Friday, May 6, 2011

ஊதியூர்

ஊதியூர்

ஓம் குரு போகர் சரணாய நமஸ்து 
ஓம் குரு போகர் பாத கமலா சரணாய நமஸ்து 
ஓம் சர்வம் குரு போகர் சரணம் 

-------------------------------------------------------

ஓம் போக பெருமானே போற்றி

ஓம் போக மகரிஷியே போற்றி

ஓம் போக முதல் சித்தரே போற்றி

ஓம் போக ஞான குருவே போற்றி

-------------------------------------------------------



      ஊதியூர் கொங்கு மண்டலத்தில் அமைந்து உள்ள இன்னொரு அமைதியான ஆதி சித்தரின் (முருகர் )திருக்கோயில்.

ஐயனின் சீடருள் ஒருவரான கொங்கன சித்தர் வாசம் செய்த இடமாகும் , நூறு படிகளுக்கும் குறைவான உயரமுள்ள குன்று , பழனியில் உள்ள தண்டாயுதபாணியை போலவே இங்கும் தண்டத்துடன் கோவணாண்டியாக கட்சி அளிக்கிறார் ஆதி சித்தர் .

இந்த சிலை கொங்கன சித்தரால் வடிவமைக்கப்பட்டது என்று கூறுகிறார்கள் , அடியேனுக்கு இதுவும் நவபாஷான சிலையாக இருக்குமோ என்ற சந்தேகம் உண்டு . 

அருகில் ஒரு மையில் தொலைவில் கொங்கன சித்தர் தவம் புரிந்த குகையும் அதில் அவர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்கமும் உள்ளது , ஜன சஞ்சாரம் முற்றிலும் அற்ற இடம் . நீண்ட நேரம் தபோ நிஷ்டை கொள்ள ஏற்ற இடம் .
ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் இங்கு பக்தர்கள் கூடி மூலிகை ரசத்தை காச்சி
எல்லோருக்கும் அளிப்பதாக கேள்வி , அடியேன் நேரில் கண்டது இல்லை , அன்பர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும் , முடிந்தவர்கள் சென்று வாருங்கள் , மன்னிக்கவும் ரசத்தை அருந்தி வாருங்கள் .

கிட்டத்தட்ட மூன்றாவது பயணத்தில் தான் என்னால் இந்த கோயிலுக்குள் செல்லவே முடிந்தது , அவ்வளவு கர்ம வினைபோல எனக்கு , முதல் முறை இங்கு செல்ல நினைத்து , நண்பர் சதுரகிரி பிரபாகரை அழைத்துக்கொண்டு , இருவரும் வெள்ள கோயிலில் இருந்து புறப்பட்டோம் , காங்கேயம் அருகில் சென்று கொண்டு இருந்த பொழுது , நண்பர் திடீர் என்று வண்டியை நிறுத்த சொல்லி ஒரு பள்ளத்தில் விட சொன்னார் , எனக்கு ஒன்றும் புரியவில்லை , சரி என்று பள்ளத்தில் இறக்கி நிறுத்திய பொழுது , எதிரில் ஒரு வயதான நபர் , சிறிது சடை முடியுடனும் , அழுக்கு வேட்டி , சட்டை அணிந்து இருந்தார் , அவரிடம் இரண்டு நபர்கள் ஏதோ கேட்டுக்கொண்டு இருந்தார்கள் , அவரை சுற்றி நிறைய உணவு பொட்டலங்களும் , தண்ணீர் பாட்டில்களும் கிடந்தது , அருகில் சாக்காடை , மனிதர் எதை பற்றியும் கவலை படாமல் பரமானந்தமாக அமர்ந்துகொண்டு சிரித்துக்கொண்டு இருந்தார் , அவரிடம் ஒரு மத்திம வயதுள்ள பெண் தன் மகனுக்கு எப்பொழுது திருமணம் நடக்கும் என்று கேட்டுக்கொண்டு இருந்தார் .



நான் நண்பர் பிரபாகரை பார்த்து , யார் தலைவரே இவர் , பார்பதற்கு ஒரு மார்க்கமாக இருக்கிறார் என்று வினவினேன் , நண்பர் அமைதியாக இருக்கவும் , இவரும் ஒரு யோகி என்று அமைதியாக சொல்லிவிட்டு அவரை வணங்க ஆரம்பித்தார் . 

