Friday, January 6, 2012

தத்துவங்கள் 96



ஓம் குரு போகர் சரணாய நமஸ்து 
ஓம் குரு போகர் பாத கமலா சரணாய நமஸ்து 
ஓம் சர்வம் குரு போகர் சரணம் 

-------------------------------------------------------

ஓம் போக பெருமானே போற்றி

ஓம் போக மகரிஷியே போற்றி

ஓம் போக முதல் சித்தரே போற்றி

ஓம் போக ஞான குருவே போற்றி

------------------------------------------------------


தத்துவங்கள் 96 கீழே அதன் விளக்கங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது , இது ஒவ்வொருவரும் யோகா சாதனையின் மூலம் உணரக்கூடியதே , முழுவதும் உணர்ந்தால் தான் நன்கு புரியவும் வரும் , யோக சாதனையாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம் .

ஞானேந்திறியம் - 5 
பொறி - 5 
புலன்கள் - 5 
கர்மேந்திரியம் - 5 
அந்தக்கரணம் - 4 

 ஆக
   
தத்துவங்கள் - 24 

வித்யா தத்துவம் - 7 

சிவ தத்துவம் - 5 

பிற கருவிகள் - 60
 
மொத்தமாக 96  தத்துவங்கள் 
-------------------------------------------------------------------------------------

சற்று விரிவாக :


பூதங்கள் 5  
ஞானேந்திறியம் 5
ஞ்யநேந்திரிய கிரியைகள் 5 
கன்மேந்திரியம் 5 
கன்மேந்திரிய கிரியைகள் 5 
அறிவு1 
கரணம் 4 
நாடி 10 
வாய்வு 10 
ஆசயம் 5 
கோசம் 5 
ஆதாரம் 6 
மண்டலம் 3 
மலம் 3 
தோஷம் 3 
ஈஷனை 3 
குணம் 3 
விராகம் 8 
வினை 2 
அவஸ்தை 5 

மொத்தமாக 96 

தனி தனியாக தத்துவ விளக்கம் :


பூதங்கள் 5 விளக்கம் :


1 . ஆகாயம்  : பரவெளி - நிறம் - ஸ்படிகம் , இதன் கூறுகள் : காமம் , குரோதம்                                     லோபம் , மோஹம் , மதம் ; மொத்தமாக 5 


2 . வாய்வு     :  காற்று - நிறம் - புகை , பச்சை , ஸ்படிகம் . இதன் கூறுகள் :                            இருத்தல்,நடத்தல் ,ஓடல் ,கிடத்தல் ,நிற்றல்  மொத்தமாக 5 


 3 . தேயு         :  நெருப்பு / அக்னி - நிறம் - சிகப்பு , இதன் கூறுகள் : பயம் ,                                                    அகங்காரம் , சோம்பல் , நித்திரை , மைதுனம் ; மொத்தமாக 5 


4 . அப்பு          :   ஜலம் - நிறம் - ஸ்படிக வெள்ளை . இதன் கூறுகள் : உதிரம் ,                                           மச்சை , சிறு நீர் , மூளை , சுக்கிலம் ; மொத்தமாக 5 


5 . பிருதிவி  :   மண் - நிறம் - பொன்மை . இதன் கூறுகள் : மயிர் , தோல்                                நரம்பு , எலும்பு , இறைச்சி மொத்தமாக 5 
     


ஞ்யநேந்திரியம்  5  விளக்கம் :


1 . சுரோத்திரம்  - காது சப்தங்களை கேட்கும் 


2 . த்வக்கு            - மேல் தோல் - ஸ்பரிச உணர்வு 


3 . சட்சூ                - கண் - ரூபங்களை பார்க்கும் 

4 . சிங்குவை     - நாக்கு - அறுசுவைகளை அறியும் 


5 . ஆகிரணம்     - நாசி - வாசனைகளை அறியும்

 ஞ்யநேந்திரிய கிரியைகள் 5 விளக்கம் :


 1 . சப்தம்           -  செவியில் நின்று கேட்பது 


2 .  ஸ்பரிசம்    -   தேகத்தில் , சர்மத்திலிருந்து சுகமென்பதை தெரிவிக்கும் 


3 .  ரூபம்           -  கண்ணில் நின்று பல காட்சிகளை காண்பிக்கும் 


4 .  ரசம்              -  நாவில் நின்று அறுசுவையின் பேதங்களை அறிவிக்கும் 


5 . கந்தம்           -  நாசியில் இருந்து வாசனை பேதங்களை உணர்த்தும்


கன்மேந்திரியம் 5  விளக்கம் :


