Tuesday, December 14, 2010

சித்தர்களின் சமாதி மற்றும் இருப்பிடம் விபரம் - போகர் சித்தர்

சித்தர்களின் சமாதி மற்றும் இருப்பிடம் விபரம் - போகர் சித்தர் 






-------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றி
ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி
-------------------------------------------------------
ஓம் போகரே குருபிரம்மோ , போகரே குருவிஷ்ணு
போகரே குருதேவோ , போகரே மகேஸ்வரன்
போக குரு சாக்ஷாத் பரப்பிரமம் , தஸ்மை ஸ்ரீ போகர் குருவே நமஹா .
-----------------------------------------------------------------------------------------------


ஆதி என்ற சிதம்பரமே திருமூலராச்சு
அவருடனே பதினேன்பேர் அதிலே ஆச்சு 
சோதி என்ற காலாங்கி நாதர் தானும் 
துலங்குகின்ற காஞ்சிபுரம் தனிலேயாகும் 
நீதியென்ற  நீதிஎல்லாம் வழுவராமல் 
நீநிலத்திற் பதங்கணிச் சயமாய் செய்வார் 
வேதி என்ற கும்ப முனி கும்பகோணம் 
விளங்கிநின்றா எந்நாளும் அந்த ஊரே 


ஊரான மயிற்றேச மச்சமுனியே ஆகும் 
முற்றதொரு சீர்காழி சட்டை முனியே ஆகும் 
பேரான வழுகண்ணிச் சித்தர்தானும் 
பெரிதான நாகப்பட்டணமே ஆச்சு 
வேரான விடைமருதூர் இடைக்காடராகும் 
விளங்கிநின்ற மதுரை சுந்தரருமாச்சு 
சீரான கமலமுனி அதுவே ஆச்சு 
சிறந்த துவாரகயிற் பாம்பாட்டியுமாமே 


ஆமென்ற புண்ணாக்கு ஈசர்தாமும் 
அழகான நாங்கனாசேரியில் ஆச்சு 
வாமென்ற கொங்கணர் தானிருந்தமூலம் 
வளர்ந்த திருக்கனங்குடியல் ஆகும் 
நாமென்ற நாதனாரிருந்த மூலம் 
நலமான விடைமருதூர் நாட்டமாச்சு 
ஓமென்ற வைத்தீசுரன் தனில் வசிட்ட 
உன்னதமா யுகந்துநின்ற மூலந்தானே 


கானென்ற  வால்மீகர் திருவைதனிலிருந்தார்
கருவூரர் காள அத்திரயுமாச்சு 
தேனென்ற காசியிலே விஸ்வாமித்ரர் 
திருவையார் தனில் அகப்பை சித்தராகும் 
வானென்ற கடுவெளிச் சித்தர்தானும் 
வளமான திருக்காஞ்சிப் பதியில் ஆச்சு 
வேனென்ற புலத்தியர் தான் இருந்த மூலம் 
விதமான வாவுடையார் கோவிலாச்சு


ஆச்சென்ற கோரக்கர் கழுக்குன்ற மூல 
மதிசருத் திராச்த்தலத்திர் காசிபருமாச்சு 
நீச்சென்ற வருணகிரி தன்னிர்கேளு 
நிஜமான கெளதமரும் அதில் இருந்தார் 
காச்சென்ற கருவைநல்லூர் மார்க்கண்டர்தான் 
கருவான திரிகூடல் மூலராச்சே 
வாச்சென்ற பாவ விநாசந்தன்னில்
வளமான புலத்தியர் தம் மூலமாமே 


ஆமென்ற சுந்தர காலாங்கி நாதர் 
அதில் இருந்தார் திருக்கடவூர் அவர்தானாகும் 
போமென்ற திருப்பவனம் அவர் தான் ஆச்சு 
புகழ்ந்த திருக்கோவலூர் அவருமாச்சு 
நாமென்ற ஆடுதுறை விஸ்வாமித்ரர் 
நல்லதிரு வாலமுமே பாம்பாட்டி சித்தர் 
வாமென்ற திருப்பனந்தாள் வரரிஷியுமாகும் 
வளர் திரு பெருங்காவூர் தான் கன்னி சித்தர்தானே 


