Saturday, February 4, 2012

பொதிகை மலை - அகத்தியர் - 2

ஓம் குரு போகர் சரணாய நமஸ்து 
ஓம் குரு போகர் பாத கமலா சரணாய நமஸ்து 
ஓம் சர்வம் குரு போகர் சரணம் 
-------------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றி

ஓம் போக மகரிஷியே போற்றி

ஓம் போக முதல் சித்தரே போற்றி

ஓம் போக ஞான குருவே போற்றி
--------------------------------------------------


முதல்ல என்கூட கிட்டத்தட்ட பத்து பேர் வரர்தா இருந்துது , கடைசில யாருமே வரமுடியாத சூழ்நிலை , நாம அக்னிலிங்கம் க்ரூப்ல இருந்து சிவா மட்டும் கால் பண்ணி இருந்தாரு , கண்டிப்பா வரதாவும் சொன்னாரு , நானும் கேரளாவுக்கு போன் பண்ணி கேட்டேன் , அங்க யாரும் சரியான பதில் சொல்லல  , அதாவது நாங்க அகஸ்தியர் கூடம் போறதுக்கு permission கிடைக்குமா கிடைகாதானு தெளிவா யாரும் சொல்லல .

நண்பர் ராம் குமார் போன் பண்ணி சொன்னாரு , மனுஷங்களா நம்பாதபா , அகத்தியர நம்பி போன்னு , சரின்னு சிவாவுக்கு கால் பண்ணி சொன்னேன் , அவரும் அதான்  சரின்னு 24 ஜனவரி அவர் சென்னைல இருந்தும் நான் திருப்பூர்ல இருந்தும் கிளம்பினோம் , இதற்க்கு நடுவில் இன்னொரு நண்பர் , புதுசா guide  மாதிரி ஒரு வேலை ஆரம்பிச்சி இருக்காரு அவரும் வரேன்னு சொல்லி மதுரைல இருந்து கிளம்பினார் .

அப்பறம் இந்த இடத்துல ஒருத்தருக்கு கண்டிப்பா நன்றி சொல்லணும் , கிருஷ்ணன் சாமி , இந்த முல்லைபெரியார் பிரச்சனையால கொஞ்சம் பயமா தான் இருந்தது கேரளா போறதுக்கு , கிருஷ்ணன் சாமிக்கு போன் பண்ணி கேட்டேன் , மனுஷர் பக்காவா தைரியம் குடுத்தாரு , ஒரு பிரச்னையும் இங்க இல்ல எல்லாம் ஊடகங்கள் பண்ற வேல , நீங்க தைரியமா வாங்கன்னு சொன்னாரு , அதுவும் இல்லாம மலை ஏறும் போது என்ன என்ன எப்படி எபடின்னு நல்ல அறிவுரையும் சொன்னனாறு , இங்க போறதுக்கு அவரோட வார்த்தைகளும் நல்ல தெம்பு குடுத்துச்சு , இந்த தொகுப்பை அவர் பார்க்க நேர்ந்தால் " சாமி ரொம்ப நன்றி , நன்றிகள் கோடி " .
திருவனந்தபுரத்துல ஜனவரி  25   கிட்டத்தட்ட 9 மணிக்கு அந்த forest ஆபீஸ் போயிட்டு காத்திருந்து வார்டன் வந்த பிறகு அவர பத்து பேசினோம் , மனிதர் கொஞ்ச நேரம் யோசிச்சிட்டு , ஒ.கே.சொல்லிடாபோல , permission   கிடைச்சு அந்த ரூமைவிட்டு வெளிய வந்தா , நம்ம அகத்தியர் வெள்ளை கலர்ல இருக்காரு , நான் கூட அத கவனிக்கல , நம்ம சிவாதான் காட்டினாரு . அப்பா அந்த செகண்ட்ல நண்பர் ராம்குமார் சொன்ன வார்த்தை தான் திரும்ப திரும்ப வந்தது , மனுஷன நம்பாதப்பா , அகத்தியர நம்பி போ பா . அப்படியே அகத்தியர் அங்கவே ஆசீர்வாதம் பண்ண மாதிரி இருந்துது .

Warden  Mr . Jaikumar Sharma ( Kerala wildlife & Forest )

அகத்தியர் @ கேரளா Forest office 

Forest ஆபீச்ல இருந்து வெளிய வரும்போது மணி 11 .30  ஆகிடிச்சு , எங்களுக்கு permission கிடைச்சது ஜனவரி 26 , ஒரு முழு நாள் கைல இருந்துது , சரின்னு பஸ் ஏறி விதுராங்கற இடத்துக்கு போயிட்டு lodge புக் பண்ணிட்டு complete rest .