நான் சிறிது நேரம் அவர் அருகில் நின்றுகொண்டு இருந்தேன் , பிறகு ஒரு உந்துதலின் பேரில் அவரின் அருகில் அமர்ந்தேன் , அவர் சாக்கடையில் படுத்துக்கிடந்தாலும் , அவர் மேல் எந்தவிதமான அருவருக்கத்தக்க வாடையும்  வீச வில்லை , அமர்ந்து சிறிது நேரத்தில் சமந்தமே இல்லாமல் சரத்தை பற்றி பேச ஆரம்பித்தார் , என்ன இவர் திடீர் என்று வேறு எதை பற்றியோ பேசுகிறாரே  , என்று யோசிக்க ஆரம்பித்தால் , மேலும் விரலின் உதவிகளால் சுவாசத்தை மாற்ற ஆரம்பித்தார் , இடைகளையில் சுவாசத்தை வைத்துக்கொண்டு , நானும் இப்போது பெண் தான் என்றார் , எனக்கு நன்றாகவே புரிந்தது அவர் என்ன சொல்ல வருகிறார் என்று .

சரி இதற்க்கு மேலும் சும்மா உட்கார்ந்து இருப்பது தவறு என்று நினைத்து , அவரிடம் ஆசீர்வாதம் வாங்க குனிந்தது தான் தாமதம் , அவர் என் தலையில் கை வைத்தார் , அப்பா உடம்பு முழுவதும் ஒரு மிக பெரிய அதிர்வு சில வினாடிகள் , உடம்பு அதிர்ந்து விட்டது , சிறிது நேரம் அவரிடம் பேசிக்கொண்டு இருந்து விட்டு கோயிலுக்கு செல்ல அனுமதி கேட்டோம் , அவரும் சிறிது நேரம் இரு , சிறிது நேரம் இரு என்று சொல்லிவிட்டு , இருட்டும் வேலையில் விடை கொடுத்து அனுப்பினார் , போகும் பொழுது மீண்டும் அடுத்த வாரம் வந்து பார்க்கும் படி பணித்தார் அந்த வாசி யோகி .

இருட்டும் வேலையில் ஊதியுறை நோக்கி மீதம் இருக்கும் இருபது கிலோமீட்டர் தூரத்தை அவசர அவசரமாக கடந்தோம் , நேராக கொங்கன சித்தரின் குகை நோக்கி எங்கள் இருசக்கர வாகனத்தை செலுத்தினோம் , ஓற்றை அடி பாதையில் எவ்வளவு தூரம் செல்ல முடியுமோ அவ்வளவு தூரம் சென்று வண்டியை லாக் செய்து விட்டு , கரடு முரடான மலை பாதையில் ஏற ஆரம்பித்தோம் , சுமார் பதினைந்து நிமிட நடையில் வந்தது கொங்கன சித்தரின்  குகை , குகையை பார்த்தவுடன் ஒரு சிறிய அதிர்ச்சி , காரணம் சதுரகிரியில் அய்யன் போகர் முதல் சித்தரின்  குகை , காலங்கி ஐயாவின் குகை , சுருளியில் உள்ள ஐயனின் குகை மேலும் நான் பார்த்த திருமூலர் வழித்தோன்றல் சித்தர்களின் குகைகள் அனைத்துடனும் இந்த குகையின் தோற்றமும் ஒத்துப்போனது , நன்கு நிசப்தமான ஒரு சூழல் , சுற்றிலும் ஆள் அரவம் இல்லை , அப்படியே அந்த அமைதியான சூழலுக்கு ஏற்ப மனதும் உலகாய விஷயங்களில் இருந்து வெளிவந்து அமைதியான நிலைக்கு சென்றது , குகை உள்ளே சென்று அங்கு இருக்கும் லிங்கத்தை வணங்கி சிறிது நேரம் அமர்ந்தோம் , சிறிது நேரத்தில் மனதில் இருந்த அமைதியான சூழலும் மாறி அதற்க்கு அப்பால் உள்ள ஏதோ ஒரு இடத்திற்கு பயணப்பட்டது .