தானென்ற வானைக்காவ லதிலேகேளு 
சமஸ்த்தான மச்சமுனி  சமாதியாகும் 
தேனென்ற தென்மலையில் வரதனாகும் 
சேரைஎனும் சேத்தூர் மார்க்கண்டராச்சு 
வானென்ற  மலையில் நாடு நெடுன்குன்றூரில் 
மகத்தான திருமூலர் வாசமாச்சு 
நானென்ற மேலசிதம்பரத்தில் 
நாடி நின்ற திருமூலர் நாட்டம் தானே 


நாட்டமுடன் திருக்கோணம் தன்னிலே தான் 
நாட்டியதோர் கோரக்கர் அதன் மூலமாச்சு 
தேட்டமுடன் கொங்கணா தனிக்கோடி துறையதாகும் 
சிறந்த திருவாஞ்சியிர் கமலமுநியாகும் 
ஆட்டமுடன் பதினெட்டு சித்தரெல்லாம் 
அஷ்டாங்க யோகத்தால் எட்டு எட்டாகி 
கூட்டமுடன் ஒவ்வொருவர் சித்துக்காட்டி 
குவலயத்தில் லிங்கமதாய் முளைத்தார் பாரே .


பாரப்பா இப்படியே சித்தரெல்லாம் 
பலவிதமாய் அகண்ட பூமியெல்லாம் 
ஆரப்பா அங்குமிங்கும் நிறைந்து நின்றார் 
அவரவர்கள் பிள்ளைகளும் அப்படியே நின்றார் 
சீரப்பா சித்தருட மூலம் காண 
செகத்திலே எவர் அறியப் போறார் ஐயா 
நேரப்பா நாமறிந்த சிறிது சொன்னோம் 
நிலைக்காட்ட சித்தர்களும் மறைத்திட்டாரே 
மறைத்திட்டார் நதிமூலம் ரிஷிமூலமெல்லாம்
வகை விபரமாகவும் கான் சொல்லி வைத்தேன் 
நிறைத்திட்டேன் யானிருக்கும் மூலம்சொல்வேன் 
நிலையாரும் வரையாதுந்த் தலங்களாகி
அறைந்திட்டா ஆவினன்குடியும் பரங்குன்றமப்பா 
அழகான திருத்தணிகை கழுக்குன்றோடு 
பரைத்திட்ட வேரகமும் செந்தூரமாகும்
பரிவான தலம் ஆறும் நாமதாமே .


ஆமென்ற தளங்கள் வழி இன்னம்சொல்வேன் 
அப்பனே கதிர்காமம் சுப்பிரமணியம் 
ஓமென்ற மரவருட கோவிலொன்று 
உருவான வேள்மலை வெள்ளியுராம் 
நாமென்ற சாமிமலை வேலூராகும்
நலமான சோலை மலை தென்னிலஞ்சியாகும் 
வாமென்ற காஞ்சிபுரம் முதலாய் உள்ள 
மலைதோறும் இருந்து விளையாடினேனே.




முடிந்த அளவுக்கு நாம் பெயர் அறிந்த சித்தர்களின் இருப்பிடமும் , சமாதிகளும் உள்ள இடங்கள் , மற்றும் எப்படி ஒரே சித்தர் பல இடங்களில் சமாதியாகி உள்ளார்கள் என்றும் , லிங்கங்களின் தோன்றல்கள் பற்றியும் மிக தெளிவாக அய்யன் எம்பெருமான் போக மகரிஷி மக்கள் அறிய உறைத்து உள்ளார் , மேலும் அவர் இருந்த இடங்களையும் கூறியுள்ளார் .


அறிந்து பயன் பெறவும் .


-------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றி
ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி
-------------------------------------------------------
ஓம் போகரே குருபிரம்மோ , போகரே குருவிஷ்ணு
போகரே குருதேவோ , போகரே மகேஸ்வரன்
போக குரு சாக்ஷாத் பரப்பிரமம் , தஸ்மை ஸ்ரீ போகர் குருவே நமஹா .
-----------------------------------------------------------------------------------------------


சிவாலயம் உருவான கதை - போகர் சித்தர்

சிவாலயம் உருவான  கதை - போகர் சித்தர் 





-------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றி
ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி
-------------------------------------------------------
ஓம் போகரே குருபிரம்மோ , போகரே குருவிஷ்ணு
போகரே குருதேவோ , போகரே மகேஸ்வரன்
போக குரு சாக்ஷாத் பரப்பிரமம் , தஸ்மை ஸ்ரீ போகர் குருவே நமஹா .
-----------------------------------------------------------------------------------------------


