Friday, October 15, 2010

ஈஸ்வரனுக்கு உபதேசித்தது என்ன ?

ஈஸ்வரனுக்கு உபதேசித்தது என்ன ?


--------------------------------------------------

ஓம் போக பெருமானே போற்றி
ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி
-------------------------------------------------------
ஓம் போகரே குருபிரம்மோ , போகரே குருவிஷ்ணு
போகரே குருதேவோ , போகரே மகேஸ்வரன்
போக குரு சாக்ஷாத் பரப்பிரமம் , தஸ்மை ஸ்ரீ போகர் குருவே நமஹா .
-----------------------------------------------------------------------------------------------

ஈஸ்வரனுக்கு உபதேசித்தது என்ன ?

ருத்ர தத்துவமாகிய பிரேரக நிலையான காரண தத்துவ முடிவான ஈஸ்வர த்த்துவதிநியர்க்கை ஞானம் ஏறிக் கிரியை குறைந்து இருப்பதால் , கிரியா காரண பூதமாயும் ஞான காரண  அமிசமாயும் விளங்கும் பிரணவமாகிய உண்மை நிறைவான கிரியை அற்ற நிர்விஷய அனுபவம் ஈஸ்வர தத்துவத்திற்கு நியதி செய்வது ? சுத்த விவேக தத்துவ அதிஷ்டாதாவான சுப்பிரமணியம் அன்றி தோன்றாது . இது பற்றி உபதேசம் செய்தார் என ஆயிற்று . 


--------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றி
ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி
-------------------------------------------------------


பிரம்மாவை சிறையில் வைத்தது என்பது என்ன ?

பிரம்மாவை சிறையில் வைத்தது என்பது என்ன ?






--------------------------------------------------

ஓம் போக பெருமானே போற்றி

ஓம் போக மகரிஷியே போற்றி

ஓம் போக முதல் சித்தரே போற்றி

ஓம் போக ஞான குருவே போற்றி
-------------------------------------------------------
ஓம் போகரே குருபிரம்மோ , போகரே குருவிஷ்ணு

போகரே குருதேவோ , போகரே மகேஸ்வரன்

போக குரு சாக்ஷாத் பரப்பிரமம் , தஸ்மை ஸ்ரீ போகர் குருவே நமஹா .
-----------------------------------------------------------------------------------------------

பிரம்மாவை சிறையில் வைத்தது என்பது என்ன ?

சுத்த மன சங்கல்ப சிருஷ்டித் தொழிலை உடைய ப்ரம்மாவாகிய மனத்தைக் கிரியையில் பிரவேசிக்க ஒட்டாமல் , சுத்த விளக்க விவேக நிறைவாயுள்ள சுப்ரமணிய தத்துவத்தால் சர்வ பிண்ட விஷயங்களாகிய தோன்றல் , வளர்த்தல் , குற்றம் நீக்கல் , ஒன்றினிடத்தில் மலைவடைதல் , தெளிதல் முதலிய கிருத்தியங்களை விவேக முன்னிலையில் நடத்துங்கால் சலிப்பறப் பந்தித்து இருப்பதே சிறை இட்டது .

--------------------------------------------------

ஓம் போக பெருமானே போற்றி
ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி
-------------------------------------------------------

Thursday, October 14, 2010

முருகரின் அறுபடை வீடு என்பது என்ன ?

                                      முருகரின் அறுபடை வீடு என்பது என்ன ?







--------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றி
ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி
-------------------------------------------------------

ஓம் போகரே குருபிரம்மோ , போகரே குருவிஷ்ணு
போகரே குருதேவோ , போகரே மகேஸ்வரன்
போக குரு சாக்ஷாத் பரப்பிரமம் , தஸ்மை ஸ்ரீ போகர் குருவே நமஹா .
-----------------------------------------------------------------------------------------------
முருகரின் அறுபடை வீடு என்பது என்ன?

அடங்கி இருக்குமிடம் . அடங்கி இருக்கும் ஸ்தானங்கலே இயற்கை விளக்கம் தங்குமிடங்களாகும் , இவற்றிற்கு ஊர் ஆறு ஆவது ஏன்?
ஏரகமென்பது அழகு பொருந்திய உள்ளமென்னும் இடம் . 