அடுத்த நாள் காலைல எங்களுக்கு bonacad  போறதுக்கு  ஆறு மணிக்கு பஸ் , அத விட்டா அடுத்த வண்டி 10 மணிக்கு , நாங்க bonacad Forest செக் போஸ்ட்ல ஒன்பது மணிக்கு இருக்கணும் அப்படி இல்லனா 10  மணி அதிகபட்சம் , அதுக்கு அப்பறம் அவங்க மலை  மேல ஏற விட மாட்டாங்க ,ஏன்னா குறைஞ்ச பட்சம் போனகாடுல இருந்து அதிரமலை போறதுக்கு 14 கிலோமீட்டர் . அதிரமலைல தான் தங்கற இடமும் சாப்பாடும் கிடைக்கும் , இந்த பதினாலு கிலோமீட்டர் நடகர்துக்கு குறைஞ்ச பட்சம் ஏழு மணி நேரம் கணிச்சி வெச்சி இருக்காங்க , மாலை நாலு மணிக்கு மேல யானைங்க சாதாரணமா கீழவரர்தால அந்த நேரத்துல காட்டுல நடக்க அனுமதி இல்ல , மேட்டர் என்னனா கூட வந்தா ரெண்டு பேரும் அஞ்சு மணிக்கு எல்லாம் எந்திரிச்சு டைமுக்கு கிளம்பிட்டாங்க , நான் நல்லா தூங்கிட்டேன் , எந்திரிச்சதே ஆறு மணிக்கு தான் கீழ போய் பாத்தா பஸ் போய்டுச்சு , சிவாவும் இன்னொரு நண்பரும் என்ன திட்ட ஆரம்பிச்சாங்க பாருங்க நல்ல திட்டி முடிச்சிட்டு விதுரா பஸ் ஸ்டாண்டுக்கு ஒரு லாரிய பிடிச்சி போனோம் , சரி பஸ் போய்டுச்சு ஆட்டோ விசாரிக்கலாம்னு போனா யாரும் வர மாட்டேன்னு சொல்லிடாங்க , அப்படியே நொந்து போய் ஒரு மூணு மூளை ரோடுல போய் நின்னு பாத்தா , தவற விட்ட பஸ் திரும்ப வந்து நிக்குது , இந்த இடத்துல சத்தியமா சொல்றேன் அகத்தியரோட அருள நினச்சு பாக்காம இருக்க முடியல ,அந்த பஸ் மட்டும் திரும்ப வரலைனா அன்னைக்கு அந்த முழு யாத்திரையும் முடிஞ்சு போய் இருக்கும் .

கிட்ட தட்ட 9 மணிக்கு bonacad பஸ் ஸ்டாண்ட் போய் இறங்கி , ரப்பர் மற்றும் தேய் இலை தோட்டம் வழியா நடக்க ஆரம்பிச்சோம் , ஒரு van போற அளவுக்கு பாதை இருக்கு , ரப்பர் மரத்துல ஊடு பயிரா மிளகு போட்டு இருக்காங்க ,நல்ல அருமையான climate , அப்படியே ரசிச்சிகிட்டே 4 கிலோமீட்டர் நடந்ததே தெரியல ,காரணம் என்கிட்டே ஒரே ஒரு குட்டி பை தான் இருந்தது எல்லா வைட்டும் மற்ற இரண்டு நண்பர்கள்கிட்ட .

rubber tree

on the way , bonacd bus stand to bonacad forest office




bonacad forst office entrance or agasthiyar koodam entrance

வன இலாக்கா அலுவலகத்துல recipt குடுத்தோம்ன , சரி பாத்துட்டு , நம்ம பைல பீடி , சிகிறட்டு , தேவை இல்லாத பிளாஸ்டிக் எல்லாத்தையும் எடுத்து வெச்சிட்டு நம்மள உள்ள அனுப்புவாங்க , ரொம்ப நல்ல சிஸ்டம் .

அங்க இருந்து நடக்க ஆரம்பிச்சோம்ன ஒரு மணிநேரத்துல ஒரு அருவி , நல்ல சுத்தமான தண்ணி சில்லுனு இருக்கு , வழி பாத்தீங்கன்னா , மேடு நிறைய கிடையாது , சுலபமா ஏறலாம் , ஆனா அடர்ந்த வனம் பெரிய மரங்கள் விதவிதமான மூலிகை வாசனைகள் அதனுடன் வழிநெடுக யானை லத்திகள் , இதை பாத்தே தெரிஞ்சிக்கலாம் அங்க எந்த அளவுக்கு யானை நடமாட்டம் இருக்குன்னு , நம்ம சதுரகிரில தனிப்பாரை வழியா போகும் போது ஒன்னு ரெண்டு இடத்துல லத்திய பாத்தாலே பீதிய கிளப்பும் , இங்க வழி முழுக்கவே அதான்.  