ஆடினார் வொவ்வொரு அறுபத்தினாலு 
ஆனதொரு சித்தெல்லாம் ஆடிஆடி 
நாடினான் பதினேழு சித்தருந்தான் 
ஞாலம் அதிற் சிவத்தலங்கள் அநேகம் ஆனார் 
நாடியதோர் தலத்தில் அகஸ்தியரும் நாமும் 
நாமுருவாய் கன்னிதிசை அதனில் வாழ்வோம் 
நீடியதோர் மூலர் சமாதியாய் நின்று 
நிலைத்தனார் சிவாலயம் என்று உலகில் ஆச்சே.




சீர் பிரித்து கொடுக்கப்பட்டு உள்ளது .


கண்டிப்பாக சிவாலயம் பற்றிய உண்மை அறிவு கிடைத்து இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது .


உணர்ந்தவர்கள் உடனே அருகில் உள்ள சிவாலயம் சென்று அவர்களை உணருங்கள் .


மேலும் அய்யன் எம்பெருமான் குரு போக சித்தர் இருப்பிடமும் அறிந்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன் .
-------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றி
ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி
-------------------------------------------------------
ஓம் போகரே குருபிரம்மோ , போகரே குருவிஷ்ணு
போகரே குருதேவோ , போகரே மகேஸ்வரன்
போக குரு சாக்ஷாத் பரப்பிரமம் , தஸ்மை ஸ்ரீ போகர் குருவே நமஹா .
-----------------------------------------------------------------------------------------------

போக பெருமான் போகரை பற்றி அல்லது போகர் சொன்ன பேருண்மை

போக பெருமான் போகரை பற்றி அல்லது போகர் சொன்ன பேருண்மை  




--------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றி
ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி
-------------------------------------------------------
ஓம் போகரே குருபிரம்மோ , போகரே குருவிஷ்ணு
போகரே குருதேவோ , போகரே மகேஸ்வரன்
போக குரு சாக்ஷாத் பரப்பிரமம் , தஸ்மை ஸ்ரீ போகர் குருவே நமஹா .
-----------------------------------------------------------------------------------------------


தான் என்ற வாதியிலே நந்தி ஆனேன் 
தவம் செய்து சித்தன் அயன் மாலும் ஆனேன் 
வேனென்ற சுப்ரமணிய ரூபமானேன் 
விண்ணவர் சேனாபதி இந்தரனுமானேன்
நான் என்ற கிருஷ்ணா வடிவாகிநின்றே 
நபி ரூபமாய் உலகம் எங்குமானேன்
வானென்ற பராபரமாய் நின்று கொண்டேன் 
மாநிலத்திற் போகரென்று வாழ்ந்திட்டேனே.


வாழ்ந்திட்டேன் எந்தனுட சித்தைக்கண்டு 
வல்ல சித்தர் யாவரும் மலைத்தெழுந்து
தாழ்ந்திட்டார் அருள் வேண்டும் என்று கேட்டார் 
தவம் செய்தால் அருள்வேன் என்று அருளிச்செய்தேன் 
சூழ்ந்திட்டார் யானிருக்கும் பதியிலப்பா 
சொல்லரிய தவம் செய்து இருக்கும் இருக்கும் நாளில் 
வீழ்ந்திட்டு போரார்கள் மனிதறொன்று 
விதி விலகி இருப்பதற்கு செப்பினேனே.


செப்புகிறேன் சித்தரெல்லாம் மறைத்தே வைத்தார் 
செகந்தனிலே சொன்னதெல்லாம் கபடம் மெத்த 
அப்புகிறேன் படமென்ற வினயைத்தள்ளி 
அதி சுருக்காய் ஆச்சரியம் அடையசொல்வேன்
தப்புகிறேன் என்றாலும் தவறோட்டாது
தன்னிலே தூக்குமடா எந்தன் மூலம் 
ஒப்புகிறேன் என்றனுட மூலம் காண 
உயர்ந்ததொரு காயசித்தி செய்குவாயே.


அய்யன் எம்பெருமான் குரு போக சித்தரால் மிக பெரிய உண்மைகள் மிக சாதாரணமாக வெட்ட வெளிச்சமாக்கப்பட்டுளது .


புரிந்து படித்து உணர்ந்து கொள்ளவும் .


