா நான்பிறந்த கலைகள் தானுஞ்
சேர்ந்த தடாவன்பத்தி ஒன்றுங்க்கூடி
ஊரப்பா வானுமொரு பெண்ணுமான
வட்சரமுமது தானு மைம்பதொன்று
வேரப்பா வொன்றான வட்சரதால்
விதமெல்லா மறிந்ததடா யானுங்க்காணேன்

காணப்பா வைம்பத்தி யோன்றுகுத்தான்
கண்ணாகத் திறந்ததடா வொன்றுதானுந்த்
தோணப்பா வந்ததொரு கண்ணாலே
துலங்கவே யான்பிறந்த மூலங்கண்டேன்
நாணப்பா கருவிதா னாகாதேன்றும்
நாதமென்ற வோசையது வேணுமென்றும்
பூணப்பாவதிர் சிறிது கலைபிரிந்து
பூரண மாயுந்தனையுஞ் சிருஷ்டித்தானே

சிருஷ்டித்த களியதுதா நேத்தனையோ சொல்லுந்
திரண்டதொரு விபரமது தெரியசொல்லு
மட்டித்த கலையதுதா னைமூன்றப்பா
வதிகார மோகமதார் சிருஷ்டிசெய்தேன்
வட்டித்த கலையதுதான் வாலையாகி
வந்ததடா முகமைந்து கையும் பத்தாய்
எட்டித்த வுனக்கெனக்கு மூலமப்பா
யேகபறஞ் சோதியடா எண்ணிக் கொள்ளே

கொள்ளவே வைம்மூன்று கலைக்குத் தானுங்
குறியான வெளியொளிதா நெனதுதான் சொல்லும்
விள்ளவே வெளிதாநீ யல்லா லில்லை
விளங்கிநின்ற வெளியதுதான் என்னுகுள்ளே
நல்லவே யதையறிவ தேது மைந்தா
நானறியாச் சோதியென்ற கண்ணே வேணும்
வள்ளலே சோதியென்ற கண்ணே சொன்னால்
வகைமோச மெத்தவப்பா சொல்லோனாதே

சொல்லாதே சோதியது இல்லா விட்டாற்
சூட்சமது வறிவதுதா னேது யேது
கல்லான இருலதுதான் வந்துமூடுங்
கண்பத்து மிருந்ததனா லாவதேது
நல்லான சோதியது ஞானமாகும்
ஞானமென்ற கண்போனா லுஇரே இல்லை
வல்லான கன்னயுந்தான் வாயில் சொன்னால்
 வகையேது முனக்கில்லை வழங்கினேனே

அடுத்து சிருஷ்டின் அட்ச்சரம் கூறல் மற்றும் ஞான யோக முறைகள்

====================================================================

ஓம் போக பெருமானே போற்றி
ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி
=====================================================================

நானும் கிளிப்பிள்ளை சொன்னதை செய்கிறேன் . அவர் பாதக்கமலம் சரணம்

Wednesday, July 28, 2010

நூன்முகம் ஞானம் கூறல்

நூன்முகம் ஞானம் கூறல்


------------------------------------------------------------------------------------------------------------


ஓம் போக பெருமானே போற்றி

ஓம் போக மகரிஷியே போற்றி

ஓம் போக முதல் சித்தரே போற்றி

ஓம் போக ஞான குருவே போற்றி



ஓம் போகரே குருபிரம்மோ , போகரே குருவிஷ்ணு

போகரே குருதேவோ , போகரே மகேஸ்வரன்

போக குரு சாக்ஷாத் பரப்பிரமம் , தஸ்மை ஸ்ரீ போகர் குருவே நமஹா .

போகபெருமானின் பாத கமலங்களை அடியேன் சிரசின் மீது வைத்து அவர் பாடலை இங்கு வெளி இடுகிறேன் அணைத்து ஞானம் வேண்டி நிற்கும் மக்களுக்காகவும் வெளி இடப்படுகிறது , பிழை , குறை மற்றும் நிறை எனதல்ல , அடியேன் அம்பு அர்ஜுனன் அய்யன் எம்பெருமான் மகரிஷி முதல் சித்தர் .