திருவாவினன்குடி என்பது திரு - ஆ - இன்ன - குடி . திரு - இலக்குமியாகிய சந்தோஷமும் , ஆ - பசுவாகிய விளக்கமென்னும் சீவனும் , இனன் - சூரியனாகிய புத்தியும் , ஒன்று கூடி விளங்கும் ஆன்ம அறிவின் சுத்த காரிய இடம் .


 பழமுதிர்சோலை என்பது , இந்திரிய கரண சீவ முதலிய அனுபவப்பழங்கலாகிய பிரயோஜன இன்பங்கள் நீங்கிக் குறைவற்ற அறிவாய் விளங்கும் இடம் .



திருசீரலைவாய் / திருச்செந்தில் / செயந்திபுரம் என்பன சுத்தமனத்தின் முகத்தில் விஷயக்கடலின் அவாவாகிய அலை அடித்துக்கொண்டு இருக்கும் இடமாகிய கரை , செந்துக்களினது இருதய ஸ்தானமாகிய மனம் அக்ஞான சூரனை நிவர்த்தித்து சந்தோஷகரத்தை பெற்ற பதி மனத்தின் விளக்கம் .



திருப்பரங்குன்றம் என்பது அசைவிலாத ஒன்றான விளக்கத்தை உடைய விவேக உல்லாச இன்ப நிறைவு .

குன்றுதோறாடல் என்பது மலைதோறாடல் , மலை என்பது அலைவில்லாத உணர்ச்சிக்கு  முதற் காரணமாய் உள்ள துரிய நன்னிலை , இத்துரியம் , பரதுரியம் , சுத்த துரியம் , குருதுரியம் , சிவதுரியம் , சத்திதுரியம் முதலிய துரியமலைகள் அனுபவகாட்சியில்
அனந்தம் உண்டு .

மேற்குறிய அனுபவக்காட்சிகளுக்கு தேகத்தில் இடம் எவை ? 

கோசத்தின் அடி , தொப்புளின் கீழ் , தொப்புள் , வயற்றில் தொப்புளுக்கு மேல் , மார்புக்கு கீழ் , மார்பு நெஞ்சு ஆக ஆறு .




--------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றி
ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி
-----------------------------------------------------

Tuesday, October 12, 2010

மயிலின் காலின் கீழும் வாயிலும் பாம்பு இருப்பது என்ன ?

யிலின் காலின் கீழும் வாயிலும் பாம்பு இருப்பது என்ன ?





--------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றி
ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி
-------------------------------------------------------

ஓம் போகரே குருபிரம்மோ , போகரே குருவிஷ்ணு
போகரே குருதேவோ , போகரே மகேஸ்வரன்
போக குரு சாக்ஷாத் பரப்பிரமம் , தஸ்மை ஸ்ரீ போகர் குருவே நமஹா .
-----------------------------------------------------------------------------------------------
மயிலின் காலின் கீழும் வாயிலும் பாம்பு இருப்பது என்ன ? 

விசித்திர மாயையின் காரி உருவமான அகங்காரம் தோன்றி வெளிப்படுங்கால் , மூலாங்காரத்திலும் அதிகரிப்பிலும் பிராணவாயு என்னும் பாம்பானது கீழும் மேலும் உண்டாயினும் , அகங்காரத்தின் முகப்பாகிய மயில் வாய் மூலமாய் பிராண வாயுவினது வேகத்தை விழுங்கிக்கொண்டிருப்பது இயற்கைதான்.

  

--------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றி
ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி
------------------------------------------------------

ஒரு முகம் , மூன்று முகம் , நான்கு முகம் , ஆறுமுகம் ஆன காரணம்

ஒரு முகம் , மூன்று முகம் , நான்கு முகம் , ஆறுமுகம் ஆன காரணம் 


--------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றி
ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி
-------------------------------------------------------

ஓம் போகரே குருபிரம்மோ , போகரே குருவிஷ்ணு
போகரே குருதேவோ , போகரே மகேஸ்வரன்
போக குரு சாக்ஷாத் பரப்பிரமம் , தஸ்மை ஸ்ரீ போகர் குருவே நமஹா .
-----------------------------------------------------------------------------------------------




சுப்பிரமணியம் ஒரு முகம் , மூன்று முகம் , நான்கு முகம் , ஆறு முகம் ஆனதற்கான காரணம் , ஒன்றும் இரண்டும் இல்லாத ஒப்பற்ற பரப்ப்ரம்ம சொரூபம் நம் பொருட்டுக் குழு உக்குறியாய் , பாவனைக்கு ஒன்றென்று நிச்சைக்கும் , பரகாரண நிமித்தம் ஆகிய அறிவுருவமே ஒருமுகமென்று ஞானிகள் சொல்லுவார்கள் .