உதவிக்காக சீர் பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது .


சர்வம் போக மயம் , சர்வம் சிவம் , போகம் தன்னை சிவமாக உணர்ந்து , சிவமாகவே 
ஆனதால் சர்வம் போக மயம்




-------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றி
ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி
-------------------------------------------------------
ஓம் போகரே குருபிரம்மோ , போகரே குருவிஷ்ணு
போகரே குருதேவோ , போகரே மகேஸ்வரன்
போக குரு சாக்ஷாத் பரப்பிரமம் , தஸ்மை ஸ்ரீ போகர் குருவே நமஹா .
-----------------------------------------------------------------------------------------------

Friday, October 15, 2010

ஈஸ்வரனுக்கு உபதேசித்தது என்ன ?

ஈஸ்வரனுக்கு உபதேசித்தது என்ன ?


--------------------------------------------------

ஓம் போக பெருமானே போற்றி
ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி
-------------------------------------------------------
ஓம் போகரே குருபிரம்மோ , போகரே குருவிஷ்ணு
போகரே குருதேவோ , போகரே மகேஸ்வரன்
போக குரு சாக்ஷாத் பரப்பிரமம் , தஸ்மை ஸ்ரீ போகர் குருவே நமஹா .
-----------------------------------------------------------------------------------------------

ஈஸ்வரனுக்கு உபதேசித்தது என்ன ?

ருத்ர தத்துவமாகிய பிரேரக நிலையான காரண தத்துவ முடிவான ஈஸ்வர த்த்துவதிநியர்க்கை ஞானம் ஏறிக் கிரியை குறைந்து இருப்பதால் , கிரியா காரண பூதமாயும் ஞான காரண  அமிசமாயும் விளங்கும் பிரணவமாகிய உண்மை நிறைவான கிரியை அற்ற நிர்விஷய அனுபவம் ஈஸ்வர தத்துவத்திற்கு நியதி செய்வது ? சுத்த விவேக தத்துவ அதிஷ்டாதாவான சுப்பிரமணியம் அன்றி தோன்றாது . இது பற்றி உபதேசம் செய்தார் என ஆயிற்று . 


--------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றி
ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி
-------------------------------------------------------


பிரம்மாவை சிறையில் வைத்தது என்பது என்ன ?

பிரம்மாவை சிறையில் வைத்தது என்பது என்ன ?






--------------------------------------------------

ஓம் போக பெருமானே போற்றி

ஓம் போக மகரிஷியே போற்றி

ஓம் போக முதல் சித்தரே போற்றி

ஓம் போக ஞான குருவே போற்றி
-------------------------------------------------------
ஓம் போகரே குருபிரம்மோ , போகரே குருவிஷ்ணு

போகரே குருதேவோ , போகரே மகேஸ்வரன்

போக குரு சாக்ஷாத் பரப்பிரமம் , தஸ்மை ஸ்ரீ போகர் குருவே நமஹா .
-----------------------------------------------------------------------------------------------

பிரம்மாவை சிறையில் வைத்தது என்பது என்ன ?

சுத்த மன சங்கல்ப சிருஷ்டித் தொழிலை உடைய ப்ரம்மாவாகிய மனத்தைக் கிரியையில் பிரவேசிக்க ஒட்டாமல் , சுத்த விளக்க விவேக நிறைவாயுள்ள சுப்ரமணிய தத்துவத்தால் சர்வ பிண்ட விஷயங்களாகிய தோன்றல் , வளர்த்தல் , குற்றம் நீக்கல் , ஒன்றினிடத்தில் மலைவடைதல் , தெளிதல் முதலிய கிருத்தியங்களை விவேக முன்னிலையில் நடத்துங்கால் சலிப்பறப் பந்தித்து இருப்பதே சிறை இட்டது .

--------------------------------------------------

ஓம் போக பெருமானே போற்றி
ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி
-------------------------------------------------------

Thursday, October 14, 2010

முருகரின் அறுபடை வீடு என்பது என்ன ?

                                      முருகரின் அறுபடை வீடு என்பது என்ன ?







--------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றி
ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி
-------------------------------------------------------

ஓம் போகரே குருபிரம்மோ , போகரே குருவிஷ்ணு
போகரே குருதேவோ , போகரே மகேஸ்வரன்
போக குரு சாக்ஷாத் பரப்பிரமம் , தஸ்மை ஸ்ரீ போகர் குருவே நமஹா .
-----------------------------------------------------------------------------------------------
முருகரின் அறுபடை வீடு என்பது என்ன?