1 . வாக்கு - வாய் - பேசுவது

2 . பாணி - கை - ஆட்டி அசைத்து வேலை செய்தல்


3 .  பாதம் - கால் - நடத்தல்


4 . உபஸ்த்தம் - நீர் வரும் குறி - காம சுகம் அனுபவித்தல்


5 .  குதம் - பாயுரு - ஆசனவாய்


கன்மேந்திரிய கிரியைகள் 5  விளக்கம் :


1 . வசனம் - வாயில் இருந்து பேசுவிப்பது


2 . தானம் - கையில் இருந்து கொடுப்பது


3 . கமனம் - காலில் நின்று நடத்துவிக்கும்


4 . ஆனந்தம் - லிங்கம் , யோனியில் நின்று கர்மானந்தம் விளைவிக்கும்


5 . விசர்ஜனம் - அபானத்தில் நின்று மலத்தை வெளியேற்றும்


அறிவு 1 விளக்கம் :


1 . அறிவு அல்லது உள்ளம் . இது ஆகாயத்தின் அம்சம் , ஆகையால் உச்சியில் இருந்து சகலத்தையும் செயல்விக்கும்.


நாடிகள் 10  விளக்கம் :

1 . இடகலை - வலது கால் பெரு விரலில் இருந்து அசைந்து இயங்கி  ஏறி இடது      நாசியை பற்றி நிற்கும்

2 . பிங்கலை - இடது கால் பெரு விரலில் இருந்து அசைந்து இயங்கி ஏறி வலது நாசியை பற்றி நிற்கும்


3 . சுழுமுனை - குதத்தை பற்றி நின்று ஏறி பிராண வாயுவை சேர்ந்து சிரசளவு முட்டி நிற்கும்


4 . சிங்குவை - உண்ணாக்கில் நின்று அன்ன சாரம் ஊரவும் பானத்தை விழுங்கவும் செய்யும்


5 . புருடன் - வலக்கண்ணில் இருந்து கருமணியை ஆட்டி வைக்கும்


6 . காந்தாரி - இடக்கண்ணில் இருந்து கருமணியை ஆட்டி வைக்கும்

7 . அத்தி - வலக்காதில் இருந்து சத்தங்களை கேட்க வைக்கும்

8 . குரு - இடக்காதில் இருந்து சத்தங்களை கேட்க வைக்கும்

9 . அலம்புடை - கண்டத்தில் இருந்து நாசியில் கசிந்து நீரை ஏற்ற இறக்க உபாயங்கள் செய்யும்

10 . சங்கினி - உபஸ்தத்தில் இருந்து ஆனந்தத்தில் மிஞ்ச வொட்டாமல் காக்கும்

வாயு 10 விளக்கம் :

1 . பிராணன் - மூலாதாரத்தை சேர்ந்து மேல் நோக்கி இதயத்தில் நின்று நாசியில் சென்று திரும்பி அலையும்படி செய்யும்


2 . அபானன் - குதத்தை பற்றி நின்று ஜாடராக்கினியாய் உஷ்ணத்தை உண்டாக்கி , உண்ட அன்ன பானாதிகளை ஜீரணிக்க செய்யும்


3 . வியானன் - சர்வாங்கமும் வியாபித்து இருந்து பொருத்திடங்கள் எல்லாம் களைப்பும் தவனமும் உண்டாகசெய்யும்


4 . சமானன் - சரீரத்தின் நடுவான நாபிஸ்த்தானத்தில் நின்று ஜீரணித்த அன்ன பானாதிகளை உதிரமாக்கி ரத்த நாடிகளின் வழியாக இழுத்து சென்று சமமாக பரவி தேகத்தை வளர்க்கும்


5 . உதானன் - கண்டஸ்தானத்தில் நின்று சத்ததோடே கலந்து குரலோசை செய்ய , பேசக்கூடிய காரியத்தை செய்யும்