கொங்கன சித்தரின் குகை - ஊதியூர்


நண்பர் நேரம் முழுக்க  இருட்டி விட்ட காரணத்தால் என்னை இறங்கும் படி சொன்னார் , ஹ்ம்ம் வேறு வழி இல்லாமல் திரும்பவும் உலக கடமைகளுக்காக  கீழ் இறங்க ஆரம்பித்தோம் . திரும்பும் பொழுது நல்ல மழை , கிட்ட தட்ட ஐந்து , ஆறு மணி நேரம் விடாமல் மழை பெய்து கொண்டு இருந்தது , பொதுவாக இதை போன்ற மழைகாலங்களில் ஹெல்மெட் அணிந்து கொண்டு மழையில் நனைந்து கொண்டு செல்வது எனக்கு பிடித்த விஷயம் என்பதால் நன்றாக அனுபவிக்க முடிந்தது . ஆனால் ஊதியூர் முருகர் கோயிலை சென்று தரிசிக்க முடியவில்லை , கோயில் துப்புரவாக பூட்டி இருந்தது 

இரண்டாவது நாள் , மீண்டும் இருவரும் சென்றோம் ஊதி அப்பனை தரிசனம் செய்ய , இன்றும் கோயில் பூட்டியே கிடந்தது , கோயிலுக்கு வெளியில் கோடி கம்பத்து அருகில் சிறிது நேரம் அமைதியாக அமர்ந்து விட்டு மீண்டும் நாளை வருவதாக தீர்மானம் செய்து கொண்டு கிளம்பினோம் , இன்றும் நல்ல மழை பெய்ய ஆரம்பித்தது .

மூன்றாவது நாள் வீட்டில் இருந்து கிளம்பும் முன் நண்பருக்கு கால் செய்து வரும்படி அழைத்தேன் , அவருக்கு முக்கிய அலுவல் சிலது இருந்ததால் அவரால் வர இயிலவில்லை என்றார் , சரி நாளை செல்லாம் என்று நானும் அலுவலக வேலைகளை பார்க்க ஆரம்பித்து விட்டேன் , மனம் அதில் முழுமையாக நிலைக்க வில்லை , எதை செய்தாலும் அதை முழுக்க செய்தால் தான் எனக்கு திருப்தியாக இருக்கும் , அதனால் ஊதியுருக்கு செல்ல தீர்மானித்து செல்ல ஆரம்பித்தேன் , மூன்றாவது நாள் , இன்றாவது அவரின் தரிசனம் கிடைக்குமா என்ற கேள்வி மனதில் .

மணி ஒரு ஐந்தரை இருக்கும் , மலை மேல் செல்லும் பொழுது , கோயில் கதவு இன்றும் சாத்தியே இருந்தது , என்ன முருகா இன்னைக்கும் சாத்தி இருக்கு , அவ்ளோ கர்மம் என்ன பிடிச்சு இருக்கானு கேட்டுட்டு கோயில் கதவு கிட்ட போய் பாத்தா பூட்டு போடாம சும்மா சாத்தி இருந்தது , சரி முயற்சி பண்ணி பாப்போம்னு கதவ கொஞ்சம் போல தள்ளினேன் , திறந்தது .










கோயில் , கோயிலை போலவே வெகு சுத்தமாக , மிக மிக அழகாக , சரியான வரையறையுடன் இருந்தது , கைகள் சும்மா இருக்குமா என்ன , ஐயனிடம் உத்தரவு கேட்டுக்கொண்டு , கைகூப்பி வணங்கி விட்டு போடோக்களை எடுக்க ஆரம்பித்தேன் , பின்னால் அமைதியாக ஒரு உருவம் வந்து நின்றது , யார் என்று திரும்பி பார்த்தால் அந்த கோயில் குருக்கள் , பரஸ்பரம் அறிமுகத்திற்கு பிறகு அவர் மூலஸ்தானத்திற்கு அழைத்து சென்றார் , அவ்வளவு அழகான முகம் இந்த ஆதி சித்தருக்கு , மனதை கஷ்டப்பட்டு அவரிடம் செலுத்த தேவை இல்லை , மனம் தானாகவே அவரிடம் லயித்து விடும் அப்படி ஒரு ஈர்ப்பு .

தீபாராதனை காட்டி வணங்கி   விட்டு , குருக்களிடம் பேச ஆரம்பித்தேன் , இந்த கோயில் நன்றாக பராமரிக்கப்படுகிறதே , எத்தனை நபர்கள் இங்கு வேலை பார்கிறீர்கள் என்று கேட்டேன் , அவர் பதில் ஆச்சரியமும் , அதிர்ச்சியும் அளித்தது , காரணம் அவர் ஒருவர் மட்டுமே அந்த கோயிலை பராமரித்துக்கொண்டு இருக்கிறார் , நீங்களும் ஒருமுறை சென்று பாருங்கள் நான் ஆச்சரியபட்டதில் எந்த அதிசயமும் இல்லை என்பீர்கள் .