அடங்கி இருக்குமிடம் . அடங்கி இருக்கும் ஸ்தானங்கலே இயற்கை விளக்கம் தங்குமிடங்களாகும் , இவற்றிற்கு ஊர் ஆறு ஆவது ஏன்?
ஏரகமென்பது அழகு பொருந்திய உள்ளமென்னும் இடம் . 






திருவாவினன்குடி என்பது திரு - ஆ - இன்ன - குடி . திரு - இலக்குமியாகிய சந்தோஷமும் , ஆ - பசுவாகிய விளக்கமென்னும் சீவனும் , இனன் - சூரியனாகிய புத்தியும் , ஒன்று கூடி விளங்கும் ஆன்ம அறிவின் சுத்த காரிய இடம் .


 பழமுதிர்சோலை என்பது , இந்திரிய கரண சீவ முதலிய அனுபவப்பழங்கலாகிய பிரயோஜன இன்பங்கள் நீங்கிக் குறைவற்ற அறிவாய் விளங்கும் இடம் .



திருசீரலைவாய் / திருச்செந்தில் / செயந்திபுரம் என்பன சுத்தமனத்தின் முகத்தில் விஷயக்கடலின் அவாவாகிய அலை அடித்துக்கொண்டு இருக்கும் இடமாகிய கரை , செந்துக்களினது இருதய ஸ்தானமாகிய மனம் அக்ஞான சூரனை நிவர்த்தித்து சந்தோஷகரத்தை பெற்ற பதி மனத்தின் விளக்கம் .



திருப்பரங்குன்றம் என்பது அசைவிலாத ஒன்றான விளக்கத்தை உடைய விவேக உல்லாச இன்ப நிறைவு .

குன்றுதோறாடல் என்பது மலைதோறாடல் , மலை என்பது அலைவில்லாத உணர்ச்சிக்கு  முதற் காரணமாய் உள்ள துரிய நன்னிலை , இத்துரியம் , பரதுரியம் , சுத்த துரியம் , குருதுரியம் , சிவதுரியம் , சத்திதுரியம் முதலிய துரியமலைகள் அனுபவகாட்சியில்
அனந்தம் உண்டு .

மேற்குறிய அனுபவக்காட்சிகளுக்கு தேகத்தில் இடம் எவை ? 

கோசத்தின் அடி , தொப்புளின் கீழ் , தொப்புள் , வயற்றில் தொப்புளுக்கு மேல் , மார்புக்கு கீழ் , மார்பு நெஞ்சு ஆக ஆறு .




--------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றி
ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி
-----------------------------------------------------

Tuesday, October 12, 2010

மயிலின் காலின் கீழும் வாயிலும் பாம்பு இருப்பது என்ன ?

யிலின் காலின் கீழும் வாயிலும் பாம்பு இருப்பது என்ன ?





--------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றி
ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி
-------------------------------------------------------

ஓம் போகரே குருபிரம்மோ , போகரே குருவிஷ்ணு
போகரே குருதேவோ , போகரே மகேஸ்வரன்
போக குரு சாக்ஷாத் பரப்பிரமம் , தஸ்மை ஸ்ரீ போகர் குருவே நமஹா .
-----------------------------------------------------------------------------------------------
மயிலின் காலின் கீழும் வாயிலும் பாம்பு இருப்பது என்ன ? 

விசித்திர மாயையின் காரி உருவமான அகங்காரம் தோன்றி வெளிப்படுங்கால் , மூலாங்காரத்திலும் அதிகரிப்பிலும் பிராணவாயு என்னும் பாம்பானது கீழும் மேலும் உண்டாயினும் , அகங்காரத்தின் முகப்பாகிய மயில் வாய் மூலமாய் பிராண வாயுவினது வேகத்தை விழுங்கிக்கொண்டிருப்பது இயற்கைதான்.