6 . நாகன் - வாயில் இருந்து வாந்தி செய்விக்கும்


7 . கூர்மன் - கண் ரப்பையில் இருந்து விளிக்கசெயும்


8 . கிரிதரன் - மூக்கில் நின்று குறுகுறுத்து தும்மல் உண்டாக்கும்


9 . தேவதத்தன் - மார்பில் நின்று கபத்தை சேர்த்து நெட்டி , கொட்டாவி , விக்கல் உண்டாக்கும்


10 . தனஞ்செயன் - பிராணன் நீங்கின பிறகும் 3 நாட்கள் மட்டும் இருந்து சரீரம் வீங்கி வெடித்து போவான் , அக்னியில் சுடும்போது அப்போதே போய்விடும்


ஆசயம் 5  விளக்கம் :


1 . ஆமாசயம் - அன்னம் , தண்ணீர் பருகுமிடம்


2 . ஜலாசயம் - அன்னம் , தண்ணீர் இறங்குமிடம்


3 . மலாசயம் - மலம் சேருமிடம்


4 . ஜலஞ்சயாசம் - மூத்திரம் சேருமிடம்


5 . சுக்கிலாசயம் - விந்து நிறைந்து இருக்குமிடம்


கோசங்கள் 5  விளக்கம் :








1 . அன்னமய கோசம் - ஸ்தூல சரீரத்தை அழிக்காமல் நிலைக்கசெயும் .


2 . பிராணமய கோசம் - பிராண வாயும் கர்மேந்திரியங்களும் சேர்ந்து சொப்பனத்தில் சூட்சும சரீரத்துடன் சேர்ந்து விவகாரம் செய்யும்


3 . மனோமய கோசம் - மலமும் கண்மேந்திரியமும் சொப்பனத்தில் சூட்சும சரீரத்தில் சேர்ந்து செயல் படும்


4 . விஞ்ஞானமய கோசம் - புத்தியும் பொறிகளும் சேர்ந்து சொப்பனத்தில் சூட்சும சரீரத்தில் செயல் படும்


5 . ஆனந்த மய கோசம் - காரண சரீரத்துக்கு ஆதாரமாக இருந்து மேற்கூறிய பிராண , மனோமய , விஞ்ஞானமய கோசத்துடன் சூட்சும சரீரம் நிலைத்து நிற்கும்


ஆதாரங்கள் 6 சிறு விளக்கம் :


1 . மூலாதாரம் - குதத்துக்கும் , குய்யத்துக்கும் மத்தியில் உள்ள திரிகோண ஸ்தானம் , தேவி வல்லபை இதற்க்கு அதிர்ஷ்டான மூர்த்தி - விநாயகர் .





2 . சுவாதிஷ்டானம் - முதுகுத்தண்டின் அடிப்பகுதி சமீபம் , ஆண்குறி அல்லது பெண்குறி அடிபகுதியில் உள்ள நாற்கோண ஸ்தானம் , இதற்க்கு அதிஷ்டான மூர்த்தி பிரம்ம தேவர் , தேவி சரஸ்வதி





3 . மணிபூரகம் - நாபிச்தானத்திற்கு மேலுள்ள பிறை போல் வளைந்த ஸ்தானம் ,இதற்க்கு அதிஷ்டான மூர்த்தி மகா விஷ்ணு , தேவி மகாலட்சுமி


4 . அனாஹதம் - ஹிருதய ஸ்தானத்தில் உள்ள முக்கோண ஸ்தானம் , இதற்க்கு அதிஷ்டான மூர்த்தி மகேஸ்வரன் , தேவி மகேஸ்வரி 



5 . விசுத்தி - கண்டத்தில் உள்ளது , அருகோனஸ்தானம் , இதற்க்கு அதிஷ்டான மூர்த்தி மகேஸ்வரன் , தேவி மகேஸ்வரி 


ஆக்ஞா - முகத்தில் உள்ள புருவ மத்தி - திரிகோண உச்சஸ்தானம், இதற்க்கு அதிஷ்டான மூர்த்தி சதாசிவன் , தேவி மனோன்மணி 


அக்னி மண்டலம் 3  விளக்கம் :


1 . அக்னி மண்டலம் -  மூலாதாரத்தில் இருந்து இளகி நாபி வரையில் முயற்சி செய்யும் 

2 . ஆதித்த மண்டலம் - நாபியில் இருந்து கண்டம் வரை ஸ்திரம் செய்யும் 

3 . சந்திர மண்டலம் - கண்ட ஸ்தானத்தில்  இருந்து புருவ மத்தி வரை ஸ்திரமாகும்


மலங்கள் 3 விளக்கம் :