---------------------------------------------------------------------------------------------------------------------

உரைகிறேனாதி சித்தனொரு வனப்பா
வொருவனுமே வல்லவடா பரமம்ப்ரம்மம்
கரைக்கிறே நதிளிருந்து கலைசிருதுக்
காலாகிப் பிரிந்துதிதி பிண்டமாகி
நிறைக்கின்ற வாணுமது பெண்ணுமாகி
நிறைவாக பதினாறு கலையும் பூண்டு
திறைக்கிரே னவலோருத்தி யல்லாலில்லை
தேவியுட சிருஷ்டிப்பைச் செப்பக்கேளு
 
கேளப்பா வவளுடைய தியானத்தாலே
கெடியாகத்தான் பிரிந்த மூலம்பார்த்து 
ஆளப்பா வந்தவொரு மூலத்தாலே 
வழகாக சிருஷ்டித்தா லோருவனைத்தான் 
வாலப்பா வொருவனுந்தான் வஞ்சகத்தால் 
வந்தவழி செல்லுமென்றான் வாலையைத்தான்
பாரப்பா வொருவனுமே யில்லைஇல்லை
பரப்பரம்ம மூலத்தார் பிறந்தேன் பாரே 
 
 
 
------------------------------------------------------------------------------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றி

ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி போற்றி போற்றி
------------------------------------------------------------------------------------------------------------------------

போகர் ஜனன சாகரம் - சதுரகிரி பெருமை கூறல்-திரிகூடம் - பொதிகை -சிவகிரி - மேலும் பல ... பகுதி - 2

போகர் ஜனன சாகரம் - சதுரகிரி பெருமை கூறல்-திரிகூடம் - பொதிகை -சிவகிரி - மேலும் பல ... பகுதி - ௨


-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றி


ஓம் போக மகரிஷியே போற்றி

ஓம் போக முதல் சித்தரே போற்றி

ஓம் போக ஞான குருவே போற்றி
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
சேருமென் மூலியது வதிகமுண்டு
ஜெயமான காத்தடிக்க சனனம்போகுஞ்
காருமென்ற கமண்டலத்தின் ஜலமும்போகுங்
கரையோரம் நின்றதொரு மூலிமெத்த
பேருமென்ற தாம்பிரவர்ணிக் கரையோரமெல்லாம்
பெரியோர்கள் கூட்டமடா பேசொணாது
ஏறுமென்ற தாம்பிரவர்ணி எழுகாதஞ்ச்செல்லும்
யோன்சொல்வே நெக்கியங்க லதிகம்பாரே

பாரென்ற தண்ணீரிர் ராம்பிரமுண்டாம்
பரிவான வயசெம்பு போலேகாணும்
வேரென்ற பொதிகையா மத்தியமாகும்
விளைந்ததொரு செப்பதுதா நுலாவிநிர்க்கும்
வாரென்ற வடக்குதிரி கூடமாகும்
வல்லதொரு மேற்க்குமிரு காதமாகும்
தேரேன்ற தென்முகந்தான் கடிகைபத்து
திறமான கிழக்கேழு காதமுன்டே

உண்டான பொதிகைக்கு வடக்கேயப்பா
வுயர்ந்ததொரு மூலவர்க்கச் சித்தர்கூட்டம்
நன்றடா நாகமலைப் பொதிகைமட்டும்
நாலுசகஸ் திரம்பேர்கள் வடவாற்கூட்டம்
அன்றடா வந்சுதலைப் பொதிகைதன்னி
லாயிரம்பே ரவர்பிள்ளை யதிலேயுண்டு
விண்டடா வீசானம் வென்சதுரகிரியல்
விளங்குசித்த ரொருநூறு பேராம்பாரே