சுத்தராஜசம் , சுத்ததாமசம் , சுத்த சாத்வீகமாகிய , மூன்று குணங்களின் விளக்கமே மூன்று முகம் .


பசு மனம் , சுத்த மனம் , உள் மனம் , சங்கலித மனம் , என்னும் நான்கு தத்துவங்களின் கூட்ட விளக்கமே நான்கு முகம் .



சுத்த அறிவின் மூலம் ஒளி அறிவின் மூலம் , சுவை அறிவின் மூலம் , பரிச அறிவின் மூலம் , வாசனை அறிவின் மூலம் , ஆத்மா அறிவின் மூலம் என்னும் ஆறு தத்துவங்களின் கூட்டறிவின் மூலகாரணப் பிரகாச விளக்கமே ஆறுமுகம் .  



--------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றி
ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி
-------------------------------------------------------

சுப்ரமணியம் என்பது என்ன ?



சுப்ரமணியம் என்பது என்ன ?









-------------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றி
ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி
-------------------------------------------------------

ஓம் போகரே குருபிரம்மோ , போகரே குருவிஷ்ணு
போகரே குருதேவோ , போகரே மகேஸ்வரன்
போக குரு சாக்ஷாத் பரப்பிரமம் , தஸ்மை ஸ்ரீ போகர் குருவே நமஹா .
-----------------------------------------------------------------------------------------------



சுப்பிரமணியம் என்பது என்ன ? 


நமது புருவ மத்தியில் ஆறு பட்டையாய் உருட்சியுள்ள   ஒரு மணி பிரகாசம் பொருந்தி இருக்கின்றது , இந்த ஜோதி மணியை ஷன்முகமென்று பெரியோர்கள் சொல்லுவார்கள் 


.இதன்றி , நமது மூலாதாரத்திற்கு  மேல் மூன்றிடந்தாண்டி விசுத்தியாகிய இருதய ஸ்தானத்தில் இடது புறத்தில் ஆறு தலையுடைய ஒரு நாடி இருக்கின்றது , இதைச் சுப்பிரமணியம் என்று சொல்லுவார்கள் .இந்த தேகத்திலுள்ள ஆறறிவும் ஒருங்கே சேர்ந்த சுத்த விவேக மென்பதையும் சண்முகம் என்பார்கள் , ஆயினும் சர்வ தத்துவங்கிளனது அந்தத்தில் உண்மணிக்கப்பால் சாந்த நிறைவாய் உள்ள ஆறு தலையாகிய சுத்த ஆன்ம அறிவான உள்ளமே சுப்பிரமணியம் .

ஆறு ஜோதியாயும் , ஆறு அறிவாயும் , ஆறு தலை உடையதாயும் இருப்பதால் முகம் ஆறு . கால் இரண்டென்பது தோன்றும் அறிவு , தோற்றுவிக்கும் அறிவு என்னும் இரண்டறிவாகிய விஷய உணர்ச்சியும் , நிர் விஷய உணர்ச்சியும் ஆகும் , கை பன்னிரெண்டு  என்பது ஆறு ஆதாரங்களில் உள்ள பிரகாசம் , அப்ப்ரகாசமாகிய பன்னிரெண்டாம்.