அப்படியே கொஞ்சம் தூரம் நடந்தா கொஞ்சம் மரம் எல்லாம் ஒதுங்கி , அழகா ரொம்ப அற்புதமா ரொம்ப தூரத்துல அகத்தியர் இருக்கிற ஏக பொதிகை தெரியுது ,தென் கைலாயம்னு சொன்னது எந்த அளவுக்கு உண்மைன்னு கீழ இருக்கிற போட்டோவ பாத்தா உங்களுக்கே தெரியும் 




ஏக பொதிகை , நாக பொதிகை , ஐந்தல பொதிகை காட்சி ஒரே இடத்தில்

 கைலாயம் போன்ற தோற்றம் 

இன்னும் சிறிது நேரம் நடந்து கிட்ட தட்ட அட்டையார் கேம்ப்க்கு முன்னாடி ஒரு சிற்றருவி கிட்ட நாம சிவா கொஞ்சம் சாப்டிட்டு போகலாம்னு உட்கார்ந்தார் , அந்த அருவி பாக்கறதுக்கு ஏறக்குறைய சதுரகிரி சந்தன மகாலிங்கம் ஆகாய கங்கை போலவே இருக்கு , கொஞ்சம் உத்து கவனிசொம்ன அதுல ஒரு சுயம்பு லிங்கம் இருக்காரு , அவ்ளோ அருமையா , கொஞ்சம் closeup ல zoom  பண்ணோம்னா , ஆச்சரியம் சித்தர் போன்ற ஒரு முகம். பாக்கும் போதே ஒரு விதமான உணர்வு உள்ளுக்குள்ள வருது , எந்த சித்தர் சமாதியோ அல்லது எத்தனை சித்தர்கள் தினமும் வழிபாடு செய்து கொண்டு இருகிறார்களோ , யாருக்கு தெரியும் , நம்மால முடிஞ்சுது , கையெடுத்து கும்பிட்டுட்டு மேல ஏற ஆரம்பிச்சோம் . நல்ல தீவிர பக்தரா இருந்தா கண்டிப்பா இத விட்டு இருக்க மாட்டார் , ஒருமுறையாவது அருகில் சென்று பூஜை செய்து விட்டு வந்து இருப்பார் .


அருவி

அருவியின் மறு பக்கத்தில் லிங்க ரூபம் 


நன்கு கூர்ந்து கவனித்தால் தெரியும் லிங்க உருவத்தில் உள்ள முகம் 
அப்படியே இன்னும் அடர்ந்த மரங்கள் திகிலூட்டும் பள்ளங்கள் , யானை லத்திகள் வழியாக ஒரு மணிநேரம் நடந்தால் வருகிறது அட்டையார் கேம்ப் , நல்ல ஒரு பெரிய நீர்வீழ்ச்சி , இது வரைக்கும் வந்த களைப்போ , உடல் சோர்வோ எதுவும் தெரியாது , இதுக்கு அப்பறம் ஒரு சின்ன ஏத்தம் வருது ஏறி பாத்தா முழுக்க புல் மேடு , நல்லா வெய்யில் தெரியுது , இங்க வந்த பிறகுதான் நாவறட்சியே எடுக்குது , கைல பாட்டில் இருக்கு ஆனா தண்ணி இல்ல ஒரு சின்ன ஓடைல தண்ணி புடிச்சா , அது முழுக்க ஒரு மாதிரியான பூச்சி , ஏன் இத இங்க சொல்றேன்னா , மலைல எல்லா தண்ணியும் குடிக்க ஏத்தது இல்ல , சரி என்ன பண்றது , அப்படியே நடனு நடந்தோம் , கொஞ்சம் கொஞ்சமா மேடு அதிகமாயட்டே போகுது , ஏற ஏற வெய்யிலும் ஏறுது , அப்பாடா ஒரு வழியா ஒரு சின்ன ஓடை குறுக்குல போகுது தண்ணியும் நல்லா சுத்தமா இருந்துது , அதா குடிக்கும் போது இருக்கிற feel இருக்கு பாருங்க , ஆஹா superb . அப்படியே ஒரு முப்பது நிமிஷம் யானை நட போட்டு போனோம்னா , திரும்ப நல்ல அடர்ந்த வனம் , இது எப்படி அடர்ந்த வனம்னா , நாங்க சாமி எல்லாம் பாத்துட்டு திரும்ப கீழ இறங்கும் போது சுமார் காலை ஏழு மணி , மதுரை நண்பர் எங்களுக்கு எல்லாம் முன்ன வரிஞ்சி கட்டிக்கிட்டு போய்ட்டு இருந்தாரு , அவருக்கு அடுத்து நான் எனக்கு பின் சிவா , அவருக்கு பின்னால் இரண்டொரு கேரளா நண்பர்கள் , அது அந்த மலை பிராந்தியத்தை பொறுத்தவரை நன்கு விடியாத நேரம் , ஆனால் சூரிய ஒளி இருக்கிறது , நாங்கள் முன்னாள் நடந்த களைப்பும் முழுமையாக போகாத நேரம் , பாதை நல்ல  இறக்கம் வேறு , திடீர் என்று சல சல வென இறைச்சல் , உயர்ந்து நெடிய மரங்கள் ஒன்றுடன் ஒன்று உரசிக்கொண்டு முறிவது போல் ஒரு சத்தம் , முன்னே சென்று கொண்டு இருந்த மதுரை நண்பர் தலையில் குளிருக்காக கட்டிக்கொண்டு இருந்த உருமாவை கழற்றி தூக்கி எரிந்து விட்டு திடு திடுவென எங்களை நோக்கி ஓடி வர ஆரம்பித்து விட்டார் ..... நாடு காடு என்ன செய்வது , முன்னாள் ஏறி இறங்கிய களைப்பு வேறு ... அச்சப்பட மட்டுமே முடிந்தது ......