பாரப்பா விந்திரனார் திக்குதன்னில்
பகரரிய பச்சையா ரோன்றுன்டப்பா
நேரப்பா வுண்ணாகுக்குச் சித்தருண்டு
நிறைவாகத் தைலத்தார் கிணறோன்றுண்டு
சீரப்பா சாத்தாவின் கோயிலுக்கு மேற்கே
சிறந்ததொரு மலைமேலே மலைதானொன்று
கூறப்பா சுனைமூன்று வெதிரேயுண்டு
குகையொன்று தென்முகமா இருக்கும்கானே

காணப்ப வெண்ணா வலைந்தாருண்டு
கருவான சுனையருகே மூலியுண்டு
சோணப்பா சுனைதனின் மண்டலமேமூழ்க
தோன்றுமடா வப்பவல்லோ மூலிதானும்
வீணப்பா சொல்லவில்லை மூலிதன்னில்
விதமான மூலிதன்னைச் சுனைநீராட்டி
பேணப்பா பழக்காஎ னளவுகொண்டார்
பேச்சுமில்லை மூச்சுமில்லை யடங்குன்தானே

தானென்ற தேகமெல்லாம் விரிந்துபோகுன்
தாப்பாம லூநேல்லாம் மடிந்துபோகும்
வானென்ற பயறுடனே சிருபயருன்காச்சி
வல்லதொரு பஞ்சிஇனால் வாயில்ஊட்ட
நானென்ற தேகமது பச்சையாகும்
நல்லதொரு வடுத்தசுனை ஸ்நானம்பண்ணு
கானென்ற கமண்டளநீர் நதிதானப்பா
காயசித்தி இதனாலே கண்டுக்கொள்ளே

கண்டுபார் ரத்தகர் ராழயுண்டு
கருநீலக் கொடிவேலி யதனருகேயுண்டு
உண்டுபார் குகையதிலே தெற்கேசென்றால்
உயர்ந்ததொரு நம்பிமலை யுண்டுபாரு
சென்றுபார் மலைமேலே நம்பிகோவில்
ஜெயமான கோவிலிக்கு மேற்கேசென்றால்
அன்றுபார் காதமதர் கப்பாலாக
வாச்சரியம் பாறைஎன்று வட்டமாமே

ஆமென்ற பாறைலே குழிதானுண்டு
வதுதனிலே கெந்தகத்தின் தைலமுண்டு
வேனென்ற தைலமதைச் செம்பிற்ரேய்க்க
விளைந்ததடா தங்கமது வயசுபத்தாய்
வாமென்ற தைலத்துக்கு வடுகன்காவல்
வல்லதொரு விருக்ஷமது வதிலேயுண்டு
தாமென்ற குகைஉண்டு சித்தருண்டு
தப்பாமல் லொருநூற்றுப் பத்துபேரே

பேராக வதிளிருவர் பெரியோரப்பா
பிசகாதே நாற்ப்பதுதான் முழமேயாகும்
ஆரான வகஸ்தியற்கு முன்னேயுண்டு
வாஇஎரத்தெந் காதமொரு மூச்சிற்செல்ல
வீரான குளிகையொன்று விருக்குமப்பா
விதமான கமண்டலமுங் கன்னியோடு
வாரான விபிஈஷனந்தான் வைத்ததாகும்
வகையாக நிதானித்தால் தோணும்பாரே

தோணப்பா தங்கக்கொடி தானுண்டு
துலங்கவே யதன்கீழ்மா வலியும்நூறாம்
காணப்பா வின்னமோ ராச்சரியமுண்டு
களங்கமற்ற மைந்தானோ தரியவாங்கு
ஆணப்பா மண்டூக வேந்தாவென்று
வதிலிருப்பான் கொங்கணவன் பிள்ளைகேளு
நீணப்பா வருநூற்றி யைம்பதேழ்பேர்
நிலையாக வதிலிருப்பார் நயந்துகேளே

