Wednesday, March 30, 2011

ஓதிமலை - 2

ஓதிமலை - 2


ஓம் குரு போகர் பாதகமல சரணாய நமஸ்து

ஓம் குரு போகர் சரணாய நமஸ்து

ஓம் சர்வம் குரு போகர் சரணாய நமஸ்து

-------------------------------------------------------


ஓம் போக பெருமானே போற்றி

ஓம் போக மகரிஷியே போற்றி

ஓம் போக முதல் சித்தரே போற்றி

ஓம் போக ஞான குருவே போற்றி

-------------------------------------------------------
 
 
ஓதிமலை புகைப்படங்கள் , நண்பர்கள் பார்வைக்காக ,




ஓதிமலை
  


ஓதி மலை அடிவாரம் அமைதியான விநாயகருடன் தொடங்குகிறது

ஓதி மலை அடிவாரம் , அமைதியான ஒரு நிசப்தமான சூழலுடன் அமைந்து உள்ளது , சுற்றிலும் ஆராவாரத்துக்கான எந்த அடையாளமும் இல்லை , அமைதி , நிசப்தம் இதை தவிர வேறு ஒன்றும் இல்லை , மனம் இங்கேயே அடங்கிவிட தொடங்கும் .

விநாயகர் கோவில் அருகில் சிமெண்ட் கல் , மணல் கொட்டி வைக்கப்பட்டு உள்ளது , வரும் பக்தகோடிகள் முடிந்த அளவு மேலே தூக்கிக்கொண்டு சென்றார்கள் என்றால் அவர்களின் கைங்கரியம் என்றென்றும் ஓதியப்பரின் பாதங்களில் நிலைத்து நிற்கும்


இடையில் வரும் விநாயகர் ஆலயம்

சுமார் எட்நூறு நெட்டான படிகள் ஏறிய பிறகு ஒரு  அமைதியான  வியாயகர்  கோயில் ஒன்று  வருகிறது , மிக அமைதியான இடம் , மனித சஞ்சாரத்தில் இருந்து சிறிது விலகி வந்ததை நன்றாகவே உணரலாம். இன்னும் கோயிலுக்கு உள்ளே சென்று அமர்ந்தால் , அப்பா வெளியில் மட்டும் அல்ல உள்ளேயும் ஒரு அமைதி ஏற்ப்படும் , பலவிதமான் தினசரி அலுவலக பிரச்சனைகள் , தோல்விகள் , வெற்றிகள் , பல குடும்ப பிரச்சனைகளில் இருக்கும் பொழுது எல்லாம் இங்கே சென்று அமர்ந்து வருவது மனதிற்கு பல முறை ரணத்திற்கு மருந்து போடுவது போன்று இதமாக இருந்து இருக்கிறது .

ஒருமுறை நண்பர் அனந்துவுடன் சென்ற பொழுது , நண்பரும் நானும் இந்த கோயிலில் இருந்து வலது புறம் செல்லும் பாதையில் சென்றால் அய்யன் தவம் செய்த குகை ஒன்று வரும் , அதை பார்க்க சென்ற எங்களுக்கு ஒரு உள்உணர்வு மேலும்  மரங்களின் ஊடே  முன்னேறி செல்ல தூண்டியது , நாங்களும் என்னதான் இருக்கிறது என்று பார்ப்போம் என்று சிறிது தூரம் நடந்தோம் , ஒரு இடத்தில் தானாக நிறுத்தவும் பட்டோம் , ஏதோ ஒன்று இதற்க்கு மேல் செல்லக்கூடாது என்பதை போல் உணர்ந்தோம்  , நின்ற இடத்தில் இடது புறம் பார்த்தால் ஒருவர் நன்றாக ஆசனத்தில் அமர்வது போன்ற ஒரு அளவான பாறை ஏறக்குறைய வட்ட வடிவமாக அழகாக இருந்தது , கிடைத்த வாய்ப்பை விடுவோமா என்ன? சிறிது நேரம் அதில் அமர்ந்து அமைதியாக உட்கார்ந்து இருந்து விட்டு திரும்பி செல்லலாம் என்று கிளம்பியபொழுது யாரோ பிரணவ மந்திரத்தை சொல்வது போல உணர்ந்தேன் , சரி நமக்குதான் பிரம்மை போல என்று அந்த இடத்தை விட்டு நகர்ந்து , திரும்பி விநாயகர் கோயிலுக்கு வந்து சேர்ந்தோம் , நண்பர் அனந்து சிறிது உன்னிப்பாக எதையோ கேட்டு விட்டு என்னை ஒரு மாதிரியாக பார்த்தார், திருபாவும் உன்னிப்பாக கேட்டு விட்டு , என்னிடம் திரும்பி , உங்களுக்கு என்ன கேட்துனு கேள்வி எழுப்பினார் , எனக்கு ஒன்றும் புரியவில்லை , ஒன்னும் காதுல விழலன்னு சொன்னேன் , நண்பர் சொன்னார் , யாரோ ஒருவர் ஓம் என்று முதலில் கூறுகிறார் , பின் நிறைய நபர்கள் ஓம் என்று கூறுகிறார்கள் , ஏதோ பிரணவ மந்திரத்தை வகுப்பறையில் பாடம் எடுப்பதை போன்று இருக்கிறது அந்த சப்தம் என்று சொன்னார் ,  ம்ம்ம்ம்   மனிதருக்கு  பல  விஷயங்களை  கேட்க   குடுத்து  வைத்து  இருக்கிறது என்று நினைத்துக்கொண்டு மேலே இன்னும் மீதம் உள்ள ஆயிரம் படிகளை ஏற ஆரம்பித்தோம்.