தசாயுதம் , அபய வரதம் என்பது என்பவை யாவை எனில் வஜ்ஜிரம் என்பது தீக்ஷன்யா உணர்ச்சி , வேல் என்பது சக்தி , அருள் , அறிவு . மணி என்பது ஆன்ம விளக்கமாகிய நாதம் .த்வஜம் என்பது கீர்த்தி . சரசிஜம் என்பது தயவு . குக்குடம் என்பது மாச்சரியம் இல்லாத நிறைவு , பராகம் என்பது பாச நீக்கம் , தண்டம் என்பது வைராக்கிய அறிவு , பாணம் என்பது அன்பு , அபயம் என்பது சமாதான உணர்ச்சி வரதம் என்பது நிராபாரமாகிய ஆதரவென்னும் சகிப்பு , கடப்ப மாலை என்பது சர்வ தத்துவ கண்டனம் , பல வர்ணமுள்ளதும் , விசித்திர வடிவமானதும் , மறதி முதலிய 
குணங்களுக்கு காரணமானதும் ,, மாயைக்கு இருப்பிடமாயுள்ளதும் ஆன மூலப்ரகிருதியே மயில் என்பது .

மயில் மேல் சுவாமி எறிக்கொண்டிருத்தல் முதலியவற்றிற்கு காரணம் என்னவென்றால் பிண்டாண்டமாகிய இந்த தேகத்திலும் அண்டத்திலும் மூலக்ஞான காரணமாயுள்ள கேவலமாகிய பிரகிருதி மாயை இன்  அசுத்தகேவலமாகிய  அசுத்தாசுத்த மகா அகங்காரம் என்னும் ராக்ஷச அம்சமான சூரதத்துவம் அதின் சேதரமான மூவகைத் தத்துவத்தோடு , அக்ஞான திசையல் , ஆன்ம அறிவையும் , பிண்ட விளக்கமான தேவர்களயும் , விஷய விளக்கமான இந்திரியங்களையும் , நாடி விளக்கமான யந்திரங்களையும் , பிராண விளக்கமாகிய உயீர்யையும் , விழுங்கித் தன்னரசு செலுத்தும் .அந்த சூர தத்துவத்தை வதைக்கும் , தத்துவம் மகாமாயையாகிய மாமரமாயும் , மாச்சரியமாகிய கோழியையும் , விசித்திர மாயை என்னும் மயில் ஆகவும் மகாமதமாகிய யானை முகமாயும் , அதிக்ரோதமாகிய சிங்க முகமாயும் விளங்கும் .

சர்வ தத்துவங்களயும் தன்வசமாக்கி , அகங்கார கொடி கட்டி , அக்ஞான நாடகம் செய்த தத்துவ அகங்கரிப்பை அடக்கி , பதி , பசு , பாசம் , அநாதிநித்யம் என்னும் சித்தாந்தத்தை விளங்கிக் காட்டுவதற்காக , மாச்சரிய குக்குடத்தை போதமாகிய  கையால் அடக்கியும் , விசித்திர மாயையாகிய மயிலைக் கீழ்படுத்தி மேலிருந்து அடக்கியும் , ஆபாச தத்துவங்களைச் சம்மரித்தும் , சுத்த விஷய புவனமாகிய தேவலோகத்தை நிலை பெறச் செய்தும் இந்தரபதியான ரூபேந்த்ரனுடைய பெண்ணாகிய தத்துவ என்னும் தெய்வானையை இடப்பாலமைத்தும் , இந்த்ரியங்கள் ஆகிய வேடர்களின் கண்ணிற் புலப்பட்டமான சமென்னும் மானினது கற்பத்திலுண்டான வள்ளியாகிய சுத்த மனதை வலத்தில் வைத்தும் , நவ தத்துவ காரணமாகிய , நவவைராக தத்துவமாகிய வீரர்களைச் சமீபத்திலிருத்தியும் , சகல கேவலங்களுக்கும் நினைப்பு மறப்புக்கும் இடையில் விவேக வடிவாயும் பாதம் முதல் நாபி வரையில் உஷ்ண உருவாயும் , நாபி முதல் கண்டம் வரையில் ஆதார நாடி உருவாயும் கண்டம் முதல் புருவமத்தி வரையில் மணி உருவாயும் உச்சியில் ஓளி உருவாயும் புத்தியில் சுத்த அறிவாயும் , அனுபவத்தில் நித்தியமாயும் , எங்கும் நிறைவாயும் , கோணத்தில் ஆறாயும் , ஜாதியில் ஆறின் கூட்டமாயும் விளங்குகின்ற உண்மைக்கடவுளே சுப்ரமணியம் .