இந்த கோயில் வருமானத்தை நம்பியே அவரின் மொத்த குடும்பமும் உள்ளது என்பது மிக மிக வருத்தத்தில் ஆழ்த்தியது என்னை , காரணம் இங்கு வருகை தரும்  நபர்கள் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு பேர் மட்டுமே , அவர்களும் தக்ஷனை போடுவார்களா என்பது சொல்லமுடியாது , அவரின் நிலை எனக்கு மிகுந்த வருத்தத்தை தருவதாக கூறினேன் , ஆனால் அவர் மிக மிக சாதரணமாக அழகாக சிரித்துக்கொண்டு , இது சித்தர்கள் வாசம் செய்யும் பூமி , இங்க இப்படி தான் இருக்கும் , நாம கூடம் கூட்டவோ , வருமானத்தையோ எதிர் பார்க்க கூடாது , அவாளுக்கு சேவை செய்றதே பெரிய  பாகியம்னார் பாருங்க , இத என்னனு சொல்றது .

----------------------------------------------------------------------------------------------------------

திருப்புகழ் - அருணகிரிநாதர் - ஊதியூர் முருகரை பற்றி 

¬¾¢Á¸ Á¡Â¢ Âõ¨À §¾Å¢º¢Å É¡÷Á ¸¢úó¾
     ¬×¨¼Â Á¡Ð ¾ó¾ ...... ÌÁ§Ãº¡ 

¬¾ÃÅ ¾¡öÅ Õó¾¢ Â¡¾¢ÂÕ §½º ¦ÃýÚ
     ¬Ù §ÂÅ ½í¸ ...... «ÕûÅ¡§Â 

â¾ÁÐ Å¡É ¨ÅóÐ §À¾Á¢¼ §Å ¨ÄóÐ
     âýº¢ Å¡¸ Áí¸ ...... ÇȢ¡§¾ 

âÏ Á¡¾÷ ¾í¸û ¬¨ºÅ¨¸ §Â¿¢ ¨ÉóÐ
     §À¡¸ÓÈ §ÅÅ¢ ÕõÒ ...... Áʧ¨ɠ

¿£¾ÂÅ ¾¡Â¢ Ãí¸¢ §¿ºÅÕ §ÇÒ ¡¢óÐ
     ¿£¾¢¦¿È¢ §ÂÅ¢ Çí¸ ...... ×À§¾º 

§¿÷¨Áº¢Å É¡÷¾¢ ¸úó¾ ¸¡¾¢Ö¨Ã §Å¾ ÁóòÃ
     ¿£ÄÁ¢ §ÄÈ¢ Åó¾ ...... ÅʧÅÄ¡ 

µÐÁ¨È ¡¸ Á了¡ø §Â¡¸ÁÐ §ÅÒ ¡¢óÐ
     °Æ¢Ô½÷ Å¡÷¸û ¾í¸û ...... Å¢¨É¾£Ã 

°ÛÓ¢ áöÅ Ç÷óÐ µ¨ºÔ¼ý Å¡ú× ¾ó¾
     °¾¢Á¨Ä Á£Ð ¸ó¾ ...... ¦ÀÕÁ¡§Ç.



§¸¡¾¢ ÓÊòÐì ¸Éò¾ ¦¸¡ñ¨¼Â÷
     ÝРŢ¾òÐì ¸¢¾òÐ Áí¨¸Â÷
          ÜÊ «üÀî ͸ò¨¾ ¦¿ïº¢É¢ø ...... ¿¢¨É¡§¾
 

§¸¡¨Æ ÁÉò¨¾ì ¦¸ÎòÐ ÅýÒÄ
     »¡É ̽ò¨¾ì ¦¸¡ÎòÐ ¿¢ý¦ºÂø
          ÜÚ Á¢¼òÐì ¸¢¾òÐ ¿¢ýÈÕû ...... Ò¡¢Å¡§Â
 