கேளப்பா மஎந்திரத் தினப்பாலாகக்
கெடியான நதியொன்று மூலிகயுமொன்று
வாளப்பா வங்கிருந்து மேலேசென்றால்
வழியான சோதிப்புல் சோதிவிருக்ஷம்
ஆளப்பா வதன்வழியே சென்றாயான
லாச்சரிய மங்குமொரு குகைதானுண்டு
நீளப்பா கிழக்குமுக மாகக்கானும்
நிலையான கருநெல்லி நிற்குந்தானே

தானென்ற குகைஎர் கொங்கணவர் தாமுங்
தப்பாம லிருப்பர்கமன் டலமுங்க்கொண்டு
வேனென்ற நிருமன்னா மலைதானொன்று
விளங்கியதோர் குகையொன்று மேற்கேபாரு
வானென்ற சங்கிலிச் சித்தரெல்லாம்
வாழ்ந்திருக்குங் குகையதுதான் பிளந்துபாரு
ஊனென்ற பேர்கலுந்தா நேரப்போகா
ஊனமிலாக் கதனிகளு வேயலாமே

ஆமென்ற விக்குகைஇ நடுவேயப்பா
வாச்சரியச் சுனையொன்று வதிகம்பாரு
வேமென்ற சுனையருகே வெண்சாரையுண்டு
வேகுசுருக்குத் தாடகைமா மலையைகேளு
நாமென்ற சுனையொன்று கற்றோட்டியென்று
நல்லசுனைக் கரையோர மால்போனிற்கும்
வாமென்ற தொட்டிஎலே சைத்தந்தன்னில்
மகத்தானவக் கினிநக்ஷத் திரத்திர்பாரே

பாரப்பா தைலமது சிவந்துகாணும்
பதனமாய்ச் சீசாவி லடைத்துக்கொண்டு
காரப்பா காசிடைதா நுல்லேகொண்டால்
கதிரவனா ருள்ளவரை இருக்கும்பாரு
சாரப்பா தேகமது சட்டைதல்லுங்
சஞ்சார வெண்சாரை யங்கேகாணும்
வீரப்பா வதர்கடுக்கக் குகைதானொன்று
விதமான சித்தர்கள் நானூறுபேரே

பேரான மருந்துமா மலைதனிலே யொன்று
பெரிதான சுனையொன்று பாறையொன்று
வாறான வடமுகமாய்க் கைதானொன்று
வல்லசித்த ரன்பதுபே ரதிலேயுண்டு
வீரான தைலம் பாஷானமுண்டு
விதமான மூலிஎல்லா மதிலேயுண்டு
கூறான பொன்மலைதான் மேற்கேயுண்டு
குடிஇருப்பா ராயிரம்பேர் சித்தர்தானே

தானென்ற கற்குழிதான் கிணறுபோலத்
தப்பாம லதிளிருபார் கெவுளிபோல
வானென்ற பிள்ளையார் மலைதானொன்று
வடிந்திருக்குங் கல்மதங்கள் வெள்ளிபோலாம்
கானென்ற வர்மலையில் மலைதானொன்று
கர்கதவன் திறந்திருக்குங் கண்டுபாரு
நானென்ற ராமதேவ ரங்கேஉண்டு
நலமான மண்டலமும் நதிதாநோன்றே

ஒன்றான வைந்துபத்துச் சித்தருண்டு
வுத்தமனே யுதகசன்ஜீவிக் கிணறுமுண்டு
வென்றான வதன்வடக்கே கருமலைதானொன்று
விளங்கியதோர் சித்தர்களுஞ் சதந்தானுண்டு
அன்றான பொதிகைக்கு வாய்விலப்பா
வாச்சரியம் மலைசெம் மலைதானாமே
நன்றான போகளுந்தா னாயிரம்பேர்
நம்முடைய கருவூரார் பிள்ளைதானே

தானென்ற சூடன்மலை யோன்றிலப்பா
தப்பாமற் சித்தர்பத்துப் பேர்தானுண்டு
வேனென்ற விராமேச்வறாரு மருகிற்றானும்
விதமான கந்தமா தனமுமுண்டு
வாவென்ற வசிட்டருட பிள்ளையப்பா
வல்லவர்க லன்பத்தி யொருபேராரும்
ஊனென்ற வுவருப்பு வதிலேயுண்டு
வுத்தமனே நாரதமா மலைஇர்கேலே