விநாயகர் கோவிலை அடுத்து ஏறும் நெட்டான படிகள்  

செல்லும் வழியில்
மேலே சென்றவுடன் வரும் நுழைவாயில்

நுழைவாயிலை  அடைந்தவுடன் இருக்கும் பிள்ளையார்

உள்ளே நுழைந்தவுடன் இருக்கும் பரமேஸ்வரி தாய்


கோவிலின் வெளி பிரகாரம்

இடும்பர் ஆலயம்

ஆலய மணி

ஆதி சித்தரின் வாகனம் , மயில்

ஓதியப்பர்

ஐந்து முகம் எட்டு கரங்களுடன் அருள் பாலிக்கும் ஓதியப்பர்

சின்ன பழனி என்று உணர்த்திய முகங்கள்

அய்யன் எம்பெருமான் குரு முதல் சித்தர் போக மகரிஷி அமர்ந்து தவம் செய்த பாறை

பெயர் தான் பாறை ஆனால் பாறைக்கான எந்த அறிகுறியும் இல்லை , பூவை போன்று மென்மையான  ஒன்று

வெளி பிரகாரத்தில் உள்ள ஒரு ஷக்தி வாய்ந்த இடம்

ஐயனின் ஆசனத்தில் இருந்து கோயில் கோபுரம்

ஐயனின் ஆசனத்தில் இருந்து எதிரில்

அன்று நடந்த இன்னும் சில நிகழ்சிகளுடன் அடுத்த இடுகயியல் சந்திப்போம் .

-------------------------------------------------------------------
ஓம் குரு போகர் பாதகமல சரணாய நமஸ்து


ஓம் குரு போகர் சரணாய நமஸ்து

ஓம் சர்வம் குரு போகர் சரணாய நமஸ்து
------------------------------------------------------------------

Tuesday, March 29, 2011

ஓதிமலை

ஓதிமலை-1

ஓம் குரு போகர் பாதகமல சரணாய நமஸ்து 

ஓம் குரு போகர் சரணாய நமஸ்து
-------------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றி 
 ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி
-------------------------------------------------------
 