  

--------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றி
ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி
------------------------------------------------------

ஒரு முகம் , மூன்று முகம் , நான்கு முகம் , ஆறுமுகம் ஆன காரணம்

ஒரு முகம் , மூன்று முகம் , நான்கு முகம் , ஆறுமுகம் ஆன காரணம் 


--------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றி
ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி
-------------------------------------------------------

ஓம் போகரே குருபிரம்மோ , போகரே குருவிஷ்ணு
போகரே குருதேவோ , போகரே மகேஸ்வரன்
போக குரு சாக்ஷாத் பரப்பிரமம் , தஸ்மை ஸ்ரீ போகர் குருவே நமஹா .
-----------------------------------------------------------------------------------------------




சுப்பிரமணியம் ஒரு முகம் , மூன்று முகம் , நான்கு முகம் , ஆறு முகம் ஆனதற்கான காரணம் , ஒன்றும் இரண்டும் இல்லாத ஒப்பற்ற பரப்ப்ரம்ம சொரூபம் நம் பொருட்டுக் குழு உக்குறியாய் , பாவனைக்கு ஒன்றென்று நிச்சைக்கும் , பரகாரண நிமித்தம் ஆகிய அறிவுருவமே ஒருமுகமென்று ஞானிகள் சொல்லுவார்கள் .



சுத்தராஜசம் , சுத்ததாமசம் , சுத்த சாத்வீகமாகிய , மூன்று குணங்களின் விளக்கமே மூன்று முகம் .


பசு மனம் , சுத்த மனம் , உள் மனம் , சங்கலித மனம் , என்னும் நான்கு தத்துவங்களின் கூட்ட விளக்கமே நான்கு முகம் .



சுத்த அறிவின் மூலம் ஒளி அறிவின் மூலம் , சுவை அறிவின் மூலம் , பரிச அறிவின் மூலம் , வாசனை அறிவின் மூலம் , ஆத்மா அறிவின் மூலம் என்னும் ஆறு தத்துவங்களின் கூட்டறிவின் மூலகாரணப் பிரகாச விளக்கமே ஆறுமுகம் .  



--------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றி
ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி
-------------------------------------------------------

சுப்ரமணியம் என்பது என்ன ?



சுப்ரமணியம் என்பது என்ன ?









-------------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றி
ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி
-------------------------------------------------------

ஓம் போகரே குருபிரம்மோ , போகரே குருவிஷ்ணு
போகரே குருதேவோ , போகரே மகேஸ்வரன்
போக குரு சாக்ஷாத் பரப்பிரமம் , தஸ்மை ஸ்ரீ போகர் குருவே நமஹா .
-----------------------------------------------------------------------------------------------



சுப்பிரமணியம் என்பது என்ன ? 


நமது புருவ மத்தியில் ஆறு பட்டையாய் உருட்சியுள்ள   ஒரு மணி பிரகாசம் பொருந்தி இருக்கின்றது , இந்த ஜோதி மணியை ஷன்முகமென்று பெரியோர்கள் சொல்லுவார்கள் 


.இதன்றி , நமது மூலாதாரத்திற்கு  மேல் மூன்றிடந்தாண்டி விசுத்தியாகிய இருதய ஸ்தானத்தில் இடது புறத்தில் ஆறு தலையுடைய ஒரு நாடி இருக்கின்றது , இதைச் சுப்பிரமணியம் என்று சொல்லுவார்கள் .இந்த தேகத்திலுள்ள ஆறறிவும் ஒருங்கே சேர்ந்த சுத்த விவேக மென்பதையும் சண்முகம் என்பார்கள் , ஆயினும் சர்வ தத்துவங்கிளனது அந்தத்தில் உண்மணிக்கப்பால் சாந்த நிறைவாய் உள்ள ஆறு தலையாகிய சுத்த ஆன்ம அறிவான உள்ளமே சுப்பிரமணியம் .

ஆறு ஜோதியாயும் , ஆறு அறிவாயும் , ஆறு தலை உடையதாயும் இருப்பதால் முகம் ஆறு . கால் இரண்டென்பது தோன்றும் அறிவு , தோற்றுவிக்கும் அறிவு என்னும் இரண்டறிவாகிய விஷய உணர்ச்சியும் , நிர் விஷய உணர்ச்சியும் ஆகும் , கை பன்னிரெண்டு  என்பது ஆறு ஆதாரங்களில் உள்ள பிரகாசம் , அப்ப்ரகாசமாகிய பன்னிரெண்டாம்.