கேளப்பா நாரதமா மலைஇற்றானுங்
கெடியான சுனையொன்று வதற்குலப்பா
வாளப்பா குகைவாச லுல்லேசென்றால்
வல்லதொரு வெண்கலத்தார் கதவுமுண்டு
நாளப்பா நாரதரு மதிலேவாழ்வார்
நற்புதல்வ ரறுபத்து நால்வரோடும்
நீளப்பா வெள்ளைஊர் தனிலேகேளு
நிஜமான வுப்புவாடைக் காரமமே
காரமென்ற தென்மேற்கே பிரான்மலைதானொன்று
கனமான சித்தரதிர் பதினாருண்டு
வீரமென்ற வெம்மலைக்கு மேற்கேகேளு
விதமான கருமலைதா னோன்றுண்டப்பா
சாரமென் மலைமீதிர் சென்றாயானார்
சஞ்சீவி மெத்தவுண்டு சொல்லப்போகா
பாரமென்ற குகையொன்று வதற்குளப்பா
பாம்பாட்டி சித்தருமுன் டதனிர்பாரே

பார்க்குமென்ற பிள்ளைகளோ வைந்துபத்து
பரிவான கண்ணியொடு கமண்டலமும்வைத்து
ஏற்க்குமென்ற பாம்பாட்டி சித்தருந்தான்
என்னாளு மதிலிருப்பா ரின்னங்க்கேளு
கார்க்குமென்ற கமண்டளநீர் பாலாராகுங்
கன்னிஎலே குமாரகுந்தி மலைதானொன்று
தீர்க்குமென்ற திரவியங்கள் கோட்டயுண்டு
திறமான சித்தர்களும் பதினேழாமே

ஆமென்ற வதன்மேற்கே மலைதானொன்று
வாச்சரிய மெத்தவடா வரையக்கேளு
நாமென்ற சுனையெனக்கு வடுத்துக்கேளு
நல்லசெரு மலையதுதா நிற்க்குனிர்க்கும்
ஓமென்ற மலையொன்று சுன்னயுமொன்று
வுத்தமனே விக்ரங்க லநேகமுண்டு
வேமென்ற குகையொன்று கண்ணிற்கானும்
விளங்குகின்ற குகைக்குள்ளே சென்றுகானே

காணப்பா  வழுகண்ணிச் சித்தருண்டு
கமண்டலநீர்  தொடிஎலே வந்துபாயும்
தோணப்பா பிள்ளைக ளொன்பது பேருண்டு
துலங்கிடவே கன்னியொன்று வவர்பாலுண்டு
பூணப்பா வதன்அடிஈர் தெப்பமுண்டு
புகழான திரவியங்கள் அனேகமுண்டு





---------------------------------------------------------------------------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றி


ஓம் போக மகரிஷியே போற்றி

ஓம் போக முதல் சித்தரே போற்றி

ஓம் போக ஞான குருவே போற்றி போற்றி போற்றி


---------------------------------------------------------------------------------------------------------------------

Tuesday, July 27, 2010

போகர் ஜனன சாகரம் - சதுரகிரி பெருமை கூறல்-திரிகூடம் - பொதிகை -சிவகிரி - மேலும் பல ...பகுதி - 1

போகர் ஜனன சாகரம் - சதுரகிரி பெருமை கூறல்-திரிகூடம் - பொதிகை -சிவகிரி - மேலும் பல ... பகுதி - 1