ஓதியப்பர்

ஓதிமலை, புளியம்பட்டிக்கு எட்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்து உள்ள ஒரு அழகான அதி அற்ப்புதமான மலை ,, குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பதற்கினங்க , அங்கு ஆதி சித்தர் முருக பெருமானின் ஆலயம் அமைந்து உள்ளது .
இங்கு இருக்கும் முருகருக்கு ஆறு தலைக்கு பதிலாக ஐந்து தலையும் , எட்டு கரங்களும் அமைந்து உள்ளது சிறப்பு , காரணம்  முருகர் எம்பெருமான் குரு போக மகரிஷிக்கு வழி காட்ட சென்றதின் விளைவு , ஐந்து தலையுடன் இன்று அமர்ந்து கொண்டு அருள்பாளித்துக்கொண்டு இருக்கின்றார் .
மேலும் ஆதி சித்தர் முருகர் இம்மலைக்கு பின்னால் இரும்பறை என்னும் இடத்தில் பிரம்மாவை சிறைவைத்ததாகவும் , இந்த மலையில் அமர்ந்துகொண்டு சிவ பெருமானுக்கு முருகர் வேதங்களை உபதேசித்ததாகவும் புராணங்கள் உரைக்கிறது . 
அய்யன் குரு போக மகரிஷி இங்கு நெடுங்காலம் தபசில் இருந்துகொண்டும் , உலக நன்மைக்காக யாகங்களை செய்து கொண்டும் இருந்திருக்கிறார் , இதைக்கண்ட ஆதி சித்தர் அவரை பழனி மலைக்கு சென்று தன் உருவை நவபாஷான சிலையில் வடித்து உலக மக்களின் பிணி போக்க பணித்து உள்ளார் , ஐயனும் மலையில் இருந்து இறங்கி பழனி நோக்கி சென்று உள்ளார் , சிறிது தூரம் சென்ற ஐயனுக்கு வழி தெரியாமல் தடுமாற்றம் ஏற்பட்டு உள்ளது , உடனே என்ன முருகா நீ தானே என்னை உன் பணி செய்ய பணித்தாய் , வழி தெரிய வில்லயே , என்று கூறி உள்ளார் , கூப்பிட்ட குரலுக்கு வருபவர் அல்லவா நம் முருகப்பெருமான் ,ஓதி மலையில் இருந்து ஒரு முகமுடனும் , நான்கு கரங்களுடனும் , தற்போது குமாரபாளையம் என்று அழைக்கப்படும் இடத்திற்கு வந்து பழனிக்கு வழி காட்டி உள்ளார் . தற்போது குமாரபாளையத்தில் ஒரு முகம் நான்கு கரங்களுடனும் , ஓதி மலையில் ஐந்து முகம் , எட்டு கரங்களுடனும் ஆதி சித்தர் அமர்ந்து இருக்கிறார் .
அடியேன் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக அடிக்கடி எப்பொழுது எல்லாம் ஓதிஅப்பர் அழைக்கிறாரோ அப்பொழுது எல்லாம் சென்று கொண்டு இருக்கின்றேன் , இன்று ஒரு புது விதமான மெய்சிலிர்க்கும் அனுபவத்தை அய்யன் கண் காண மனமுவந்து அருளினார் . 
மலை ஏறும் வழியில் அமைந்து இருக்கும் சுயம்பு மகாலிங்கம் 
அதை எப்படி விவரிப்பது என்றே தெரியவில்லை , இன்று காலை சுமார் ஏழு மணிக்கு ஓதிமலை செல்ல புறப்பட்டு எட்டு முப்பதிற்கு மலை ஏற ஆரம்பித்தேன் , ஆயரத்து எட்நூறு படிகள் , நாற்பத்தி ஐந்து நிமிடத்தில் ஏறி கருவறையை சென்று அடைந்தேன் , உள்ளே ஐயர் மந்திர உச்சாடனம் செய்து கொண்டும் , மலர்களை ஓதியப்பரின் பாதங்களில் சமர்ப்பித்துக்கொண்டும் இருந்தார் , இரு பூசாரிகள் , நான் மற்றும் ஒருவர் , வெறும் நான்கு பேர் தான் அங்கு அமர்ந்து கொண்டு இருந்தோம் , எனக்கு முன்பு அங்கு அமர்ந்துகொண்டு இருந்தவர் விளக்குக்கு திரியை போட்டுக்கொண்டு இருந்தார் , நான் அமைதியாக உட்கார்ந்து ஓதியப்பரை பார்த்துக்கொண்டு மனதில் அய்யன் எம்பெருமான் குரு போகரின் நாமத்தை ஜபித்துக்கொண்டு இருந்தேன் .
சட்டென்று  பார்த்தால் முருகர் புலித்தோல் தரித்து சிவ பெருமானாக காட்சி அளித்துக்கொண்டு இருந்தார் , எனக்கு தலை சுற்றி மயக்கமே வருவது போல் ஆகிவிட்டது , சற்று நிதானித்து திரும்பவும் பார்த்தல் ஓதியப்பர் மெல்ல கண் திறந்து என்னைபார்த்து ஏதோ பேசிக்கொண்டு இருக்கிறார் , ஆனால் இந்த மரமண்டைக்குத்தான் புரியவில்லை என்ன ஓதியப்பர் சொல்கிறார் என்று , கீழே உள்ள வீடியோவை கூர்ந்து கவனிக்கவும் , ஓதியப்பர் கண் திறப்பதும் , பேசுவதும் நன்றாகவே தெரியும் , இது எந்த வித கணிப்பொறி  வேலைப்பாடும் இல்லை , சோதித்து பார்த்தால் நன்றாகவே தெரியும் .
 அடுத்த இடுகையில் ஓதி மலையில் ஏற்பட்ட மற்ற அனுபவங்களையும் , ஓதி மலையில் இருக்கும் அய்யன் குரு போகர் அமர்ந்து தவம் செய்த பாறை மற்றும் ஓதிமலை அனைத்து புகைப்படங்களும் இடுகிறேன் , நேரம் போதாமையால் இந்த முறை முடியவில்லை மன்னிக்கவும் .
ஓதிமலை செல்ல , கோயபுத்தூர் - அன்னூர் - ஓதிமலை , பஸ்கள் குறைவாக செல்லக்கூடிய  இடம்  , அல்லது அவினாசி - புளியம்பட்டி - ஓதிமலை . ஏறும் வழியில் தண்ணீர் இல்லை , அதனால் தண்ணீரை எடுத்துக்கொண்டு ஏறுவது நலம் .
மற்ற கோயில்களை போல கூட்டம் அதிகமாக இருக்காது , நன்றாகவே அமைதியான இடமாக இருக்கும் , இரவில் இங்கு தங்க முடியாது , வேண்டுமானால் அதிகாலை சென்று இரவு சுமார் எட்டு மணிக்கு திரும்பி விடலாம் .  


ஓம் குரு போகர் பாதகமல சரணாய நமஸ்து 

ஓம் குரு போகர் சரணாய நமஸ்து
-------------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றி 
 ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி
-------------------------------------------------------