தசாயுதம் , அபய வரதம் என்பது என்பவை யாவை எனில் வஜ்ஜிரம் என்பது தீக்ஷன்யா உணர்ச்சி , வேல் என்பது சக்தி , அருள் , அறிவு . மணி என்பது ஆன்ம விளக்கமாகிய நாதம் .த்வஜம் என்பது கீர்த்தி . சரசிஜம் என்பது தயவு . குக்குடம் என்பது மாச்சரியம் இல்லாத நிறைவு , பராகம் என்பது பாச நீக்கம் , தண்டம் என்பது வைராக்கிய அறிவு , பாணம் என்பது அன்பு , அபயம் என்பது சமாதான உணர்ச்சி வரதம் என்பது நிராபாரமாகிய ஆதரவென்னும் சகிப்பு , கடப்ப மாலை என்பது சர்வ தத்துவ கண்டனம் , பல வர்ணமுள்ளதும் , விசித்திர வடிவமானதும் , மறதி முதலிய 
குணங்களுக்கு காரணமானதும் ,, மாயைக்கு இருப்பிடமாயுள்ளதும் ஆன மூலப்ரகிருதியே மயில் என்பது .

மயில் மேல் சுவாமி எறிக்கொண்டிருத்தல் முதலியவற்றிற்கு காரணம் என்னவென்றால் பிண்டாண்டமாகிய இந்த தேகத்திலும் அண்டத்திலும் மூலக்ஞான காரணமாயுள்ள கேவலமாகிய பிரகிருதி மாயை இன்  அசுத்தகேவலமாகிய  அசுத்தாசுத்த மகா அகங்காரம் என்னும் ராக்ஷச அம்சமான சூரதத்துவம் அதின் சேதரமான மூவகைத் தத்துவத்தோடு , அக்ஞான திசையல் , ஆன்ம அறிவையும் , பிண்ட விளக்கமான தேவர்களயும் , விஷய விளக்கமான இந்திரியங்களையும் , நாடி விளக்கமான யந்திரங்களையும் , பிராண விளக்கமாகிய உயீர்யையும் , விழுங்கித் தன்னரசு செலுத்தும் .அந்த சூர தத்துவத்தை வதைக்கும் , தத்துவம் மகாமாயையாகிய மாமரமாயும் , மாச்சரியமாகிய கோழியையும் , விசித்திர மாயை என்னும் மயில் ஆகவும் மகாமதமாகிய யானை முகமாயும் , அதிக்ரோதமாகிய சிங்க முகமாயும் விளங்கும் .

சர்வ தத்துவங்களயும் தன்வசமாக்கி , அகங்கார கொடி கட்டி , அக்ஞான நாடகம் செய்த தத்துவ அகங்கரிப்பை அடக்கி , பதி , பசு , பாசம் , அநாதிநித்யம் என்னும் சித்தாந்தத்தை விளங்கிக் காட்டுவதற்காக , மாச்சரிய குக்குடத்தை போதமாகிய  கையால் அடக்கியும் , விசித்திர மாயையாகிய மயிலைக் கீழ்படுத்தி மேலிருந்து அடக்கியும் , ஆபாச தத்துவங்களைச் சம்மரித்தும் , சுத்த விஷய புவனமாகிய தேவலோகத்தை நிலை பெறச் செய்தும் இந்தரபதியான ரூபேந்த்ரனுடைய பெண்ணாகிய தத்துவ என்னும் தெய்வானையை இடப்பாலமைத்தும் , இந்த்ரியங்கள் ஆகிய வேடர்களின் கண்ணிற் புலப்பட்டமான சமென்னும் மானினது கற்பத்திலுண்டான வள்ளியாகிய சுத்த மனதை வலத்தில் வைத்தும் , நவ தத்துவ காரணமாகிய , நவவைராக தத்துவமாகிய வீரர்களைச் சமீபத்திலிருத்தியும் , சகல கேவலங்களுக்கும் நினைப்பு மறப்புக்கும் இடையில் விவேக வடிவாயும் பாதம் முதல் நாபி வரையில் உஷ்ண உருவாயும் , நாபி முதல் கண்டம் வரையில் ஆதார நாடி உருவாயும் கண்டம் முதல் புருவமத்தி வரையில் மணி உருவாயும் உச்சியில் ஓளி உருவாயும் புத்தியில் சுத்த அறிவாயும் , அனுபவத்தில் நித்தியமாயும் , எங்கும் நிறைவாயும் , கோணத்தில் ஆறாயும் , ஜாதியில் ஆறின் கூட்டமாயும் விளங்குகின்ற உண்மைக்கடவுளே சுப்ரமணியம் .