பின் வரும் பாடலில் அய்யன் போகாப்பெருமான் சதுரகிரி மலை வளம் பற்றியும், திரிகூடம் , பொதிகை ,  சிவகிரி , மேலும் பல மலைகள்  , அங்கு எந்த எந்த சித்தர்கள் (அகத்தியர் , பாட்டனார்  திருமூலர் ,  ஐயா காலங்கி நாதர், கோரக்கர் மகரிஷி மேலும் பல .... ) ,  எந்த இடத்தில் இருக்கிறார்கள் என்றும் , எந்த எந்த மூலிகை எந்த இடத்தில் இருக்கிறது என்றும் , மேலும் இக்காலத்தில் பல மர்ம ஆசாமிகள் , பற்ப்பல பேறாசையுடன் தேடிக்கொண்டு இருக்கும் தைலக்கிணறு எங்கு எப்படி இருக்கிறது என்றும் , அதற்கு காவல் யார் என்றும் , தெளிவாக எடுத்து உரைத்து உள்ளார் .
உண்மையான ஞானம் வேண்டி இப்பாடலின் வழி சதுரகிரி மற்றும் பிற மலைகளுக்கு  சென்றால் கண்டிப்பாக அய்யன்     எம்பெருமான்  போக மஹா முனி முதல் சித்தர்  ஞானம் வழங்கி அருள் புறிவார்.

மேலும் சிறப்பு அவரின் இருப்பிடம் சதுரகிரியல் எது என்று தெளிவாக உரைத்து உள்ளார் . நான் கேள்விப்பட்டது வரை , தற்சமயம் போகர் குகை என்று சதுரகிரியல் நிறைய நபர்கள் செல்கின்றார்கள் , ஆனால் அது இல்லை என்பது விழயம் தெரிந்த நபர்களுக்கு இந்த பாடலை படித்த பின்பு புரியும் . இனி பாடலுக்கு செல்வோம் .
------------------------------------------------------------------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றி
ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி

ஓம் போகரே குருபிரம்மோ , போகரே குருவிஷ்ணு
போகரே குருதேவோ , போகரே மகேஸ்வரன்
போக குரு சாக்ஷாத் பரப்பிரமம் , தஸ்மை ஸ்ரீ போகர் குருவே நமஹா .

போகபெருமானின் பாத கமலங்களை அடியேன் சிரசின் மீது வைத்து அவர் பாடலை இங்கு வெளி இடுகிறேன் அணைத்து ஞானம் வேண்டி நிற்கும் மக்களுக்காகவும் வெளி  இடப்படுகிறது , பிழை , குறை மற்றும் நிறை எனதல்ல , அடியேன் அம்பு அர்ஜுனன் அய்யன் எம்பெருமான் மகரிஷி முதல் சித்தர் .
---------------------------------------------------------------------------------------------------------------------
அறைகின்றே நேன்பதொரு தோனிப்பாரை
யதன்வழியே யாற்றினுல்லே சென்றாயானால்
நிறைக்கிறேன் கோரக்கர் குண்டாவுண்டு
நிச்சயமா யதனருகே கைதானொன்று
மறைகிறே நின்றதொரு மறைபுப்போட்டு
மைந்தருடன் கோரக்க ரதிலேவாழ்வார்
உரைகின்றே னென்றுசொல்லி உயரசென்றா
ளுத்தமனே பெருந்துரட்டி இளைக்காடாமே .

ஆமென்ற காடகத்தின் நடுவேசென்றா
லங்கைமே சாதிக்காய் தோப்புண்டப்பா
சேமென்ற செம்பாறை நடுவேயுண்டாஞ்
சேரவே சுனைஉண்டு பச்சைவர்ணம்
நாமென்ற குகையொன்று தெற்கேபார்த்து
நாதக்க ளோடுசட்ட முனிஉமுண்டு
ஓமென்ற கோயிலுக்கு வடக்குமாகும்
உற்றதோறு தோப்பிலந் தோப்புக்கானே.

காணப்ப குளுராத தோப்பினுள்ளே
கருநீலச் சுனையொன்று நெல்லியுண்டு
பூணப்பா குகையுண்டு பெண்களுண்டு
புகழாக நாமுமங்கே இருப்போம்பாரு
தோணப்ப சஞ்சீவி மூலிஎல்லாந்
துலையாம லதிருக்குந் தோணாதப்பா
நீணப்பா லிங்கத்து மேற்கேகேளு
நிலையான குகையுண்டு கிழக்கிற்றானே.