புல் மேடு

புல் மேடு
    நாளைக்கு திரும்ப பாப்போம் .

ஓம் குரு போகர் சரணாய நமஸ்து 
ஓம் குரு போகர் பாத கமலா சரணாய நமஸ்து 
ஓம் சர்வம் குரு போகர் சரணம் 
-------------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றி

ஓம் போக மகரிஷியே போற்றி

ஓம் போக முதல் சித்தரே போற்றி

ஓம் போக ஞான குருவே போற்றி
--------------------------------------------------



5 comments:

  1. ஓம் போக பெருமானே போற்றி

    ஓம் போக மகரிஷியே போற்றி

    ஓம் போக முதல் சித்தரே போற்றி

    ஓம் போக ஞான குருவே போற்றி


    Sir,

    I am unable to find the linga in the falls, please guide to find the lingam and the face in that lingam, Sorry for in convenience caused.
    My mail id is anand.vairavan@gmail.com, I dont know how to write in Tamil, I am in Chennai.



    Thanks and Regards
    V. Anand.

    ReplyDelete
    Replies
    1. Dear Anand ,

      i was sent you my mobile number pls sms me will guide you how to find it.

      Delete
  2. ஐயா,
    எங்கள் குழுவினர் அடுத்த மாதம் (April 2012) பௌர்ணமி அன்று ஓம் ஸ்ரீ அகத்திய சுவாமிகளை தரிசனம் செய்யலாம் என்று நினைத்திருக்கிறோம்.

    தங்கள் இங்கே அளித்துள்ள தகவல்கள் எங்களுக்கு மிக மிக உபயோகமாய் இருக்கின்றன. ஆனால் இன்னும் சில சந்தேகங்கள் இருக்கின்றன. தயை செய்து தங்கள் மொபைல் போன் நம்பர் குடுத்தால் தங்களிடம் கேட்டு தெளிவு பெறுவோம். arts.serma@gmail.com இந்த மெயில் id க்கு தங்கள் மொபைல் போன் நம்பரை அனுப்புமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம்.

    குழுவின் சார்பாக
    S . சேர்மராஜ்

    ReplyDelete
  3. இந்த வருசம் முதன்முறையா போலாம்னு திட்டம் .. நீங்க திருப்பூர்லயா இருக்கீங்க....arivhedeivam@gmail.com இந்த ஐடிக்கு மொபைல் நெ அனுப்புங்க கூப்பிடறேன்.

    ReplyDelete
  4. சிவாயநமக எம் தந்தையின் திருவருட் கருணையிணால் இறை அனுபவத்தை கேட்க முடிந்ததற்கு நன்றி,பார்த்து தரிசனம் புறிய திருவருள் கூட்டவேண்டும் நன்றி ஐயா,

    ReplyDelete