¿¡¾ ¿¢¨ÄìÌð ¸ÕòÐ ¸ó¾Õû
     §À¡¾¸ Áü¦Èî º¸ò¨¾ Ôó¾Õ
          ¿¡ýÓ¸ ÛìÌì ¸¢ÇòÐ ¾ó¨¾Â¢ý ...... ÁÕ§¸¡§É
 

¿¡Î Á¸ò¦¾ü ¸¢Îì¸ñ Åó¾Ð
     ¾£¡¢Î ¾üÌô À¾ò¨¾ Ôó¾Õ
          ¿¡Â¸÷ ÒòÃì ÌÕì¸ ¦ÇýÈÕû ...... ÅʧÅÄ¡
 

§¾¡¾¢Á¢ ¾¢ò¾¢ò ¾¢Á¢ò¾ ÊíÌÌ
     ËÌÌ ÊìÌð ÊÌìÌ ÊñÊÁ¢
          §¾¡¾¢Á¢ ¾¢ò¾¢ò ¾Éò¾ ¾ó¾¦Å ...... É¢¨º§Â¡§¼
 

ÝÆ ¿ÊòÐî º¼ò¾¢ø ¿¢ýÚ¢
     Ã¡É ÐÈò¾ü ¸¢Ãì¸ ÓïÍÀ
          §º¡ÀÉ Óöì¸ì ¸ÕòÐõ Åó¾Õû ...... Ò¡¢§Å¡§É
 

µ¾ ¦ÅØòÐì ¸¼ì¸ ÓﺢÅ
     ¸¡Ã½ Àò¾÷ì ¸¢Ãì¸ Óó¾Ì
µ¦Á ¦ÉØòÐì Ì¢÷ôÒ ¦Áýͼ ...... ¦Ã¡Ç¢§Â¡§É 



µ¾¢ ¢½÷ò¾¢ì ̨¸ì¸¢ Îí¸É
     ¸¡Àà ½ò¾¢ü ¦À¡Õð ÀÂýÈÕ
          °¾¢ ¸¢¡¢ìÌð ¸ÕòÐ ¸ó¾Õû ...... ¦ÀÕÁ¡§Ç.
 

----------------------------------------------------------------------------------------


----------------------------------------------------------
ஓம் குரு போகர் சரணம் 
ஓம் குரு போகர் பாதகமல சரணாய நமஸ்து 
ஓம் சர்வம் குரு போகர் பாத கமலா சரணம் 

-------------------------------------------------------

ஓம் போக பெருமானே போற்றி

ஓம் போக மகரிஷியே போற்றி

ஓம் போக முதல் சித்தரே போற்றி

ஓம் போக ஞான குருவே போற்றி

------------------------------------------------------- 

12 comments:

  1. கொடுத்து வைத்தவரையா நீவீர். அனுபவிக்கிறீர். ஹ்ம் கர்ம வினை எல்லாம் எங்க கிட்டதான் இருக்கு.

    மிக்க நன்றி photo எல்லாம் போட்டு இருக்கீங்க, கலக்கல். மிக்க நன்றி

    ReplyDelete
  2. Dear Bhogare,

    Did you visit the Chetty Thambiran cave around the hill temple. Just go through this link.
    https://picasaweb.google.com/ambasoft/Oothiyur#

    ReplyDelete
  3. cha shankar athellaam onnum illai unkalukku paakyam so neenga avarta aasivaathan vanginathu

    ReplyDelete
  4. eptio ennai vittutu marubadium oodhiyur poi irupinga pola
    adutha dhadavai pona koopitunga shankar

    ReplyDelete
  5. arumaiyana pathivu.
    ohmsivasivaohm

    ReplyDelete
  6. ippadiellam oru thagavallai padikka vaaippu kiddaitharku iraivanukum ungalaukum nandri

    ReplyDelete
  7. Can you please let me know exactly where near Kankeyam you met that 'yogi'...it will be of great help!

    ReplyDelete
  8. ஊதியூர் antha yogi ierkum edam solla mudiyumma antha orr name enna

    ReplyDelete
  9. prabakar.l.n and Bhogar sir unga phone no kongam kodunga sir antha yogi pathi kongam solunga antha orr enganu solunga sir please my

    ReplyDelete
  10. thanks for the post... one month before i visited that place...
    Amazing...
    http://spiritualcbe.blogspot.in/2012/12/blog-post.html

    Regards,
    Saravanakumar.B
    http://spiritualcbe.blogspot.in/

    ReplyDelete