தானென்ற சுனையதிலே குகைதானொன்று
தாசித்த கஞ்சாவு மிகுதியுண்டு
தேனென்ற சுந்தரா நந்தருண்டு
திறமான மைந்தர்களு மவேற்கேயுண்டு
கானென்ற பலாவடிர் கருப்பனுண்டு
கண்ணெதிரே யொருபோது சென்றாயானால்
மானென்ற பாறையொன்று குருகேயுண்டு
மகத்தான பாதைஇல் சுனைமூன்றாமே

ஆமடா குகையொன்று உள்ளேய்போகு
மாயிரம்பேர் சித்தரப்பா அதிலிருப்பார்
வாமடா காலாங்கி யையர்நின்று
வல்லவொரு கர்ற்பமெல்லா மங்கேதின்றார்
ஓமடா வெந்தனுக்குங் கற்ப்பமீந்தார்
உயர்ந்ததொரு தைலமெல்லா மங்கேஈந்தார்
நாமடா வதிலிருந்துச் சித்திபெற்று
நல்லதொரு தைலமெல்லா மூடினேனே

மூடினேன் கருப்பனயுங் காவல்வைத்து
முதலான பொருள்வேண்டு மென்றோர்கேல்லாம்
தேடினே நேன்றுசொல்லித் தெளிந்துவந்தால்
திறம்பார்த்து இருக்குமிடஞ் செப்புமென்றேன்
ஆடினே னட்டமா சித்தெல்லா
மவரவரு மங்கிருந்துச் சித்திபெற்றார்
கூடினே நாயெரம்பேர் தங்களோடே
குடிஇருந்த நர்சதுர கிரயுமாச்சே.

 ஆச்சுதடா சஞ்சீவி மலயுமாகு
மதில்வீசுங் காற்றுவிறு காதமட்டும்
வாச்சுதடா விதன்தெர்கே சார்வோன்றுண்டு
வல்லசித்த ரதிலுருப்ப ரைந்துபேர்தான்
சாச்சுதடா சிவகிரிக்கு வடமேற்காகச்
சாடான மலையொன்று வுயரவோமெத்த
நீச்சுதடா காடொன்று நிலையாக்காடு
நிசமான தெப்பமொன்று குகயுமொன்றே

ஓன்றான குகைக்குள்ளே சித்தர்நூறு
வுறவாக வதிலிருப்பா ருகந்துபாரு
கன்றான சவரிமலை தன்னிர்கேளு
கறப்பான சித்தர்கள் ஆயிரம் பேருண்டு
நன்றான பாறையொன்று மூலிஉண்டு
நலமான குகை ஒன்று கீழேபோகும்
அன்றான சுனயுமுண்டு நதியும்உண்டு
வதன்கிழக்கே மலையொன்று மறிந்துபாரே

பாரப்பா வம்மளைமேர் பதினைந்துபேர்கள்
பரிவான விலக்குமியைப் பூசித்தோர்கள்
வேறப்பா வவர்களுக்கோ சித்துமெத்த
விரைவாக வதிலிருந்து தெற்கேகேளு
ஆர்பா திரிகூட மலைதானொன்று
வாச்சரியங் திருமூல ரதிலேவாசம்
பேரப்பா பிள்ளைகளு மனேகமுண்டு
பிசகாதே வதின்தேற்கார் ற்றோரங்கலே.

கேளப்பா வுயர்ந்ததோறு மலைதானுண்டு
கெடியான கும்பமது போலேகாணும்
வாளப்பா வம்மலைக்கு மப்பார்கேளு
வல்லவதின் வடபுரமாய்க் கடிகைசென்றால்
நீளப்பா பாறையொன்று பூங்காவொன்று
நிசமாக வதனருகே தெப்பமுண்டு
கேளப்பா சொல்லவில்லை மங்கைதானுங்
குளித்தமஞ்சள் வாசமது வீசுந்தானே.