1 . ஆணவ மலம் - ஸ்தூல சரீரத்தை நான்தான் என்று நினைத்து இருக்கும் 


2 . காமிய மலம் - கண்ணால் கண்டவைகளை எல்லாம் இச்சிக்கும் 


3 . மாயா மலம் - தனக்கு நேரும் நிலையை தானறியாமலே செய்தல் , கோபம் கொள்ளல் 


முப்பிணிகள் :


1 . வாதம் - வாயுவின் கோபம் 


2 . பித்தம் - அக்னியின் கோபம் 


3 . சிலேத்துமம் - அப்புவின் கோபம் 


ஈஷணை 3 விளக்கம் :

1 . தாரேஷனை - பெண்ணாசை ( ஆணாசை ) அதிகம் கொள்ளல்


2 . புத்திரேஷனை - புத்திர , புத்திரி மீது அதிக ஆசை 


3 . அர்தேஷனை - பொருள்கள் மீது அதிக ஆசை வைத்தல் 


குணங்கள் 3  விளக்கம் :


1 . சாத்வீகம் - நிறம் வெண்மை , சகலரும் மதிப்பர் , அமிர்த குணம் , இதில் லயித்து இருப்பவர் தத்துவ ஞான நிஷ்டை அடைவர் 


2 . ராஜஸ குணம் - நிறம் சிவப்பு , இக்குணம் படைத்தவர் அகங்காரம் ஆணவம் உடன் இருப்பார் 


3 . தாமச குணம் - நிறம் கருப்பு , இவர்கள் அதிக உணவு சோம்பல் , நித்திரை , மிகுந்த கோபம் எதிலும் நிலை இன்மை உடையவர் .


விரகங்கள் 8  விளக்கம் :


1 . காமம் - அதிக ஆசை கொள்ளல் 


2 . குரோதம் - பகை கொள்ளல் , அன்பில்லாமை 


3 . லோபம் - பிறர்க்கு ஈயாதவர் , கருமி 


4 . மோகம் - பலவற்றிலும் ஆசைப்படுதல் 


5 . மதம் - பிறரை மதியாதிருத்தல் 


6 . மாச்சரியம் - மனதில் சதா விரோத எண்ணங்கள் 


7 . இடும்பை - எல்லோரையும் உதாசீனபடுத்துதல் 


8 . அஸ்சூயை - பொறாமைக்குணம் 


அவஸ்த்தைகள் 5 ஸ்தானங்கள் :


1 . சாக்கிரம் - லலாடஸ்தானம் - ஆக்ன்யா சக்கரம் 


2 . சொப்பனம் - கண்டஸ்தானம் - விசுத்தி சக்கரம் 


3 . சுழுப்தி - ஹிருதயஸ்தானம் - அனாஹதம் சக்கரம் 


4 . துரியம் - நாபிஸ்தானம் - மணிபூரகம் சக்கரம்

5 . துரியாதீதம் - குய்யஸ்தானம் - ஸ்வாதிஷ்டானம் , மூலாதாரம் சக்கரம்

மொத்தமாக 96 தத்துவங்கள் , இவை அனைத்தையும் அவர் அவர் அனுபவத்தில் உணர்ந்து அறிந்து தாண்டிய பிறகு , முக்தி என்னும் நிலைக்கு அடி எடுத்து வைக்கிறோம் .


-------------------------------------------------------

ஓம் போக பெருமானே போற்றி

ஓம் போக மகரிஷியே போற்றி

ஓம் போக முதல் சித்தரே போற்றி

ஓம் போக ஞான குருவே போற்றி

------------------------------------------------------

5 comments:

  1. நிறைய தகவல்களை ஒரே பதிவுல் தந்துவிட்டீர்கள். பொறுமையாக விளங்கிக் கொள்ள முயற்சி செய்கிறேன்.

    பகிர்வுக்கு மிக்க நன்றி..

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete
  2. I saw in a site that கரணம் 4 = சித்தம், மனம், அகங்காரம், புத்தி .....in this what is siddham?

    ReplyDelete
  3. நன்றி நன்றி மிக்க நன்றி குருவே சரணம்

    ReplyDelete
  4. மிக அருமையான சேவை நன்றி

    ReplyDelete