தானென்ற சுனையொன்றில் மஞ்சநீராத்
தானுரைந்து நிற்குமடா பாருபாரு
மானென்ற கங்கைதனைக் கண்டாயானால்
மருத்தொன்று நினையாமற் பாதம்வீழ்வாய்
ஏனென்று மென்னவித மென்றுங்கேட்ப்பார்
வெளியனுக்கு வகஸ்தியரருள் வேண்டுமென்பாய்
கோனென்ற சித்தர்குகை காட்டுவிப்பார்
குடியாக வாயிரம்பேர் தோணும்பாரே

பாரப்பா வவர்களைநீ கண்டாயானார்
பரிவுடனே பாதமதைப் பணிந்துநிர்ப்பாய்
ஆரப்பா வென்றுசொல்லி உன்னைக்கேட்பா
ரகஸ்தியரை காணவந்தே நென்றுகூறு
சாரப்பா வவர்நூலின் சார்பைஎன்பார்
சார்ந்திருதே நென்நூலை யொன்றுசொல்லி
காரப்பா கனகமென்ற பொருளைக்காட்டிக்
காசினிர் போயெரென்று செப்புவாரே

செப்பவா ரதைவேண்டே நெனமருதுச்
செயமான வகச்தியரைக் காணக்கேளு
ஓப்பியே கற்பமெல்லா முனக்குவீந்து
வுன்னுடைய தேகமதைச் சித்திசெய்து
அப்புவார் மௌனமதை தீட்சைசெய்து
அகஸ்தியற்கண் முன்பாகச் சேர்பாரப்பா
நப்புவார் சந்தோஷ மாகப்பூசி
நலமான சித்திகளு மருளுவாரே

அருளுவார் கவனமுதற் கபயமியாவு
மாச்சரிய மஷ்டசித்து முடநேயீவார்
பொருளதுவாய் முடிந்ததேல்லாங் கேட்டுக்கொள்ளு
போட்டிருக்கு மிடங்கேட்டு வந்துசேரு
தெருளுவார் சித்தறேல்லாங் கூடிவந்து
தேவியுட பூசைசெய்து மௌனங்கேட்ப்பார்
சருளுவா ருன்னையவர் சருவிவந்தார்
சாஷ்டாங்கம் பண்ணியே வந்துசேரே

இரண்டு அல்லது மூன்று பாகமாக இடுகை இட உள்ளேன் , மன்னிக்கவும் ஒரே இடுகையல் கொடுக்க முடியாமைக்கு.

நன்றி .

ஓம் போக பெருமானே போற்றி
ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி போற்றி போற்றி












Thursday, July 22, 2010

Siddhar Dharisana Vidhi

சித்தர் தரிசன விதி

உண்மையான சித்த பக்தியுடன் சித்த புருஷர்களின் தரிசனம் தேடி அலைவோருக்காக இங்கு பிரசுரிக்கப்டுகிறது .
----------------------------------------------------------------------------------------------------------------------


இந்த சித்தர் தரிசன விதி , பெருமான் கோரக்கர் சித்த மகரிஷி உலக மக்கள் அனைவருக்காகவும் அருளிச்செய்தது . உண்மையான ஞானம் வேண்டி சித்த தரிசனம் வேண்டி அவர்களை அழைத்தாள் , மேலும் பாடலில் சொன்ன படி முறையாக பின்பற்றினால் , சித்தர் தரிசனம் கிடைக்கபெற்று , அவர்கள் பெற்ற ஞானத்தை நாமும் அடையலாம் .


-------------------------------------------------------------------------------------------------------------------------


ஓம் ஸ்ரீ போகபெருமானே போற்றி



ஓம் ஸ்ரீ போக முதல் சித்தரே போற்றி



ஓம் ஸ்ரீ போக மஹா சித்தரே போற்றி



ஓம் ஸ்ரீ போகர் பாத மலர் போற்றி


-------------------------------------------------------------------------------------------------------------------------



ஓம் ஸ்ரீ கோரக்கர் சரனாய நமஸ்து